ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஜெ ஜெ சில குறிப்புகள்.....


Image result for jayalalitha pictures
சற்று காலதாமதமாக எழுதுவதால் இந்தத் தலைப்பு உட்பட அனைத்தும் எழுதப்பட்டுவிட்டது..  ஜெ யைப் பற்றி பல பேட்டிகள் கட்டுரைகள் காட்சி ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் என்று எழுதிக் குவிக்கப்பட்டுள்ளது..  அதில் முற்போக்கு பிற்போக்கு சாதியவாதம் மதவாதக் கருத்துக்கள் இடது சாரி பார்வை என்று கொட்டிக் கிடக்கிறது

இவற்றில் எது உண்மை ... வழக்கப்படி காலம் பதில் கூறும்...

என்னைப் பொருத்தவரை முதலில் ஜெ இறந்தார் என்பதையே நம்ப முடியவில்லை.. கடந்த ஆகஸ்ட் மாதம்கூட அவர் பேட்டியை பார்க்க நேர்ந்தது...  உடல் ரீதியாக எந்த வித கோளாறு இருந்ததாக தெரியவில்லை.. அப்படி ஒரு தகவலும் இருப்பதாகவும் தெரியவில்லை....

பொதுவாகவே பெண் என்பதாலும் அவர் சுபாவத்தாலும் அவரைப் பற்றிய எந்த வித செய்திகள் வருவதை விரும்பதாக நபர் தான் அவர்   என்பது தற்போது புரிகிறது..  75 நாட்கள் சிகிச்சை பெற என்ன காரணம் என்பது பற்றி கௌதமி கூட கேள்விகள் எழுப்பும் அலங்கோலம் நடைபெறுகிறது..

உண்மையில் அப்போலோ நிர்வாகம் ரிச்சர்ட் பேலே போன்றவர்கள் பொய்கள் கூற என்ன அவசியம் .. அவர்களை நம்ப மாட்டேன் என்பதும் ஏற்றக்  கொள்ள மாட்டேன் என்பதும் புரியவில்லை..     சி ஆர் சரஸ்வதி கூறியபடி ஜெயலலிதா   தன்னைப் பற்றியோ தன் உடல்நிலை பற்றியோ     பிறர் தெரிந்து கொள்ள விருப்பப்பட்டிருக்க மாட்டார்.. சி ஆர் சரஸ்வதி சொல்வதில் நியாயம் இருப்பதைப் போலவே தோன்றுகிறது... ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்தானே..

மற்றபடி ஜெ என்றதும் நினைவுக்கு வருவது... அதிகாரம்.. போலீஸ் ... இதுதான் அவர் ஆட்சி முறை...

ஆனால் பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு கணிசமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதன் காரணம் என்ன உளவியல் என்பது ஆராயப்பட வேண்டும்..  சாதாரண சாமானிய மக்கள் ஜெ மேல் அதீத பாசம் வைத்திருப்பதும் என்ன வித உளவியல் என்பது புரியவில்லை... இத்தனைக்கும் அவர் ஏழைகளின் தலைவர் என்பதை அதிமுக வேண்டுமானாலும் சொல்லலாம்... அவற்றில் சற்றும் உண்மையில்லை..

ஜெ யின் வாழ்க்கை என்பது BORN WITH SILVER SPOON  OR EVEN GOLDEN SPOON என்றுதான் சொல்ல வேண்டும்.. அவரே சட்டசபையில் அப்படி சொன்னதாக நினைவு ... ஏழைப் பங்காளன் ஏழைகளின் ராபின்வுட் என்பதெல்லாம் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்வதுதான்.  சற்று நகைச்சுவையாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..

அவரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில்தான் சிதம்பரம் பத்மினி பாலியில் கொடுமை வாச்சாத்தி கொடுமை போலீஸ் கெடுபிடி போன்றவை நடந்தன.. ஆனால் அவற்றை பற்றி அவர் ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.. மாறாக இவற்றையெல்லாம் கண்டு கொள்ளத் தேவையில்லை என்றே கூறியிருந்தார்..    நீதியரசர் லட்சுமணன் மகன் மேல் வழக்கு பதிவு செய்ய அவர்  ஜெக்கு எதிரான வழக்கை எடுக்கவே மறுத்தார்

 அவரின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் மற்றும் சாலைப் பணியாளர் வேலையிழப்பும் நடந்தன..   செரினா  என்கிற பெண்ணின் மேல் கஞ்சா வழக்கு போன்றவை    அவர் ஆட்சியில் இல்லாத போதும்   மனதை பதைபதைக்க வைக்கும்  தர்மபுரி பஸ் எரிப்புக் கொடுமை சகிக்க முடியாமல் நடந்தது

 மூன்றாவது முறை  ஆட்சியின் போது  கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தடை   விஜய்யின் தலைவா படத்திற்கும் பிரச்சனை போன்றவை நடந்தன
அதே சமயம் ஜெயந்திரன் வழக்கு கலைஞரே தயங்கும் ராஜீவ்  கொலைக் குற்றவாளிக்கு ஆதரவான விடுதலை  சட்டசபை தீர்மானம்போன்றவை கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது..

ஆகச் சிறந்த ஆட்சி என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அவரின் சமீப கால ஆட்சியில் சற்றே mend ஆகியிருந்ததாகவே தெரிந்தது.. அவரின் மரணம் எதிர்பாராதது தீடீரென்று நிகழ்ந்துள்ளது..

எம்ஜியாரால் அரசியலில்  அறிமுகப்படுத்தப்படும் முன்பு ஒருவட இந்திய பத்திரிகை ”சான்ஸ் இல்லாத நடிகை”  என்று கேலி பேசியிருந்தது.. அதைப் பற்றி அவரே கைப்பட எழுதியிருந்த கடிதத்தில் தான் ராணி போல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்...

ஆக அவர் கூற்றின்படி
அவர் ராணியாகவே வாழ்ந்தார் ராணியாகவே மறைந்தார்... 

வெள்ளி, 18 நவம்பர், 2016

அறுவை சிகிச்சை வெற்றிதான்.. ஆனால்...

சில  வாரங்களுக்கு முன்பு ஒரு வங்கிப் பெண் ஊழியர் மெதுவாக வேலை செய்யும் காட்சியை தனது தளத்தில் போட்ட ஜெயமோகன் அதை உடனடியாக எடுத்துவிட்டார்.. 

ஞாயிறு, 13 நவம்பர், 2016

சரியா தவறா..?

500 /1000 ரூபாய் விவகாரம் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது… சரியா தவறா என்கிற விவாதம்  பெருமளவில் காட்சி ஊடகங்களில் பேச்சுப் பொருளாக நடைபெற்று வருகிறது..

புதன், 9 நவம்பர், 2016

உலகெங்கும் வலதுசாரிப் புயல் ...

வலதுசாரிகள் செல்வாக்கு உலகெங்கும் பட்டொளி வீசிப் பறந்து வருகிறது என்பதை ட்ரம்ப் வெற்றி DRUM அடித்து சொல்கிறது...   

திங்கள், 24 அக்டோபர், 2016

உலக அதிபர் (?) போட்டி...

என்றுமில்லாத வகையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டி விசித்திரமாகச் சென்று கொண்டிருக்கிறது..  ஹிலாரி ட்ரம்ப் போட்டி என்பது   ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமிடையே போட்டி என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறது..

ஆரம்பத்திலிருந்து ட்ரம்ப் பற்றி வந்த செய்திகள் வினோதமானவை.. முதலில் இந்தியர்களை கேலி செய்து பேசினார்.. முஸ்லிம் மக்களை இருக்க விடமாட்டேன் என்றார்.. தற்போது ஒரு பெண் அதிபரானால் ராணுவம் எப்படி சல்யூட் அடிக்கும் என்கிற படு மோசமான பிற்போக்கு வாதத்தை உதிக்கிறார்...  பொதுவாக அமெரிக்கா ஜனநாயகம் பரந்துபட்ட மக்களுக்கானாது என்றாலும் அவற்றில் தீவிர வலதுசாரி அம்சம் சற்று உறுத்தும்.. அதிலும் அடிப்படை மதவாதக் கருத்துக்கள் அதிகம் என்கிறார்கள்.. மேலும் ட்ரம்பின் வயது 70.. அவர் நிச்சயம் 15 வயதில் மதவாதக் கருத்துக்களுக்கு ஆளானாவர் என்பது அவரின் தற்போதையே பேச்சில் தெளிவாகத் தெரிகிறது...  லிங்கன் வழிவந்தவரா இவர் என்கிற எண்ணத் தோன்றுகிறது...
Image result for hillary and trump photos

