ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள் கட்டுரையை
20 நிமிடத்தில் தோன்றியதை மட்டும் எழுதினேன்.. ஆராய்ந்து எழுதவில்லை.. நாட்டு நடப்பை பார்த்தவுடன்
ஏற்பட்ட மனஎழுச்சி..
எனது கட்டுரைகள் பெரும்பாலும் ஜெயமோகன் அவர்களின் பார்வையை ஒட்டி இருக்கும் இது முன்னேற்பாடோடு நடப்பது இல்லை.. ஆனால் நான் அவர் கட்டுரையை படிக்கும் போது பெரும்பாலும் ஒத்து இருப்பதாய் கண்டு ஆச்சர்யமடைந்தேன்.. ஒரு சிலருக்கு
ஜெயமோகன் அலர்ஜி இருக்கும் அதற்கு நான் ஏதும் செய்ய முடியாது
ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்கிற பதமே கண்ணதாசனிடம்
நான் எடுத்தாண்டது நான் தமிழ் புலவர் அல்லன் . அவரே அந்த கட்டுரைக்கு அவர் வைத்த பெயர்
ஆண்டாள் அவள் தமிழை ஆண்டாள் தற்போது கூகிளிட்டு பார்த்த போது இப்படி சொல்கிறார்
‘’ஆனால், `இசை மங்கலம்’, `சொல் மங்கலம்’. `பொருள் மங்கலத்’தோடு புதுத் தமிழ்ச் சொற்களைத் தூக்கிப் போட்டுப் பந்தாடி இருக்கும் நாச்சியார் திருமொழி, எனது சிறுமையை எண்ணி எண்ணி என்னை வெட்கப்படவே வைத்தது.’’
நான் வாய் தவறி சொல்ல வில்லை கண்ணதாசன் வரிகள் நீங்கள் கண்ணதாசனை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் முடிவு
(விநாயகம்)
நான் குடந்தை அருகே சேர்ந்த நாச்சியார்கோயில் என்கிற
ஊரை சேர்ந்தவன்.. என் சிறுவயதில் எங்கள் ஊர் (கல்கருடன்) ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்கு
மாலை தோறும் செல்வேன்… கோயிலின் சுவர்களில்
எழுதியிருக்கும் திருமங்கையாழ்வார் பாசுரம் என்னவென்றே அறியாமல் படித்து கொண்டிருப்பேன்…
எங்கள் கோயில் திருவிழாவில் ஆண்டாள் பாசுரம் நெற்று செய்து வெள்ளி காசு வாங்கியது மிக
பாக்கியமாக கருதுகிறேன்… ஆண்டாள் தமிழை என்
போன்ற ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் என்று நான் சொல்ல வில்லை என்போன்ற பெருங்கூட்டத்திற்கு
என்று திருத்தி சொல்கிறேன் காரணம் என்னை போன்ற சாதாரணர்கள் அதிகம்(விநாயகம்)
உங்கள் பின்னூட்டத்தில் சொலிருக்கும் இன்ன பிற கருத்துக்கள்
உங்கள் கருத்துக்கள் அவைகள் நான் கொண்ட கருத்தை மாற்றவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
நான் சொன்ன பேரரசுகள் தோன்றிய பிறகுதான் தேவதாசி
முறை தோன்றி இருக்க வேண்டும் என்பது மார்க்சிய நோக்கு.. அதைத்தான் நான் சுட்டியிருக்கிறேன்..
வீர நாத்திகம் என்று சொல்வதை பற்றி சில விளக்கம்
சொல்ல விரும்புகிறேன்..
இணையத்தில் ஒரு சில வீர நாத்திகர்களை பார்க்கிறேன்..
அவர்கள் பெரும்பாலும் ராஜராஜசோழன் காலத்தை பற்றி குறிப்பிட்டு பேசும் போது பார்ப்பனர்கள்
ஆதிக்கம் நிறைந்தது சாதி கொடுமைகள் என்று கூக்குரலிடுகிறார்கள் அதை பற்றி நான் சொல்வதை
விட ஜெயமோகன் கருத்தே எனது கருதும்… அவற்றை ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அவரவர் விருப்பம்…
ஆனால் நான் அவற்றை ஏற்கிறேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..
ஆக இந்து மதம் என்பதே ஒரு தொகுப்பு…
வரலாற்று ரீதியில் நடந்த ஒரு நிகழ்வு ..அப்படி இருக்கும் போது தங்கள் ஒற்றை அடிப்படை
அரசியலுக்காக அனைத்தும் பார்ப்பன சதி என்பதை ஏற்க முடியாது.. …மேலும் அந்த ஒற்றை கருத்தாக்க
அரசியலை சில வீர நாத்திகர்கள் செய்வதை நான் மறுக்கிறேன் அதற்கும் ஏராளமான ஜெயமோகன்
கட்டுரையை என்னால் மேற்கோள் காட்டமுடியும்..
ஆகவே எனது கட்டுரையை தனித்தனியாக படிப்பதை காட்டிலும்
தொடர்ச்சியாக படித்தால் நான் சொல்ல வருவது விளங்கும் என நினைக்கிறன் நன்றி