வியாழன், 30 மே, 2019

பாதுகாவலர்கள் ...

என்ன செய்யப்போகிறார்கள் இந்த பஞ்ச பாண்டவர்கள்..?


 தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தாலும், ஐந்து எம் பி அதுவும் தமிழகத்தில் மட்டும்  நான்கு என்று கம்யூனிஸ்டுகள் பாராளுமன்றத்திற்குள் செல்கிறார்கள் ..

ஆயிரம் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும்  தொழிலாளர்கள் பற்றி குரல் எழுப்ப இந்த ஐந்து நபர்கள்தான் ......... இவர்களை விட்டால் யாரும் இல்லை 

அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும் ஆயிரம் சேவகர்கள் இருக்கிறார்கள் ..

நம்மை போன்ற உழைக்கும் மக்களுக்கு இவர்கள்தான் ..

இவர்களை தொழிலாளர்கள் பாதுகாவலர்களாக பார்க்கிறோம் ...

புதன், 29 மே, 2019

( பாகம் 2) - .தேர்தலும் படிப்பினைகளும்..


சென்ற பாகத்தில் சில கருத்துக்கள் பற்றிப் பார்த்துவிடுவோம்:

 “பிராமணர்கள்  இப்போதுதான் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று திராடவிடர்கள் பிரச்சாரம் செய்தார்களா ‘’ என்ற கேள்வியை சில அன்பர்கள் கேட்டார்கள்…  

இது தற்போது செய்யப்பட்ட பிரச்சாரம் இல்லை.. மாறாக பல ஆண்டுகளாய் நடக்கும் விஷயம் …. இது காலம் காலமாக திராவிட கட்சிகள் தமிழக பெரும்பகுதி B.C. உழைக்கும்   மக்களுக்கு கூறிவருவது…    பெரும்பகுதி B.C. உழைக்கும் மக்களை ஆக்கிரமித்துள்ள சிந்தனை….  இதுவே திராவிட கட்சிகளின் உயிர்நாடியாக உள்ளது...  தமிழகம் கேரளம் தென்னிந்தியாவில் வாழும் உழைக்கும் மக்கள் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில்  காட்டும் அதீத முனைப்பையே இது … வட இந்தியர்களை விட ….. யாரினும் மேலாக….

சரி இப்போது பிரதான கேள்விகளுக்கு வருவோம்..
பி யில் பிஜேபி 50%சதம் மேல் வாங்கி (MAHA GADBANTHAN)  மகா கூட்டணியை  வீழ்த்தியுள்ளதுஇந்தச் செய்தி கூறுவது என்ன ? எப்படி தமிழக மக்களை திராவிடக்கட்சிகள் ஒரு கேள்விக்குள் வைத்திருந்தோ….  அதே போல் வேறு ஒரு  கேள்வியை இந்தி பேசும் வட நாட்டு மக்களிடம் பிஜேபி மற்றும் அதன் துணை அமைப்புகள் தொடர்ச்சியாக வைத்தன…

நாம் ஹிந்து .. நமது கலையை கலாச்சாரத்தை பண்பாட்டை சிறுபான்மை மதங்களும் அதனை ஆதரிக்கும் கட்சிகளும் சீரழிக்கின்றன….. இந்த ஒரு பிரச்சாரம் பல வழிகளில் வகைகளில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாய் மௌனமாக நடந்து வர வர அம்மக்கள் முழுமையாக இந்த பிரச்சாரத்திற்குள் சென்று விட்டதையே பிஜேபி வெற்றி நமக்கு எடுத்துக்காட்டுகிறது… இந்த சிந்தையிலிருந்து அம்மக்கள் பிஜேபி நினைத்தாலும் வெளியே வருவார்களா என்பது தெரியவில்லை..

இது ஒரு புறம் இருக்க,  இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை பார்க்கலாம்..  இதற்கு விடை ஆம் இல்லை என்று இரண்டும் சொல்ல வேண்டும்..

சாதாரண கூலி வேலை செய்யும் வட இந்திய உதிரி முஸ்லீம் மக்கள்தான் இவர்கள் மதத்தை அழிகிறார்களா என்றால்.. கேலிக்கூத்து பெரும் கேலிக்கூத்து என்று கத்த வேண்டும் போலுள்ளது….