அமெரிக்கா தன்னுடைய   அதிபரை    ஏறத்தாழ உலக அதிபர் என்கிற நிலையில்தான் நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது.  உலகெங்கும் கம்யூனிச அரசுகள் மண்ணைக் கவ்வியவுடன் அமெரிக்கா மேலும் அனைவர் மேல் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறது... இந்நிலையில் ட்ரம்ப் போன்ற குடியரசு கட்சியின் வேட்பாளர்களின் பேச்சுக்களின் தொனி சற்று விசித்திரமாகவும் ஆபத்தாகவும்தான் உள்ளது.. ஹிலாரி ஈமெயில்களை அழித்தார் போன்ற புகார்கள் இருந்தாலும்     ட்ரம்பின் எதிர்மறை அம்சத்தாலேயே ஹிலாரி   வெற்றி பெற்றுவிடுவார் போல் உள்ளது.. .

இந்தியாவை பலர் படு பிற்போக்கு நாடு என்றும் மத நம்பிக்கை       பெண்ணடிமைத்தனம் நிறைந்த நாடு என்றுதான் பலர் கூறுகிறார்கள்.. ஆனால் இப்படிப்பட்ட நாட்டில்தான் ஒரு பெண் விதவை  - நேரு சாஸ்த்ரிக்குப் பிறகு - சர்வ வல்லமை பொருந்தியவராக பெரிய தலைவராக இருந்திருக்கிறார்.. அதை சராசரி இந்திய மனம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

செவ்வாய், 4 அக்டோபர், 2016

தண்ணிரில் தள்ளாடும் உண்மை...

பல் இளித்துவிட்டது  நமது ஓட்டு வங்கி அரசியல்... ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கக் கூடிய அம்சம் இப்படி பலவீனமான போனது வரலாற்றுச் சோகம்தான்... 

 காவிரி விஷயத்தில் உண்மையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தவிர்த்து எந்தக் கட்சிக்கும் ஆத்மார்த்தமான நிலைபாடே கிடையாது.. எப்படி அரசியல் பண்ணலாம்.. என்ன லாபம் கிடைக்கும் என்பதையே குறிக்கோளாகச் செயல்படும் ஓட்டுக் கட்சிகள் சுயலாபத்தைத்தான் பார்ப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது..  இந்த ஓட்டரசியல் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவைக்கவில்லை.. அவர்களாலும் தமிழகத்தில் ஒரு நிலைபாடும் கர்நாடகத்தில் ஒரு நிலைபாடும்தான் எடுக்க முடிகிறது... 

இதை வைத்து சீமான்கள் வளர ஒரு ராஜபாட்டை வேறு  போட்டுவிட்டார்கள்...  அனைத்து கட்சிகளும் அவரவர்கள் அரசியல் லாபம் பார்த்து விட்டார்கள்..

மீண்டும் உண்மை தனித்து விடப்பட்டிருக்கிறது...


வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சரியான பதிலடிதான்..

காஷ்மீர் மாநிலம், யூரியில் சமீபத்தில், அதிகாலை வேளையில் தூங்கிக்கொண்டிருந்த  நமது ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான்  ஆதரவுத் தீவிரவாதிகள்     தாக்குதல் நடத்தியது படு கேவலமானது.

இந்தத் தீவிரவாதிகள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்  கருத்தில்லை..   அநியாயமாக  நமது 18 ராணுவ வீரர்களை பலி கொடுக்க  நேர்ந்துவிட்டது,,

அதற்கு பதிலடியாக நேற்று நமது ராணுவ வீரர்கள் POKயில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்திருக்கிறார்கள்.. அதில் பாக் ராணுவ வீரர்களும் உண்டு..

ஏற்கனவே சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காததால் சார்க் மாநாடே காலியானது.. இத்தனை பட்டும் பாக் திருந்தாமல் காஷ்மீரத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறது..

நேற்று நமது வீரர்கள் நடத்திய பதில் தாக்குதல் போன்ற மொழிகள்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதை தொடர்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றே தோன்றுகிறது..
                                   

