திங்கள், 13 ஆகஸ்ட், 2018

ரூபம் இரண்டு


Image result for VISHWAROOPAM 2

ஒரு ஆங்கில ஹாலிவுட் படத்தை பார்த்ததை போல உள்ளது ...நேர்த்தி ...

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வெற்றிடம் .....

கண்ணீர் அஞ்சலி 







(படம் நன்றி நக்கீரன் )



தனித்து விடப்பட்டது  இந்த நாற்காலி மட்டும் அல்ல தமிழகமும்  .....


திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மாற்றும் ஏமாற்றும் ...

ஹீலர் பாஸ்கர் கைதை ஒட்டி  இந்த மாற்று மருத்துவ முறை விவாத பொருளாக பேசப்படுகிறது ..


நமது வழக்கத்தில் உள்ள அலோபதி மருத்துவ முறை பற்றி அதில் உள்ள குறைகளை பூதகரமாக்கித்தான் இவ்வித மாற்று மருத்துவமுறை பற்றி கதையாடல்     பின்னப்பட்டுள்ளது ..

 உண்மையில் அலோபதி மருத்துவ முறையில் குறைபாடுகள் இருக்கிறது அதை டாக்டர்களே மறுப்பதில்லை. ஆனால் அவற்றில் உள்ளவை குறைதான் தவிர அந்த மருத்துவ முறை தவறு என்று இந்த புதிய விஞ்ஞானிகள் கூறுவது சற்றும் ஏற்கமுடியாது...  அது ஒரு  சொத்தை வாதம் .. பெரும் கதை ..

காசு பார்ப்பது விளம்பரம் தேடுவது போன்றவையே இவர்களின் நோக்கமாக உள்ளது .. அலோபதி மருத்துவம் என்பது உலகலாவியது மேலும் மேலும் திருத்தப்படுவது - ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டது .. எல்லாவற்றும் மேலாக அலோபதி மருத்துவ முறை என்பது வெளிப்படையானது - மூடு மந்திரமில்லாதது என்பதை உணரவேண்டும் .. 

அதை விடுத்தது அதன் மேல் சேற்றை வாரி இறைத்து இந்த மாற்றுக்கள் சொல்பவர்கள் முதலில் தங்களை நிரூபிக்கட்டும் .. 

அதை விடுத்தது மனித உயிர்களுடன் விளையாடக்கூடாது ...

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

கலைஞர் ....


Congress president Rahul Gandhi meets DMK supremo M Karunanidhi

கலைஞரின்  வயோதிகமும் நோயும் அவரை துவள வைத்திருப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது 

கலைஞரின் உடல் நலிவு பற்றி பலரும் பல விமர்சனங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் சொல்லி விட்டார்கள் ..   

முன்பு அசமத்துவத்திற்கு ஆதரவானவர்கள்  அவரை எதிர்த்துக்கொண்டிருந்தார்கள் .. இப்போதும் அவ்வாறே அந்த வகையில் எதிர்க்கிறார்கள்  

தற்போது முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு என்று எதிர்ப்பவர்கள் சிலர்  உண்டு 

 
 தன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களிடம் பேதமில்லை என்கிற பார்வையே கொண்டிருந்தார்   என்னை பொறுத்த வரை அதுதான் என் மனதில் கோபுரமாக அவரை உயர்த்தி வைத்திருக்கிறது 

. தமிழகத்தில் எனக்கு தெரிந்த உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளிடையே   இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம் (கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தவிர ..)

அவரிடம் உள்ள ஒரே குறை அவர் ஆட்சியில் இருந்த போது இந்த கொள்கையை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் அது அவரின் தவறல்ல என்றாலும்..... அதே சமயம் அவர் குடும்பத்தினரின் அலைக்கழிப்புக்கு ஆளானர் என்பதும் ஒரு சோகமே ..

எப்படி இருந்தும் கலைஞரின் இந்த நலிவு வேதனை அளிக்கிறது