இது ஜனநாயக நாடா என்கிற அச்சம் வருகிறது...
நெஞ்சை பதற வைக்கிறது அந்த 17 வயது சிறுமியின் புகைப்படம் ...
அந்த பெண் என்ன அப்படி கேட்டுவிட்டாள்.. கூலி உயர்வா..? அரசு பதவி விலகவா கேட்டாள்? இல்லை தனி நாடு கேட்டாளா?
என் மக்களுக்கு கேன்சர் வரும் ஒரு தொழிற்சாலை வேண்டாம் என்றால் அதற்கு பரிசா இது ?
என்ன நடந்தது என்பது மக்களின் பெரும் பகுதிக்கு தெரிந்தே இருக்கிறது ...
மக்களை ஆள்வது கார்பொரேட் கம்பெனிகள் என்பது பச்சையாக பட்டவர்த்தனமாக அம்மணமாக தெரிகிறது... நிச்சயம் ஒரு மக்கள் நல அரசு என்பது என்ன என்பதை வெளிநாட்டில் போய் கற்றுக்கொள்ளட்டும் ஆள்வோர் ...
1 கருத்து :
மக்கள் நலன்களின் மீதான அக்கறை என்றால் என்ன என்பதை, மக்களை சுட்டு கொல்லும் காட்டுமிராண்டி போலீஸ் படையை வைத்திருக்கும் இந்திய மத்திய, மானில அரசுகள், இந்திய போராட்ட அமைப்புகள் வெளிநாடுகளிடம் பாடம் கற்க வேண்டும்.
கருத்துரையிடுக