திங்கள், 19 செப்டம்பர், 2016

என்னத்தை சொல்ல...?

எதையும் சந்தேகத்திற்கிடமில்லாமல் நீரூபிக்க வேண்டும்… நீதிமன்றம் அப்படி இல்லாவிட்டால் முற்றிலுமாக நிராகரித்துவிடும்… அப்படி செய்ய முடியாத சூழலில் இப்படித்தான் எதிர்கொள்ள வேண்டுமா…,?

நம்முடைய புலனாய்வு ஒரு காலத்தில் பிரமாதமாகப் பேசப்பட்டது…  தற்போது இந்தத் துறை மட்டுமல்ல எல்லா  துறையும் பின்னடைவாகத்தான் இருக்கிறது… காரணம்…

அதிகார துஷ்பிரயோகம்..
லஞ்ச லாவண்யம்..
மெத்தனம்… அசிரத்தை..
அரசியல் தலையீடு..
சாதிப்பாகுபாடு..

இத்தனையும் மீறித்தான் நாம் வாழவேண்டியிருக்கிறது…  சில சமயங்களில் சில நல்ல விஷயங்களும் நடக்கிறது…


நான் எதை குறிப்பிடுகிறேன் என்று தெரிகிறதா… காவிரி பிரச்சனையைத்தான் சொல்கிறேன்… நீங்கள் வேறு எதையும் முடிச்சுப் போட்டுக் கொள்ளாதீர்கள்…

வியாழன், 8 செப்டம்பர், 2016

இதை எந்தக் கணக்கில் சேர்ப்பது...?

இன்று டெல்லியில் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து காஷ்மீர் பிரச்சனையை விவாதித்தார்கள்..

அனைவரும் - கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்த்து - ஒருமித்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் வரும் எந்த முடிவையும் ஆதரிக்க முடியாது என்று கூட்டு முடிவை எடுத்திருக்கிறார்கள்..

உண்மையில் ஆதரிக்கப்பட வேண்டிய செய்திதான் ..

ஆனால் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் அளவிற்கு மாண்டியாவில் கூடிய கன்னட வெறி அமைப்பினர் காவிரி தாவாவின் உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்காமல், தமிழக லாரிகளை அடித்து நொறுக்குவதும்  சாலைகளை துண்டிப்பதும்  தொடர் பந்த் செய்வதும் முதலில் நிறுத்த வேண்டிய அவசியம் உள்ளதா இல்லையா என்பதை அதே தேசிய கட்சிகள் கூற வேண்டும்,,,,

செய்வார்களா...? 

சனி, 6 ஆகஸ்ட், 2016

நம்மிடம்தான் பிரச்சனை....

தமிழ்மணத்தின் பல ஆண்டு கால வாசகன் நான்..  ஆனால் வலை தளம் தொடங்கியது மே 2013தான்… 

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

தையலை உயர்வு செய்கிறாயோ இல்லையோ... காப்பாற்று....

தஞ்சை அருகே இளம் பெண் கற்பழித்துக் கொலை...
விழுப்புரம் அருகே இளம் பெண் மண்ணென்ணை ஊற்றிக் கொலை...
வட இந்தியாவில் டெல்லி கான்பூர் பிரதான சாலையில் காவல் நிலையம் அருகே தாயும் மகளும் கற்பழிப்பு....

உண்மையில் உலகெங்கும் அதிகம் கற்பழிப்பு நடக்கும் நாடு நமது நாடுதானா... ( இதில் முதல் இரண்டு ரேங்கா... கேவலம்..)...

என்ன ஆயிற்று நம் நாட்டு ஆண்களுக்கு... உண்மையில் ஏதோ போதாமை குறைபாடு இருக்கும்... உடனடியாக ஒரு கவுன்சலிங் அனைத்து தரப்பு ஆண்களுக்குத் தர வேண்டும் என்றே தோன்றுகிறது...

ஊடகம் பெருகியதால் இத்தனை செய்திகள் என்பதில் ஒரளவு உண்மைதான்... முன்பு நடந்ததை வெளிக் கொண்டு வராத காரணத்தால் இதைப் பற்றி நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை....

