வெள்ளி, 26 டிசம்பர், 2014

லிங்கா....


Image result for lingaa

லிங்கா படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்கள் அதிகமாக படிக்க நேர்ந்தது...

அதனால் பார்க்கவே தயங்கினேன்...  ஆனால் நேற்று பார்த்தேன்...

குறைகள் என்று பெரிதாகச் சொல்ல ஒன்றும்  இல்லை...  வழக்கமான மசாலத்தனங்கள் இருந்தாலும் குறுகிய காலத்தில் நேர்த்தியாகவும் எடுக்கப் பட்டிருக்கிறது என்றே சொல்லுவேன்..

உண்மையில் ஒரு நல்ல படம்தான்....

பாலச்சந்தரும் கமலும்

பாலச்சந்தர் இறுதி ஊர்வலத்தில் கமலால் கலந்து கொள்ள முடியவில்லை அவர் அமெரிக்காவில் இருப்பதால்.
Image result for balachander

K. Balachander directed and Kamal Haasan appears in Moondru Mudichu, Ek Duuje Ke Liye, and other movies.

அதையொட்டி அவர் பேட்டியை ஒளிபரப்பினார்கள்

"...அவர் இறுதி ஊர்வலத்தில்கூட கலந்து கொள்ள இயலாமல் அவர் சொல்லிக்கொடுத்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன்... அதுவே அவருக்கு அஞ்சலி " என்றார்..

சற்று நேரம் குறுகுறுத்தது..   கமல் ஒரு கவிதையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்

அவர் கூறிய பிறகுதான் பாலச்சந்தர் மேல் மரியாதை மேலும் கூடியது... அன்னாருக்கு அஞ்சலிகள்

வியாழன், 18 டிசம்பர், 2014

கற்பனையில் நடக்குமா....?

கற்பனை செய்துபார்க்க முடியாத கொடூரம் பேஷாவர் நகரின்  ராணுவப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் தலிபான்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான   தாக்குதலில், 132 குழந்தைகள் உட்பட 141
  பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்கிற செய்தியை நம்பவே முடியவில்லையே..

வியாழன், 4 டிசம்பர், 2014

மாபெரும் ஜனநாயகவாதி கிருஷ்ணய்யர்

மாபெரும் ஜனநாயகவாதி, முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி,  மிகப் பெரிய மனிதாபிமானி திரு கிருஷ்ணய்யர் இன்று மறைந்தார்..


V.R.Krishna Iyer.jpg

 கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் ஆட்சியில் மந்திரிப் பதவி வகித்தவர் - எத்தனை பெரிய அரசியல் பண பலம் பொருந்தியவர்களையும்  நீதியின் முன் சமம் என்றவர்   - மரண தண்டனைக்கு எதிரான பலமான குரல் எழுபபியவர்...

அன்னார் மறைந்தாலும் அவர் எழுப்பிய ஜனநாயகக் குரல் தொடர்ந்து மக்களால் எடுத்துச் செல்லப்படும்... அவர் கனவை மக்கள் வருங்காலத்தில்  நிறைவேற்றுவார்கள்..

அன்னாருக்கு அஞ்சலி

செவ்வாய், 25 நவம்பர், 2014

இரண்டு விஷயங்கள்...

சில நேரங்கள் இணையத்தில்  உலவும் போதும் காட்சி ஊடகங்கள் பார்க்க நேரும் போதும் கீழ் கண்ட விஷயங்கள் பாதிக்கின்றன எழுதத்  தூண்டுகின்றன... திடிரென்று என்ன என்று கேட்காதீக்ள்..  

ஞாயிறு, 16 நவம்பர், 2014

இந்தியும் இந்தி பேசும் மக்களும்...

பீஹார் மாநிலத்தில் ஒரு டாக்டர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தாராம்.. ஒரே நாளில் 83 பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து உலக சாதனை புரிய   ஆசைப் பட்டு ஏழைப்பட்ட சனங்கள் 11 பேரை காவு வாங்கியிருக்கிறார். மேலும் பலர் கவலைக்கிடமாக இருக்கிறார்களாம்..

புதன், 12 நவம்பர், 2014

உங்களை நம்பி.....

இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த தமிழ்க் கலைஞனாம் கலைஞானி 
கமல் ஹாசன் அவர்களுக்கு அகவை 60 பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Image result for kamal photos

மகாநதி விருமாண்டி அன்பே சிவம் போலப் படங்கள் மென்மேலும் தமிழ் கூறு நல்லுலகத்திற்கு தருவதற்கு உங்களால்தான் முடியும்...

அந்தப் பாதையில் மென்மேலும் சிறக்க பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

புதன், 5 நவம்பர், 2014

இன்னமும் தீட்டப் பட வேண்டிய ‘கத்தி‘

கமர்சியல் இயக்குனர்களில் முருகதாசின் உலகம் சற்று வித்தியாசமானதுதான்... தனக்கென சில சிந்தனைகளை கொண்டிருப்பவர் முருகதாஸ்... 

செவ்வாய், 14 அக்டோபர், 2014

மைனாவும் மெட்ராசும்

ஆங்கில M என்கிற எழுத்தில் தொடங்கும் இந்த இரு படங்களின் ஒற்றுமை
இன்னொரு விஷய்த்திலும் இருக்கிறது.. அதுதான் விளம்பு நிலை மக்கள்
வாழ்க்கைப் பற்றிப் பேசியது...

சனி, 11 அக்டோபர், 2014

கடவுளில் பாதி.....

தொண்டுக்கு என்றே அலைவான்... கேலிக்கு ஆளாவான்...
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே...
அவன் கடவுளில் பாதியடி ஞானத் தங்கமே....

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஒரே ஒரு கேள்வி........

தாமதமான தீர்ப்புதான்... ஆனால் எந்தவித நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் தீர்பபளித்த நீதியரசர் டிகுன்ஹா பெரும் ஜனநாயகவாதிதான் ... உண்மையில் வணங்கத்தக்கவர்..  

வியாழன், 25 செப்டம்பர், 2014

சாதனை மற்றும் சோதனை

நாளேடுகளில் கண்ணில் படும் செய்திகள் ஏன் கலவையான உணர்வை தருகின்றனவோ... சாதனைச் செய்தியும் சோதனைச் செய்தியையும் பார்க்க நேரும் போது, சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை...
========================================================
சாதனை
மங்கள்யானின் வெற்றி மகத்தான வெற்றி! எத்தனை மகிழ்வான தருணம் இது... எத்தனை கடுமையான நிமிடங்கள் அவை.. ஒரு வழியாக வெற்றியடைந்தது இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விசயம்

மங்கள்யான் என்ற விண்கலம் நேற்று காலை  (24 செப்டம்பர் 2014) எட்டு மணி அளவில் செவ்வாய்க்கோளின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப் பட்டது.  

மங்கள்யான் என்பது orbiter வகையைச் சேர்ந்த விண்கலம் ஆகும்.இது செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து ஆய்வு செய்யும்; படம் எடுத்து அனுப்பும்.
இந்த வெற்றிக்கு மூல காரணமாய் இருந்த பலரில் குறிப்பிடத்தக்கவர்கள் இரண்டு தமிழர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி..

=== ==============================================================
சோதனை 
(இந்தச் செய்தி times of India வில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது)  

நேற்று முன்தினம் டெல்லியில்  மிருகக் காட்சி சாலையில் அந்தப் பையனுக்கு நிகழ்ந்த கொடூரத்தை என்ன வென்று சொல்வது..

செய்தித்தாளின் செய்தி  என்ன வென்றால் அந்த வெள்ளைப் புலி அந்தப் பையனை இரண்டு அல்லது இரண்டரை நிமிடங்கள் மட்டுமே கவ்விக் கொண்டு சென்றது. அதற்குள் மக்கள் கூச்சலிட்டு கல்லெறிந்ததால் அந்தப் பையனை விட்டுவிட்டுக் கூண்டுக்குள் சென்றுவிட்டது என்று கூறுகிறது..

ஆனால் பிரேதத்தை கைப்பற்ற கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆகியிருக்கிறது..

அந்தப் புலியைவிட் கொடுமையான இந்தத் தவறை என்னவென்று சொல்வது...காலதாமதம் என்கிற பெரும் கொடூரம்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை...