அதே சமயம் உலகெங்கும் வஹ்ஹாபியர்கள் அச்சுறுத்தல் இருக்கிறது இல்லையா என்றால், ஆமாம் இருக்கிறது என்ற உண்மையும் சொல்லவேண்டும்.. இங்குதான் பிஜேபி அல்லாத கட்சிகள் தடுமாறுகின்றன… எங்கே இதை சொன்னால் நமக்கு சிறுபான்மை ஓட்டுக்கள் சிதறிவிடுமோ என்று அஞ்சுகிறது… வடநாட்டு இந்து மனப்பான்மைதான் ராகுலை மண்ணைக் கவ்வ வைத்தது…  சிறுபான்மையினரை பகைக்கக்கூடாது என்ற எண்ணம்,  வஹ்ஹாபிய அச்சுறுத்தலை சினிமாவாக நிழலில் பேசிய கமல், தேர்தல் சமயத்தில் இந்து தீவிரவாதம் என நிஜத்தில்  பேச வைத்தது..

ஒரு புறம் புல்வாமா தாக்குதல்  கொடுமை நடந்து முடிந்த உடன் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையில் சர்ச்சில் நடந்த கொடுமையை    எந்த கட்சியும் (பிஜேபி தவிர)  பேச  மறுக்கின்றன .. 
  

இந்தத் தடுமாற்றம் இந்த கட்சிகளுக்கு தீரும் வரை பிஜேபியின் காட்டில் மழைதான்

அதை போல உழைக்கும் பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வரை  தாமரை தமிழகத்தில் மலருவதும் கடினம்தான்..


ஞாயிறு, 26 மே, 2019

தேர்தலும் படிப்பினைகளும் ( பாகம் 1).


பிஜேபியின் இரண்டாம் ஆட்டம் பல முற்போக்கர்களை வியப்படைய வைத்துள்ளது … அதிர்ச்சிக்கும்   உள்ளாகியிருக்கிறார்கள் .

தேர்தலுக்கு முன் அடியேன் பிஜேபி  200+ என்றும்     காங்  150+ என்றும் கூறியிருந்தேன்..    இதை சில பிஜேபி -எதிர்ப்பு நண்பர்கள் அடியேன் கூற்றை ஏற்கவில்லை..


  ஆனால் தேர்தலுக்கு  முன்னரே எனக்கு ஒரு உறுத்தல் இருந்தது.. ஏனோ பிஜேபிக்கு எதிராக வட இந்தியர்கள் இருப்பதை அடியேனின் மனம் எந்த நிமிடத்திலும் உணரவில்லை …   அதே சமயம் பிஜேபி குறைந்த MPகளுடன் ஆட்சி அமைக்கும் என்று நம்பினேன் …  

ராஜிவ் காலத்தில் போபோர்ஸ் பிரச்னையின் போது இந்திய முழுவதும் ஒரு எதிர்ப்பு இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது…  ஆனால் இந்த முறை மோடிக்கு எதிராக இந்தியர்கள் அதிலும் குறிப்பாக வட இந்தியர்கள் இல்லை என்று உணர முடிந்தது ..ஆனால் GST பணமதிப்பிழப்பு  போன்றவற்றால் மோடிக்கு   ANTI-INCUMBENCY இருக்கும் என எண்ணினேன்…  அதனால்தான் இந்த முறை மோடிக்கு 200+ என்று எழுதினேன்.. அதன் பலன்களாக காங்கிற்கு 150+ என்று வரும் என்று கணித்தேன்..

 தேர்தலுக்கு பின் சில விஷயங்கள்  புலனாகிறது..


ஒரு முழக்கத்திக்கு ஆதரவாக ஒரு கட்சி கட்டப்பட்டால் அது நிச்சயம் எடுபடுகிறது.. அதுவே அந்த முழக்கம் நிலவும் சூழலுக்கு எதிராக இருந்தால் அதை மக்கள் நிராகரிக்கிறார்கள் பிஜேபியின் இந்து முழக்கம் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்..


