இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
வியாழன், 28 ஜூன், 2018
என்றெமதன்னை கை விலங்குகள் போகும் ....
திங்கள், 11 ஜூன், 2018
காலா.....
இன்றைய தினங்களில் வரும் பல குப்பை படங்களில் காலா சற்றே வித்தியாசமான படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..
மேலும் எங்களது இலாகாவின் தொழிற்சங்க முன்னணி தோழர் ஆதவன் தீட்சண்யா வசனம் எழுதியுள்ளார் .....
வசனங்களும் மிக கூர்மையாக உள்ளது ....பெரும் பிரச்சார நெடி வாராமல் ஒரு படத்தை எடுப்பது மிக சிரமம்... அதை இயக்குனர் பா ரஞ்சித் நேர்த்தியாக செய்துள்ளார்...
ரஜினி இந்த படத்தில் இயக்குனருக்கு அடங்கி நடித்திருப்பதை போலத்தான் தெரிகிறது
இருந்தாலும்... இருந்தாலும்..... அவர் இயக்கிய மெட்ராஸ் மனதில் ஒட்டியதை போல மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அதே கலைத்தன்மை அவரின் அடுத்த படைப்பில் தருவார் என்கிற நம்பிக்கையில் அவருக்கு வாழ்த்துக்கள்
லேபிள்கள்:
திரைப்படம்
,
ரஞ்சித்
,
ரஜினி
ஞாயிறு, 3 ஜூன், 2018
தலைகீழ் உலகம்.....
தந்தி டிவியில் வைகோவுடனான பாண்டேயின் கேள்விக்கென்ன பதில் பார்க்க நேர்ந்தது..
முதல் முறையாக பாண்டேயின் மீதான நம்பிக்கைத் தளர்ந்தது.. அதே சமயத்தில் இது நாள் வரை வைகோவைப் பற்றி சமூக ஊடகங்கள் எத்தனை மீம்ஸ்கள் கேலிகள் கிண்டல்கள் என அவரை நோகடித்திருக்கிறார்கள்...
அவர் தமிழரில்லை என்று வேறு அவரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள்... அவர் ஒரு பஃபூன் போல எத்தனை சித்தரிப்புகள்... ஆனால் நேற்று அவர் பேட்டியைப் பார்த்த போது இது ஒரு குருட்டு உலகமடா என்கிற வேதனைதான் மிஞ்சியது..
வைகோ அத்தனை உண்மையும் போட்டு உடைக்கிறார்.. அதனால்தான் அவரை கோமாளி என்கிறார்கள் ..
மனதில் பட்டத்தை உள்ளொன்று வைத்து புறம் பேசத் தெரியவில்லை அதனால் அவரை பஃபூன் என்கிறார்கள்...
இதுதான் உலக நியதி போலும்...
எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காத எந்த மக்கள் பிரச்சனைகளையும் பற்றித் தெரியாத வயதாகிய பிறகு இளைப்பாருவோமே என நினைப்பதற்கு அரசியல் என்பது பொழுது போக்கு அல்ல...
அது ரத்தம் சிந்தாத யுத்தம் என்பதே தெரியாது ஆளும் வர்க்கம் சொன்னதை கடமையாக ஏற்று மக்களுக்கு உபதேசம் செய்துவிட்டு போகும் மேனாமினிக்கிகள் எங்கே...
வாழ்நாள் முழுவதும் மக்கள் பிரச்சனைகள் என அலைந்து பல வழக்குகள் பல அச்சுறுத்துதள் சந்தித்து வரும் வைகோ எங்கே...
உண்மையான கதாநாயகன் இவர்தான்.... ஆனால் நாம் பொய்களின் பின்னால் அணிவகுக்கிறோம்...
வைகோ போன்ற முற்போக்கு சக்திகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற மக்கள் நேசர்கள் பக்கம் நிற்பதால் மட்டுமே சாதாரண சாமானிய மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது எத்தனை எளிய உண்மை....
THE GREATEST THINGS IN THE WORLD ARE THE SIMPLEST TRUTH.....
லேபிள்கள்:
சமூகம்
,
மக்கள்
,
ஸ்டெர்லைட்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)