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

வாசந்தியும் ஜெயமோகனும்....

வாழ்க்கை எந்தளவு சிக்கலாகவும் சிடுக்குகள் நிறைந்தும்  சுவாரஸ்யமாகவும் இருக்கிறதோ அதே அளவு  இலக்கியங்களும் படைப்பாளிகளும் இருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது..

சனி, 20 செப்டம்பர், 2014

மாண்டலினின் மரணம்.....




வார்த்தையின்றி போகும் போது.....
       மௌனத்தாலே நன்றி சொல்வோம்......

புதன், 17 செப்டம்பர், 2014

உண்மை சுடும்

எப்பொழுதாவது FM ரேடியோ கேட்பதுண்டு.. அர்த்தமில்லா பாடல்களுக்கு நடுவில் சில நேரங்களில் சில அற்புத தருணங்கள் கிடைப்பதும் உண்டு...

வியாழன், 11 செப்டம்பர், 2014

நியாயமான பேச்சு....

ஆந்திராவில் ஒரு நடிகை பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. அந்த ஊர் காட்சி ஊடகங்கள் படமெடுத்து டிவியில் காட்டியுள்ளார்கள்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

சர்ச்சைகள் ஒரு தொடர்கதை

இரண்டு சர்ச்சைகள்... முதலில் கமல் இரண்டாவது நீதியரசர். சதாசிவம் சம்பந்தப்பட்டது
...

வியாழன், 4 செப்டம்பர், 2014

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே .....

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

இதோ ஆஸ்திரேலியக்காரர்கள் நமக்கு.... 
ஏன் உலகுக்கே பாடம் புகட்டியிருக்கிறார்கள்

வாழ்க மனிதம்... வாழ்க ஓற்றுமை...
=oo=
( பின்குறிப்பு ::: இந்த நிகழ்வு நடந்து பல நாட்கள் ஆகிவிட்டது..
நான் வெளியூர் சென்றிருந்ததால் தற்போதுதான்
பார்க்க நேரிட்டது... சாரி....)

புதன், 20 ஆகஸ்ட், 2014

முரண்...நகை....

நம்ப முடியாத சில விஷயங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பது இவர்கள் வாழ்வின் மூலம் தெரிந்து கொள்வதுதான் மிகப் பெரிய முரண்...

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே......

இன்று ஒரு மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் திருவாய் மலர்ந்திருக்கிறார்... என்னவாம்...

புதன், 30 ஜூலை, 2014

பக்தி மார்க்கம்...

இந்த அனுபவத்தை எழுதலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தளத்தில் வந்திருந்த இமயச் சாரல் -1  என்கிற கட்டுரையைப் படித்தவுடன் உடனே எழுதுகிறேன்.

புதன், 23 ஜூலை, 2014

உறுத்தல்கள்....

நீதியரசர் கட்ஜு அவர்கள் சமீபத்தில் தன் முகநூலில் சில தமிழர்கள் கேட்டுக் கொண்டதால் தன்னுடைய சென்னை உயர் நீதிமன்ற  அனுபவங்களை எழுதினேன் என்கிறார்....

ஞாயிறு, 20 ஜூலை, 2014

மும்பை மழை

கடந்த வாரம் மும்பை மாநகருக்குச் செல்ல வேண்டியிருந்தது...  அந்த ஊரின் சீதோஷ்ண நிலை பற்றி எனக்குத் தெரியாது... ..

சனி, 12 ஜூலை, 2014

சிம்பன்சி குரங்குகள்....

ஜெயமோகன் தளத்தில் ஒரு வாசகர் கடிதத்தைப் பார்க்க நேரிட்டது.. ஏற்கனவே பல நாட்டு நடப்புகள் மனதைப் போட்டு வாட்டிக் கொண்டிருநத போது இந்தக் கடிதம் பல விஷயங்களை யோசிக்க வைத்தது

வெள்ளி, 11 ஜூலை, 2014

லட்சியமும் நிச்சயமும்.....

