அடாடா என்ன ஆக்ரோஷம்... சமூக விரோதிகளைக் கண்டு.. நமக்கும்தான் ஆக்ரோஷம் வருகிறது...
''சும்மா போராட்டம் போராட்டம்னு கம்பு சுத்தாதிங்கய்யா...''
''சரிங்க எசமான்....''
''மீத்தேன் எடுக்கறான்.'''
''. அட ... பாத்துக்கலாம்... போராடாத...''
''ஸ்டெர்லைட் ஆலையால கேன்சர் வருது... ''
''பாத்துக்கலாம்.. போராடாத...சமூக விரோதி பூச்சாண்டி..... சாக்கிரத....''
''காவிரியில தண்ணி தரமாட்டாங்கறான்... உச்ச நீதிமன்றத்
தீர்ப்பகூட மதிக்க மாட்டேங்கறான்...''
''சு... ஸ்....சும்மா... அதெல்லாம் போராடக் கூடாது .. பாத்துக்கலாம்...''..
என்னய்யா...போராட்டம் போராட்டம்னா... சினிமா பாக்க வேணாம்....உன் ஆசையெல்லாம் திரையில் பாத்துக்கோ...
தணிச்சுக்கோ....
கமல் இந்த விஷயத்தை நாசூக்கா சொல்றார்... அவர் நிறைய விஷயம் அறிஞ்சவர்.... இந்த ரசினி எல்லாத்தையும் இப்படியா போட்டு உடைக்கிறது...
குழந்தைக்குப் பேச்சே வரலன்னு கவலப்பட்ட தகப்பனைப் பாத்து அது பேச ஆரம்பிச்ச முத வார்த்தை '' அப்பா நீ எப்ப சாவேன்'னதாம்... அந்தக் கதயலால்ல இருக்கு...
இரண்டு பேரும் பிஜேபியால் மறைமுகமாகத் தூண்டப்பட்டவர்கள்னு சிலர் சொன்ன போது அவங்களப் பாத்துச் சிரிச்சேன்...
இப்ப என்னைப் பாத்து நானே சிரிக்கிறேன்...