தனிநபர் துதியை வைத்து கட்டப்பட்ட கட்சிகள் MGR, ஜெ யின் அதிமுக..


 காங்கிரஸுக்கும் இந்தப் பிரச்சனை  உள்ளது ராஜிவ் அதன்  பிறகு சோனியா அதன்  பிறகு ராகுல் பிரியங்கா என்று தனிநபர் முன்னிலை படுத்தும் கட்சியாகி விட்டது…. இந்தியாவில் பெரும்பாலும் அவ்வாறான கட்சிகள்தான் உள்ளன.. ஆந்திராவின் மாநிலக் கட்சிகள் மொழியை முழக்கமாக வைத்திருக்கும் கட்சிகள் ஆகும். அங்கு பிஜேபி காங் எடுபடவில்லை,, YSR கட்சி நம்ம ஊர் தமிழ்மாநில மூப்பனார் போல் வந்துள்ளது. 


கம்யூ கட்சிகள் திட்டவட்டமான கொள்கைகள் உடைய கட்சியாகும்.. வரையறை செய்யப்பட்ட கொள்கையின் கீழ்கட்டப்பட்ட கட்சியாகும்


 ஆனால் உலகெங்கும் வலது சாரி அலை வீசும் காலகட்டத்தில் அவர்களால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை .. தமிழக நிலையுடன் நாம் ஒப்பிட்டால்  இந்த விஷயம் எத்தனை வீரியமானது என்று புரியும்..


 தமிழக மண் என்பது பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் இடம்….    குறிப்பாக 97% சதம் எனலாம்… இந்த மண்ணில்தான் பெரியாரின் நாத்திகப் பிரச்சாரம்  கடுமையாக எடுபட்டது…. அதற்கு ஆயிரம்  காரணங்களை திராவிட ஆதரவாளர்கள் அடுக்கினாலும்,அடியேன் புரிந்து கொள்வது இதுதான்..




 பார்ப்பனர்கள் முன்னேறிவிட்டனர்நீங்கள் முன்னேற வேண்டும் என்றால்  எங்களை ஆதரிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களால் முன்னேற முடியாது என்கிற  பிரச்சாரத்தை திராவிட  இயக்கம் வலுவாக   எடுக்க  அதை பெரும்பான்மை  மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்…..


  பிராமணர்கள் ஆட்சிக்கு வந்தால் ஒதுக்கீட்டை எடுத்துவிடுவார்கள் என்கிற தீவிர பிரச்சாரம் பெரும்பான்மை பிராமணரல்லாத மக்களிடம் எடுபட்டது... ஆனால் பிராமணரல்லா பெரும் பகுதி மக்களின் இந்த உணர்வு நிலை ஒரளவு உண்மையும் கூட..

இந்த அச்ச உணர்வு தொடர்ச்சியாக பிராமணர் அல்லாத மக்களை திராவிட கட்சிகளை நோக்கித் தள்ளின.

இதுதானே தவிர தமிழக மக்கள் பிராமணர்களுக்கும் இந்துக் கடவுளர்களுக்கும் எதிரானவர்கள் என்பது பச்சைப் பொய்.  இது உண்மையாக இருந்தால் இங்கே பிராமணர்கள் அவர்கள் கௌரவத்துடன் வாழமுடியாது.  இந்துக் கடவுளர்களின் பெரும்பான்மை கோவில்கள் தமிழகத்தில்தான் உள்ளது.  இந்தியாவிலே அதிக அளவு பக்திமான் இங்குதானோ என்று வியக்கும் வண்ணம் நேர்த்திக்கடன்கள் வேண்டுதல் கூட்டங்கள் திருவிழாக் காலங்களில் அலைமோதுகிறது.  


இந்த ஒற்றைப் புள்ளிதான் தமிழக மக்களின் முழக்கமே தவிர இது நாத்திக பூமி என்பதை அடியேனால் துளியும் ஏற்க இயலவில்லை.   அதி தீவிர திராவிடர்கள் இதற்கு அவர்களுக்கு ஏற்ற விதத்தில் வியக்யானம் செய்து கொண்டுவருவார்கள்.


இவ்வித அதி தீவிர திராவிடர்கள் உண்மையில் வெகு சொற்ப சதவிகித்தினர்தான்.