நிறைய எதிர்ப்பார்ப்புகள் ... குறிப்பாக மாதச்சம்பளக்காரர்கள் பெரும் எதிர்ப் பார்ப்புடன் இருந்தார்கள்.. அவ்வளவு ஏன் பாஜகவே வாக்குறுதியளித்தாக நினைவு...

செவ்வாய், 1 ஜூலை, 2014

சரிந்த நம்பிக்கை..

போரூர் மவுலிவாக்கத்தில் நடந்த கொடுமையை என்ன வென்று சொல்வது... CMDA approved என்கிறார்கள்... எப்படி 11 மாடிக்கு எதையும் பரிசோதிக்காமல் அங்கீகாரம் கொடுத்தார்கள்..  எல்லாம் தெரிந்த சங்கதிதான்... இந்தியாவில்தானே வாழ்கிறோம்...

திங்கள், 23 ஜூன், 2014

ரயிலின் சுமை...?

 மத்திய அரசு ரயில் கட்டணங்களை ஏற்றியுள்ளது..  இந்த அரசுக்கு  மக்கள் தனித்த பெரும்பான்மை கொடுத்த படியால் அவர்களாக குறைத்தாலன்றி எதுவும் செய்ய இயலாது...

வியாழன், 19 ஜூன், 2014

வௌங்கிடும்....

மருத்துவம்  படிப்பு சம்பந்தமாக எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..  அதன் காரணமாகத்தான் சில வாரங்கள் பதிவுகள் எழுத இயவில்லை..

திங்கள், 9 ஜூன், 2014

மாணவர்கள் எதிர்காலத்திற்காக சில டிப்ஸ்....

பள்ளி இறுதிப் படிப்பைப் முடித்ததும் கல்லூரிகளில் இடம் பிடிக்க இளைஞிகளும் இளைஞர்களும் கடும் போட்டியைச் சந்திக்கிறார்கள்.. வருடா வருடம் இதன் தீவிரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது...

சனி, 7 ஜூன், 2014

தேவையற்ற செயல்....

நேற்று நடந்த சீக்கியர்  கலவரம் மிகக் கொடூரமானது.. நாம் ஏதோ பழைய மன்னர் காலத்திற்குச் சென்றதைப் போல பயங்கரமாக இருந்தது..

செவ்வாய், 3 ஜூன், 2014

இனி ஒரு விதி செய்ய வேண்டும்.....

சற்றே காலதாமதத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் இந்தப்  பதிவை எழுத வேண்டிய சூழல்...  என் நண்பருக்கு நிகழ்ந்த விபத்து பற்றி....

செவ்வாய், 20 மே, 2014

நாடகம் என்பது எப்படி சரி...?

இந்தியாவில் மோடி அலை தமிழகத்தில் லேடி அலை ஆகியவற்றால் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் விக்கித்துத்தான் போயிருக்கின்றார்கள்...

வெள்ளி, 16 மே, 2014

ஊருக்கு நாலு பேர்...

இது சற்று வேடிக்கையாக இருக்கலாம்... ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது...எந்த ஒரு பெரிய விஷயமும் சாதாரணமாகத்தான் ஆரம்பிக்கிறது... அந்தவகையில் பஞ்சாப் மாநிலம் பல முக்கிய விஷயங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறது..

பூங்காற்று திரும்புமா...?

ஒரு நாள் உலகம் நீதி பெறும்....
திருநாள் நிகழும் சேதி வரும்.....

செவ்வாய், 13 மே, 2014

நடக்குமா...?

தேர்தல் முடிவுகள் வருவதற்கு இன்னமும் சில தினங்களே உள்ளன... பல தனியார் தொலைக்காட்சிகள் குறிப்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிகள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்....

வெள்ளி, 9 மே, 2014

தானத்தில் சிறந்தது நிதானம்தான்.....

தோழர் ராமகிருஷ்ணன் தன்னுடைய முகநூலில் ஒரு யூடியூப் பதிவை வெளியிட்டிருந்தார்.... சற்று நேரம் என் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேன்...

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

இது சாத்தியமா...?

இன்று நாளேட்டில் படித்த செய்தி ”சட்டென்று” அதிர்ச்சியை உருவாக்கியது
எப்படி இது.... காரிய சாத்தியம்தானா...? என்று குழப்பமாகவே இருந்தது..