ஆனால் உண்மையில் உடனடியாக ஒரு நல்ல கல்வி ஆண்களுக்கு அவசியம்... பெண்கள் என்றால் சக மனிதர்கள்தான் என்று....

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

கபாலிடா.....(ன்)

தற்போதுதான் கபாலி பார்க்க முடிந்தது... மிகப் பெரிய வணிகப் புயல் வணிக சுனாமியால் உடனடியாகப் பார்க்க இயவில்லை....
Image result for kabali


ரஜினி, ரஞ்ஜித், தலித் அடையாளம், பெரும் பட்ஜெட் என்று மாறி மாறி ரஜினியின் எந்தப் படத்திற்குமில்லாத ஒரு ஹைப்  இந்தப் படத்திற்கு        உருவாகிவிட்டது... ஒரு சாதாரண ஆனால்உ ண்மையான ரஜினி ரசிகனால் படத்தை பார்க்க முடியாமல் ITகாரர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள் என்கிற குற்றச் சாட்டை வினவு உட்பட பல ஊடகங்கள்  ஆதாரத்துடன்    வெளியிட்டன... 

எல்லாம் ஒரு புறம் இருக்க...

ஒரு படத்தை படமாகப் பார்க்க வேண்டும் என்று பார்த்தால், இந்தப் படம் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவுக்கே வர முடியவில்லை... ஒரு புறம் ரஞ்ஜித் என்கிற புதுமை இயக்குனர்....... மெட்ராஸ் என்கிற கலைப்படைப்பை தந்தவர். 

மறுபெரும் ரஜினி என்கிற பெரிய பிம்பம்...  இன்ன பிற பிரபல நடிகரைவிட          உண்மையில் ரஜினி முறைப்படி நடிப்புக் கலையை பயின்றவர்... அவரின் உண்மையான திறமையை இது வரை  எந்தப் படமும்  வெளிக் கொண்டு வரவில்லை என்பதுதான் என் எண்ணம் ... காரணம் அவர் விரும்பியோ விரும்பாமல் அவரைத் தொடர்ந்த அந்த மாஸ் ஒளிவட்டம் ...   

அதையும் மீறி   ரஞ்ஜித்  கலைப் படமாக்க முயற்சித்திருக்கிறார்... ஆனால் வெற்றி பெற வில்லை என்பதுதான் உண்மை...  ஆக கலைப் படத்திற்கும் மசாலாவிற்கும் இடையே படம் அல்லாடுகிறது...

இன்னமும் முயற்சி தேவை ......



வியாழன், 28 ஜூலை, 2016

ஞானக் கூத்தன் மறைவு...



Image result for ஞானக் கூத்தன் படம்


கவிஞர் ஞானக் கூத்தன் மறைவு அதிர்ச்சியாக இருந்தது... 
அவரைப் பற்றியும் அவர் கவிதைகள் பற்றியும்  சில வருடங்களாகத்தான் அறிமுகம்....
அவர் கவிதைகள் படிக்க படிக்கத்தான் வாழ்க்கையின் பல பரிமாணங்களையே புரிந்து கொள்ளவே முடிந்தது...

அவரின் பிரபல கவிதை வரிகளே அவருக்கு அஞ்சலியாக கூறவதைத் தவிர வேற எதும் தோன்ற வில்லை....
""இரயிலின் கடைசிப் பெட்டியின் பின்புறம்போல்
சோகம் தருவது உலகில் வேறேது?"


புதன், 20 ஜூலை, 2016

நிஜக் கபாலி....

Image result for piyush manush images


சமீபத்தில் சூழலியலாளர் ப்யூஷ் மனுஷ் கைதைப் பற்றி தொலைக் காட்சியில் காட்டினார்கள்.  நீதியரசரே ப்யூஷ் அவர்களின் சேவையைப் பற்றி பாராட்டி வேறு தனது    கருத்தாகக்        கூறினார்.... 

அவரைப் பற்றிய செய்திகளை முழுவதும் படித்தேன்...  ARM CHAIR CRITICS நமது நாட்டில் அதிகம்... உண்மையில் இவர் ஒரு ஹீரோதான்... 

நம் நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றி அக்கரை இருப்பவர்கள் இவரின் சேவையை பாராட்டமல் ஆதரவளிக்காமல் இருக்க முடியாது...

