செவ்வாய், 24 ஏப்ரல், 2018

ஆண்களை நெறிப்படுத்துக....

 நாட்டில் நடக்கும் கொடுமைகள் அதுவும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் என்னை போன்ற சாதாரண பிரஜைகளை கலக்கமுறவும் மன ரீதியாக பாதிக்கவும் செய்கிறது ... என்னை சந்திக்கும் என்னை போன்ற பல பெற்றோர்கள்  அவ்வாறே கருதுகின்றனர்..   

இந்த சமயத்தில் எஸ் வி சேகர் பெண் பத்திரிகையாளர்களை பற்றிய செய்தியை பகிர்ந்ததும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது .. 

இந்த இடத்தில் இரு பிரமுகர்கள்  கமல் அவர்களும்,  மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களும்கூறிய வார்த்தைகள் முக்கியமானதாக பட்டது .. 

''பெண்களை ஒழுக்கமாகவும் ஆடைகளை சரியாக உடுத்திக்கொள்ள சொல்லும் சமூகம் ஒரு ஆணை எப்படி வேண்டுமானாலும் இரு என்ன வேண்டுமானாலும் செய் என்பது எப்படி சம நீதி ஆகும் .. ''என்று கேட்டார்கள் 

ஒரு ஆண் பிள்ளையை ஒழுக்கமாக இரு.. பெண்களை மதிக்க கற்றுக்கொள் என்று ஏன் சொல்வதில்லை... ஆண்களை நெறிப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்.... இல்லையேல் சமூகம் கெட்டுவிடும் .....

சமூக சிந்தனையாளர்கள் ஜனநாயகவாதிகள் இந்த ஆண் சமூகத்தை நெறிப்படுத்த வேண்டிய காரியத்தை செய்யவேண்டிய தருணம் இது .....

சனி, 14 ஏப்ரல், 2018

மகளே மன்னித்துவிடு……




கைகள் நடுங்குகின்றது… இதை எழுதவே என்னால் முடியவில்லை..  இப்படியும் ஒரு அக்கிரமம் உண்டா… ? நடக்குமா…?

மனிதன் விலங்கைக் காட்டிலும் உயர்ந்தவன் என்று இனி எப்படிச் சொல்ல முடியும்…. எந்த விலங்கும், நாயோ பன்றியோ சிங்கமோகூட தன் இனத்தை இப்படிச் செய்யத் துணியாதே…..

மகளே அசிஃபா…. உன்னை இழந்து தவிக்கும் கோடான கோடி தந்தைகளின் சார்பில் எங்கள் கையறு நிலைகளின் சார்பில்  எங்களை மன்னித்துவிடு…

உன் தந்தை “ நான் எங்கும் தேடினேன்… ஆனால் கோவிலில் தேடவில்லை.. காரணம் அது புனிதமான இடம்…“ என்றார்….

அவர் கொடுத்த மரியாதை யாருக்கு… வெட்கித் தலைகுனிகிறோம்..

ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்
அப்போது மட்டும் நீ இந்த உலகில் மீண்டும் வா….
உன்னை பாதுகாப்போம்…