திங்கள், 28 ஏப்ரல், 2014

டமால் டூமீல்..

நான் படம் பார்ப்பதே மிக அபூர்வம்.. அதிலும் புதுப் படங்கள் பார்க்கும் ஆர்வமும் குறைவு நேரமும் குறைவு... தமிழ்ச் சினிமாவைப் பற்றிய எனது பார்வை கமலின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ”எல்லா உலகப் படங்கள் மாதிரிதான் நம்வூர் படங்களும்.. ஆனா என்ன கண் தான் சற்று ஒன்றை...” என்பார்... நல்ல வேளை இதற்கு எதிர்ப்பு ஒன்றும் வரவில்லை..

புதன், 23 ஏப்ரல், 2014

ஜனநாயகம்.....?

தேர்தல் சுரம் நாடெங்கும் பற்றிக் கொண்டு மக்கள் பார்வை முழுவதும் தேர்தலிலும் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதிலும் பரபரப்பாக ஆவலுடன் காத்திருக்கும் போதுதான் விஜய் டிவியில் அந்த நிகழ்ச்சி கடந்த ஞாயிறு (20.4.14) அன்று ஒளிபரப்பாகியது..

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

தயவு செய்து ஆலோசனை சொல்லுங்கள்... ப்ளீஸ்....

எனது நண்பரும் தொழிற்சங்க பிரமுகருமான தோழர் ராமகிருஷ்ணன் தனது முக நூலில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்.. பார்த்ததும அதிர்ச்சியானேன்.. அவரை தொடர்ப்பு கொண்டேன்..

வியாழன், 17 ஏப்ரல், 2014

பீக் அவர்...


நீங்கள் அலுவலக நேரங்களில் மவுண்ட் ரயில் நிலையம் வந்திருக்கிறீர்களா..  பீக் அவர் எனப்படும் சமயங்களில் சென்னையே வாகன நெரிசலில் விழி பிதுங்கித்தான் நிற்கிறது என்பது வேறு விஷயம்.. ஆனால் நான் என்னுடைய அனுபவத்தை வைத்துத்தான் சொல்ல முடியும்

திங்கள், 14 ஏப்ரல், 2014

பின்புலம்

rjini and modi-3
ஒருவர் எந்த இடத்தை பின்புலமாக கொள்கிறார்களோ அதாவது சுருங்கச் சொன்னால் எந்த இடத்தில் பிறக்கிறார்களோ அந்த வாசத்துடன்தான் சிந்திகிறார்கள் என்பது உண்மை..

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

ரஜினி வாய்ஸ்...

இந்து பத்திரிகையில் இந்தச் செய்தியை முதல் பக்கத்தில் இன்று 
 (11.4.14) போட்டிருந்தார்கள்... 

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

அட ராமா....

தேர்தல் களேபரங்கள் எத்தனையோ நடந்து கொண்டிருந்தாலும், இந்தத்  தேர்தல் செய்தி சாதாரண வாக்காளரான என்னையே  அதிர்ச்சிக்கும்  குழப்பத்திற்கும் ஆளாக்கிவிட்டது

வியாழன், 3 ஏப்ரல், 2014

ச்சீய்./ என்னமா பீதிய கௌப்பறாங்க /இது சரியா...?

மூன்று தலைப்பில் தனித்தனியாக செய்திகள்தான்... தனியான விஷயங்கள்தான்... ஆனால் ஓரே பதிவாக போட்டுவிடலாமே என்றுதான் இப்படி ஒரு தலைப்பு..

