இது சரியான கருத்தா.. தெரியாது.. ஆனால் என் மனதில் பட்ட சரியான கருத்து
ஞாயிறு, 18 நவம்பர், 2018
ஞாயிறு, 11 நவம்பர், 2018
பரியேறும் பெருமாள்...
பொதுவாகவே Off-beat படங்கள் என்றாலே , ஒன்று பிரச்சார நெடியுடன் எடுப்பார்கள் அல்லது அழகுணர்ச்சியில்லாமல் சொதப்பலாக இருக்கும்...
சமீபத்தில் வந்திருக்கும் காதல், காக்காமுட்டை போன்ற படவரிசையில் பரியேறும் பெருமாள் BABL மிக முக்கியமான படைப்பு.. அழகுணர்ச்சி ததும்ப (aesthetic) யதார்த்தமாக poetic முடிவுடன் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் படம் என்றால் நம்பவே முடியவில்லை.
காக்கா முட்டை வர்க்கக் கண்ணோட்டத்தைப் பற்றி பேசினால் ப.பெருமாள் தீவிர சாதி ஓடுக்குமுறை பற்றி கதறுகிறது.. இத்தனை உக்கிரத்துடன் ஒரு படம் தமிழில் வந்ததில்லை.
தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் காணப்படும் சாதீய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைக்கவே பதறுகிறது. அந்தக் கொலைகார கிழவன் வரும் காட்சியிலும் ப.பெருமாளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற படபடப்பை பார்ப்பவர் மனத்தில் ஆழமாக தைத்துவிடுகிறார் இயக்குனர்.
காதல் படத்தில் அந்த மெக்கானிக் இளைஞன் மனநோயாளியாக பெரியார் சிலை முன்பாக கிடப்பதை சிம்பாலிக்காக காட்டியிருப்பார்கள்.. எத்தனை பெரியார் வந்தாலும் இந்நிலை மாறவில்லை என்பது சோகத்தில் பெரிய சோகம்...
மாரி செல்வராஜ்கள் இவ்வாறு கலைகளில் பதிவு செய்தாலாவது இந்நிலை மாறும் என்று எதிர்பார்ப்போம்..
வாழ்க மாரி செல்வராஜ்...
லேபிள்கள்:
சினிமா
,
பரியேறும் பெருமாள்
சனி, 3 நவம்பர், 2018
என் பெயர்............?
ஒரு நாள் உலகம் நீதி பெறும் என்று நானும் நம்பி வாழ்கிறேன்...
அன்று நீ உலகிற்குத் திரும்பி வா...தாயே...
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)