இவரைப் பற்றி பாராட்டு தெரிவிப்பவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதுவது திரு ஜெயமோகன் மற்றும் நண்பர் திரு முத்து நிலவன்... அவர்கள் எழுதிய சுட்டியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
திரு ஜெயமோகன் சுட்டி http://www.jeyamohan.in/89042#.V470ZNK7iko
திரு முத்துநிலவன் சுட்டி http://valarumkavithai.blogspot.com/2016/07/blog-post_20.html

தொண்டுகென்றே அலைவான்.....
கேலிக்கு ஆளாவான்...
கண்டு கொள்வாய் அவனை
ஞான தங்கமே...
அவன் கடவுளில் பாதியடி ஞான தங்கமே...

என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...

ஞாயிறு, 17 ஜூலை, 2016

மீண்டும் கடவுளை கண்டேன்.....

சுவாதியின் படுகொலையின் தாக்கம் இன்னமும் தீரவில்லை… நானும் ஒரு தகப்பன் என்பதால் இருக்கும்.. இந்தச் சோகம் முழுமையாக மறைய எத்தனை ஆண்டுகள் எனக்குப் பிடிக்குமோ தெரியவில்லை….  ஆனால் நடுநடுவே சிலவற்றை பார்க்கவும் பேசவும் எழுதவும் தோன்றுகிறது…

ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறுக்கிகள் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும்….

இந்தப் பிரச்சனையில் யாரும் சாதி மதச்சாயம் பூசாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்கள் சுவாதியின் பெற்றோர்..

ஓ.. எத்தனை பெரிய மனம்… உங்களை கைகூப்பி வணங்குகிறோம்… ஒரு சராசரி இந்திய மனம் இத்தகையதுதான் என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது… இந்தியா அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றால் உங்களைப் போன்ற நல்லிதயங்களால்தான் என்று தோன்றுகிறது..

ஆனால் இந்தத் தங்க மனத்திற்குத்தான் இப்படிப்பட்ட சோதனையா..? என்று நினைக்கும் போது விரக்தி மேலிடுகிறது…

LET GOD GIVE THEM PEACE OF MIND என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல…?

பொறுக்கிகள் உருவாக என்ன காரணம்… ஒரு சமயம் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னார்.. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தால் வேறு நாட்டினார் என்ன நினைப்பார்கள்.. தமிழ் இளைஞர்கள் காதலித்தார்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார் மேலும் காதலித்துக் கொண்டிருப்பார்கள் என்றுதான்.. அவர்களுக்க வேறு வேலை இல்லை என்றுதான் நினைப்பார்கள் என்பார்… எத்தனை சரியானது..

சம்பந்தமில்லாத ஒரு ரவுடிப் பயல் இருப்பான் அவனை ஒரு வடநாட்டு வெள்ளைத் தோல்காரி உருகி உருகி காதலிப்பாள் என்ற உலக மகா அபத்தத்தை எத்தனை படங்கள் பேசப் போகிறது…

ஆண் பசங்கள் பிறக்கும் போதே BORN WILD ஆகப் பிறக்கக் காரணம் என்ன.. பெண் என்றால்  இவர்களின் போகப் பொருள் என்றா  நினைக்கிறார்களா..?

அண்ணா காலத்திலேயே சொல்லியிருக்கிறார்… சாலையோரத்தில் வேலையற்றதுகள்… வேலையற்றோர் மனதில் விபரீத எண்ணங்கள் என்று.. இந்தக் கால வேலையற்றோர் மனிதில் விபரீத எண்ணங்கள் எப்படிப் போக்குவது…

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலோ இல்லை திராவிட இயக்கக் காலகட்டத்திலோ இப்படி எண்ணங்கள் தோன்றியிருக்காது… தற்போது திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போய்விட்டது.. வெறும் துவேஷத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் மட்டுமே இருக்கிறது…. ஒரு புறம் மதவெறி தலைவிரித்தாடுகிறது

..திரையுலகில் சிறப்பான படைப்புகள் வருவது குறைந்துவிட்டது... வருவது  வெறும் வெற்றுக் கூச்சல்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது..


சமூக ஆர்வலர்கள் சற்றே களம் புக வேண்டிய கால கட்டமிது…

வியாழன், 30 ஜூன், 2016

மனவலியை பொறுக்க முடியவில்லை....