இந்த அதி தீவிர திராவிடர்கள் சொல்வது பற்றியும் இந்தியாவின் பிஜேபியின் இந்து polarization பற்றியும் முஸ்லிம் வஹ்ஹாபியர்கள் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்   

வியாழன், 23 மே, 2019

ம நீ ம...

ம நீ ம...

 ஒரு ஆச்சர்யம் ......தேர்தல் முடிவுகளே ஒரு ஆச்சர்யம்தான்.....

 இருந்தாலும் ....மக்கள் நீதி மையம்  -அவர் தலைவர் போல் கிராமங்களில் ஓடவில்லை ...ஆனால் நகரத்தில் நன்றாக ஓட்டுவேட்டை ஆடி மூன்றாம் இடம் வந்துள்ளார்கள்...

 உண்மையில் வருங்காலத்தில் நகரங்களில் ம நீ ம ஒரு தவிர்க்கமுடியாத சக்திதான் ....

திங்கள், 20 மே, 2019

கருத்துக்கணிப்பு....

எல்லோரும் கருத்துக்கணிப்பு சொல்லிவிட்டார்கள்...
அடியேன் மட்டும் சொல்லாமல் விட விரும்பவில்லை ....

பல ஆண்டுகளாய் அரசியலை பார்த்து வருவதாலும், காய்தல் உவத்தல் இன்றி பேச வேண்டும் என்பதாலும்  , என் சிற்றறிவுக்கு எட்டிய வரை :-

பிஜேபி  200+ என்றும்
காங்கிரஸ் 150+என்றும்
கணிக்கிறேன்..

 இது சரி என்றால் அடியேன் சிறந்த கணிப்பளான் என்று எனக்கு நானே பட்டம் கொடுத்துக்கொள்கிறேன்...

 தவறென்றால் ....

அடியேன் இன்னும் அரசியலை ஆழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன் 

திங்கள், 6 மே, 2019

விஞ்ஞானத்தை வளர்க்கபோறேண்டி......

''விஞ்ஞானத்தை வளர்க்கபோறேண்டி....'' என்ற பாடல் வரிகள் கலைவாணர் காலத்தில் மிக பிரசித்தம் ..


நமது நாட்டில் எத்தனை ஊழல்கள் இருந்தாலும் எதேச்சிகாரம் சாதிய பாகுபாடு இருந்தாலும் விண்வெளி அறிவியலில் நாம் முன்னேறியிருப்பது சமீபத்திய FANI புயலின் ஆராய்ச்சியில்  துல்லியமாக கணித்தது வியப்புக்குரியது பாராட்டத்தக்கது 


ஒரிஸ்ஸாவை தாக்கிய இந்த கோரப்புயலில்  நமது வானிலை மையம் முன்னறிந்து சொல்ல விட்டால் எப்படியும் பல் ஆயிரக்கானவர்கள் காணாமல் போயிருப்பார்கள் ...


வானிலை மையம்,  விண்வெளி ஆராச்சியாளர்கள், ஒரிசா அரசும் CONCERTED ACTION மூலம் பல உயிர் இழப்பை தடுத்து நிறுத்தி உள்ளது..  உண்மையில் பாராட்டுக்குரியது..


 விஞ்ஞானத்தை வளர்க்கவேண்டியது அனைவரின் கடமை என்பது நிதர்சன உண்மை 

வியாழன், 2 மே, 2019

பொன்பரப்பி ..

பொன்பரப்பி கொடுமைகளை பற்றி என்ன சொல்ல....

 நாகரீக சமூகத்தை வளர விடாமல் செய்யும் ஒரு தடைக்கல் ....
எந்த வைகையிலும் ஜீரணிக்க முடியாத வன்முறை ....

ஆனால் கண்ணுக்கு கண் என்ற பார்வையில் பார்க்கக்கூடாது ...

''அவர்களை ஜனநாயகப்படுத்தி வெல்லவேண்டும்....'' என்று  தொல் திருமாவின் மொழியில் கேட்டபோது -  காந்தி வாழ்கிறார் என்றே தோன்றுகிறது ..

வாழ்க திருமா ....