வியாழன், 31 மே, 2018

என்னை நினைச்சு நானும் சிரிச்சேன்....

அடாடா என்ன ஆக்ரோஷம்... சமூக விரோதிகளைக் கண்டு..  நமக்கும்தான் ஆக்ரோஷம் வருகிறது...

 ''சும்மா  போராட்டம் போராட்டம்னு கம்பு சுத்தாதிங்கய்யா...''

''சரிங்க எசமான்....''

''மீத்தேன் எடுக்கறான்.'''

''. அட ... பாத்துக்கலாம்... போராடாத...''

''ஸ்டெர்லைட் ஆலையால கேன்சர் வருது... ''

''பாத்துக்கலாம்..  போராடாத...சமூக விரோதி பூச்சாண்டி..... சாக்கிரத....''

''காவிரியில தண்ணி தரமாட்டாங்கறான்... உச்ச நீதிமன்றத்
தீர்ப்பகூட மதிக்க மாட்டேங்கறான்...''

''சு... ஸ்....சும்மா... அதெல்லாம் போராடக் கூடாது .. பாத்துக்கலாம்...''..

என்னய்யா...போராட்டம் போராட்டம்னா... சினிமா பாக்க வேணாம்....உன் ஆசையெல்லாம் திரையில் பாத்துக்கோ...
தணிச்சுக்கோ....

கமல் இந்த விஷயத்தை நாசூக்கா சொல்றார்... அவர் நிறைய  விஷயம்  அறிஞ்சவர்.... இந்த ரசினி எல்லாத்தையும்  இப்படியா போட்டு உடைக்கிறது...

குழந்தைக்குப் பேச்சே வரலன்னு கவலப்பட்ட தகப்பனைப் பாத்து  அது  பேச ஆரம்பிச்ச முத வார்த்தை  '' அப்பா நீ எப்ப சாவேன்'னதாம்... அந்தக் கதயலால்ல இருக்கு...

இரண்டு பேரும் பிஜேபியால் மறைமுகமாகத் தூண்டப்பட்டவர்கள்னு   சிலர் சொன்ன  போது  அவங்களப் பாத்துச் சிரிச்சேன்...



இப்ப என்னைப் பாத்து நானே சிரிக்கிறேன்...

புதன், 23 மே, 2018

துப்பாக்கி .......



இது ஜனநாயக நாடா என்கிற அச்சம் வருகிறது...
 நெஞ்சை பதற வைக்கிறது அந்த 17 வயது சிறுமியின் புகைப்படம் ...

அந்த பெண் என்ன அப்படி கேட்டுவிட்டாள்.. கூலி உயர்வா..? அரசு பதவி விலகவா கேட்டாள்? இல்லை தனி நாடு கேட்டாளா? 

 என் மக்களுக்கு கேன்சர் வரும் ஒரு தொழிற்சாலை வேண்டாம் என்றால் அதற்கு பரிசா இது ?

என்ன நடந்தது என்பது மக்களின் பெரும் பகுதிக்கு  தெரிந்தே இருக்கிறது ... 

மக்களை ஆள்வது கார்பொரேட் கம்பெனிகள்  என்பது பச்சையாக பட்டவர்த்தனமாக அம்மணமாக தெரிகிறது... நிச்சயம் ஒரு மக்கள் நல அரசு என்பது என்ன என்பதை வெளிநாட்டில் போய் கற்றுக்கொள்ளட்டும் ஆள்வோர் ...

திங்கள், 7 மே, 2018

கிரௌஞ்ச வதம்

 நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வந்து இரண்டு நாட்களாக வேதனை விரக்தி கோபத்தின் உச்சத்திற்கே செல்ல வேண்டியிருக்கிறது


இப்படி ஒரு மத்திய அரசு  நிறுவனம் ஏழை ஜனங்களை மாணவர் செல்வங்களை பாடாய்ப்  படுத்துமா என்றே புரியவில்லை...  எந்த  நாட்டிலாவது இப்படி நடக்குமா..?


 தமிழர்கள்  என்றால் மாற்றாந்தாய் மனப்பான்மை என்று ஏற்கனவே புலம்பும்  ஒரு பிரிவின் வாதத்தை சரி என்று அரசே ஆக்க நினைக்கிறது என்று ஆகாதா ...?

பழி வாங்க வேண்டும் என்பதற்காக ஒரு அவலத்தை அரசு நிறுவனம் கட்டவிழ்த்து விடுமா ...?

NEET விவகாரத்தில் இந்த வருடம்  CBSE மற்றும் மத்திய அரசு   நடந்து கொண்ட விதம் ஒரு 

கிரௌஞ்ச வதம்