உயிர் வலியைவிட மன வலி பொறுக்க முடியவில்லையே.....

அந்தச் சின்னப் பெண் சுவாதி ரத்த ஆற்றில் விழுந்து கிடந்தது முதல் நடைபெறும் விஷயங்களால் நிச்சயமாக அனைவரும் கடும் மன அழுத்தத்திற்கும் மன  வலிக்கும் ஆளாயிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.. ஏன்... எதற்கு.. எப்படி... என்று பல விவாதங்கள் அனைத்து ஊடகங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.. 

இதில் சாதி மதச் சாயங்கள்,  சாய்வுகள் என்று ஒரு பக்கம் விவாதம் களைக் கட்டியிருக்கிறது... இந்த நாட்டில் ஏதோவொரு சாதியில் , ஒரு மதத்தில்  பிறந்துதான் தீரவேண்டும் ... அது யார் செய்த விதி... யாரை நொந்து கொள்வது ...? 

நடிகர் மகேந்திரன் முகநூலில் தனக்கு வந்ததை பகிரப் போய் அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது... 

கொலை செய்யப்பட்டவள் ஒரு சாதி  ஒரு மதம்.. கொன்றவன் ஒரு சாதி அல்லது மதம்.. அதற்கு யார் என்ன செய்ய முடியும்... நீ அதுவானால் அதைப் பற்றிப் பேசாதே என்பது ஒரு கலாச்சார போலீசிங் தனம்தான்... அவரவர் கோபத்தை அவரவருக்குத் தோன்றுவதைப் போல தெரிவிப்பார்கள்தான்... மகேந்திரன் கிட்டத்தட்ட பிஜேபி என்கிற முத்திரையே குத்திவிட்டார்கள்...

முதுகின் குறுக்கே நூல் இருந்தால் பேசக் கூடாது என்றால் சிரிப்புதான் வருகிறது.. அப்படி தடை போட இவர்கள் யார்...?  விஞ்ஞான ரீதியில் அப்படி நிரூபிக்க முடியுமா..?  யார் முன்னே நிரூபிப்பது.....?  நிருபித்தாலும் அதை சரியென்று யார் சொல்ல முடியும்...? உண்மையில் ஆதிக்க சாதி என்பது இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் இருக்கும்தான்.. ஜெயமோகன் சொல்வதைப் போல பிராமணர்கள்,  ஜனநாயகத்திற்குத் தர வேண்டிய விலைதான் இட ஓதுக்கீடு மற்றும் ஆதிக்க சாதி பட்டம் என்பார்.. தொழிற்சங்கத் தலைவர்  டேவிட் ஞானைய்யாவிடம் நான் இதைப் பற்றி கேட்டதற்கு புராண காலத்தில் இருந்ததுதான் ரிசர்வேஷன் தற்போது இருப்பது DE-RESERVATION என்று கூறினார் .  அவர் கூறுவதும் ஜெயமோகன் சொல்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.. அதாவது வெவ்வேறான பாஷையில் .....
சுவாதி பிரச்சனையில் அவள் பிண்ணனிதான் முற்போக்கு மற்றும் மாதர் இயக்கங்கள் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்கிற குற்றச் சாட்டு பலமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது..

என்ன செய்ய முடியும்.. அவளை குற்றுயிராக வெட்டி வீழ்த்தியவனைக் கூட யாரும் பிடிக்க முயலவில்லை .. நிழல் கமல்கள் ரஜினிகள்  முஷ்டியை உயர்த்தவில்லை.. விஜய்கள் ஆள்காட்டி விரலை மடக்கவில்லை.. சிக்லெட் சாப்பிட்டுக் கொண்டு அஜித்கள் நடந்து வந்து காப்பாற்றவில்லை... அதை நிழலில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள் அவர் ரசிகப் பெருமக்கள்...

உடுமலை சங்கர் படுகொலை காட்சியே போட்டுக் காட்டினார்கள் அப்போதும் யாரும் அந்தக் கொலையாளிகளை பிடிக்க முயலவில்லை... 

இது ஒரு பொதுப் புத்தியாகத்தான் இருக்கிறது..

நமக்கேன் வம்பு என்பது ஒரு புறம்... போலீஸ் கேஸ் என்று வந்தால் பிரச்சனை என்று மறு புறம்.. பாதிக்கப் பட்டவர் சாதி என்ன மதம் என்ன அதன் மூலம் இயக்கங்கள் நடத்தலாம் என்பது மறுபுறம் என்ன அனுகூலம் பெறலாம் என்பது இன்னொரு புறம்..

நாம் போகவேண்டியது வெகு தூரம் என்பது தெரிகிறது....

திங்கள், 27 ஜூன், 2016

தூக்கும் தண்டனை

தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள் சில சமூக விஞ்ஞானிகள்.

அவர்கள் பெரியவர்கள்...  அவர்கள் வாதம் சரியாக  இருந்தாலும் இந்தக் காட்சியைப் பார்த்தால் ......................................


Image result for swathi murder

சரி.. பெரியவர்கள் சொல்லட்டும்... தூக்குத் தண்டனையை ஒழிக்கட்டும்..
ஆனால் என்கவுண்டர் இருக்கிறதல்லவா...

வெள்ளி, 24 ஜூன், 2016

பிஜேபிக்குப் பிடிக்காத ராமன்....

ரகுராம்ராஜன் பற்றி பாராட்டுக்களும் விமர்சனங்களும் மாறி மாறி பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் எழுதிக் குவித்து விட்டன..

வெள்ளி, 20 மே, 2016

தமிழக மக்கள் நடத்திய பாடம்....

பண்டிட்டுகள் வேறு மக்கள் வேறு என்பது எப்போதுமே நிறுவப்பட்டு வரும் உண்மை என்பதைத்தான் 2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் நமக்கு மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறது..

திங்கள், 16 மே, 2016

ஜனநாயகக் கடமை...

நான் உட்பட என் நண்பர்கள் சிலர் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியவில்லை என்பது காலத்தின் கோலம்தான்...

வியாழன், 14 ஏப்ரல், 2016

திருமாவளவன்....

பல தலித் கட்சிகளின் தலைவர்களில் திருமாவளவன்  முக்கியமானவர் என்பதை மீண்டும் இன்றை தமிழ் இந்து நாளேட்டில் வந்துள்ள அவரின் பேட்டி நிரூபிக்கிறது..

புதன், 6 ஏப்ரல், 2016

வாய்விட்டுச் சிரிக்கலாம்......

எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், சில விஷயங்கள் நம்மை வாய் விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்கின்றன... அவற்றில் கீழ்கண்ட இரண்டு விஷயங்கள்... ஒன்று போராளி கண்ணையாகுமாரை SPOOF செய்து வெளியிடப்பட்ட விளம்பரப் படம் யாத்ரா டாட் காம் குழுவால் தயாரிக்கப்பட்டது.. இன்னொன்று இன்று இந்து நாளேட்டில் வந்த கார்ட்டூன் படம்..

உண்மையைச் சொல்லுங்கள் கண்ணையாகுமார் இந்தியாவின் இளவரசர் ராகுல் வீட்டுக்குச் சென்று வந்திருக்கிறார்.. பாவம் அவருக்குச் சுதந்திரம் கிடையாதாம்..  இன்னொன்று சமீபத்தில் பா.ச.க வின் அதிரடி..... பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லாவிட்டால் இந்தியாவில் வாழவே கூடாதாம்..

எத்தனை பெரிய கேலிக்கூத்து.... HYPROCRICY....   



செவ்வாய், 29 மார்ச், 2016

நம்மைப் போல் ஒருவன்....

எதற்காக ....?
எதன் பொருட்டு .....-
என்ன பயன்.....?

அந்தோ... தற்போதுதான் சென்னை வந்திருக்கிறார் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க...
Image for the news result
Image for the news result

அந்தச் சிசு என்ன பாவம் செய்தது...

உன்னைப் போல் ஒருவன் படம் வந்தபோது எத்தனை எதிர் விமர்சனங்களை பார்க்க நேரிட்டது...  நெஞ்சில் சிறிதளவாவது மனசாட்சி இருப்பவர்கள்  சொல்லுங்கள் கமலின் அறச் சீற்றம் சரிதானே...
Image result for kamal in unnaipol oruvan
Image result for kamal in unnaipol oruvan