சனி, 29 மார்ச், 2014

உலகத்தோடு ஒட்ட ஒழுகல்

செய்தி ஒன்று
////ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தின்போது தீர்மானத்தை ஏற்கவில்லை என இந்திய பிரதிநிதி தெரிவித்தார். விவாதம் முடிந்தபின்னர் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன், மொரிஷியஸ் உள்ளிட்ட 23 நாடுகளும், எதிராக சீனா உள்ளிட்ட 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறியது. ஐ.நா. மன்றத்தில் கொண்டுவந்த வரைவு தீர்மானத்தை நிறைவேற்று வதில் இந்தியாவில் உள்ள அரசியல்  கட்சிகளுக்கும் தமிகத்தில் உள்ள கட்சிகளுக்கும் இடையே  இணக்கமோ ஒற்றுமையோ  இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.///
எதிர்த்த நாடுகளில் கம்யூனிச கொள்கை உடைய நாடுகள் உள்ளதாம்... உலகத் தொழிலாளர்களே கண்டு கொள்ளுங்கள்... எந்த நிலையிலும் தங்களுக்கு பாதகம் என்றால் அது என்ன மனித உரிமை மீறலாக இருந்தாலும் அரிச்சந்திரன் கூட  இப்படியெல்லாம் பண்ணுவார்ப்பா....
செய்தி இரண்டு
////மத்திய அரசு நடுநிலையான  முடிவை எடுத்து  இருக்கிறது. இருந் தாலும் 23 நாடுகள், இந்த தீர்மானத்தை  ஆதரித்து இருக்கின்றன. இந்தியாவும் ஆதரித்து இருக்க வேண் டும். ஆனால் வெளியுறவுத் துறை  எடுத்த  முடிவு இது. அமைச்சரகம் இந்த முடிவை எடுக்கவில்லை. இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது பற்றி பேச நிறைய வாய்ப்புகள், அரங்குகள் உள்ளன. அதனால் நல்ல கருத்தை தொடர்ந்து  வலியுறுத்த வேண்டும். என்று சிதம்பரம் கூறினார்.////
சிதம்பரத்திற்குத் தெரியாத விஷயமா...? அது சரி.. நல்ல கருத்தை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும என்கிறாரே சிதம்பரம் அய்யா அவர்கள்.. எது நல்ல விஷயம் எப்படி என்று கொஞ்சம் விளக்கலாம்...
செய்தி மூன்று
///இது குறித்து அமெரிக்க அயலுறவுத் துறைச் செயலர் ஜான் கெர்ரி கூறுகையில், இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் அமைதியை நிலைநாட்டவும் இதுவே தருணம். இலங்கை அரசு, அந்நாட்டு மக்களுக்கு நீதி வழங்கும் என்று நினைத்து, நீதி கிடைப்பதற்காக காத்திருக்க முடியாது. அந்நாட்டில் வாழும் மக்கள், அவர்களது அடிப்படை உரிமையான ஜனநாயகம், நாட்டின் வளத்தையே கேட்கிறார்கள். அதனை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டியது உலக நாடுகளின் கடமையாகிறது. அதற்காகவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாடுபட்டு வருகிறது  //
அமெரிக்காவைப் பற்றி கம்யூனிஸ்டுகளிடம்தான் கேட்க வேண்டும். வண்டி வண்டியாக தகவல் தருகிறார்கள்... இருந்தாலும் அமெரிக்கா தான்தான்  உலக அரங்கில் “நடுநிலையான பெரிய ஆள்தனத்தை” சரியாக காட்டிவிட்டதற்கு பாராட்டலாம்...

தமிழ் உணர்வாளர்கள் கருத்தைப் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் ஈழம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள்..

ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது.. எந்த ஒரு உலக நாடுகளும் ஒன்றுக்கொன்று முரண் படும் நிலையில் ,  அம்மக்கள் வாட்டம் போக்கி  அமைதியாகவும் கௌரவமாகவும்  வாழ  வழிவகை செய்யும் எந்த ஒரு திட்டமும் இந்தத் தருணத்தில் உவப்பானதே என்று தோன்றுகிறது.






வெள்ளி, 28 மார்ச், 2014

எல்லாத்துக்கும் இந்த மக்கள்தான் காரணம்....

IPL போட்டிகள் ஆரம்பமாகும் இந்தச் சமயத்தில் நமது சென்னை சூப்பர் கிங்
சாதாரண விரல் சூப்பர கிங்காக விழி பிதுங்கி நிற்கிறது..

வெள்ளி, 21 மார்ச், 2014

கொலை மாநிலங்கள்

ரீடிஃப் தளத்தில் ஒரு செய்தியைப் பார்த்தேன்.. அதன் சுட்டி
http://www.rediff.com/news/slide-show/slide-show-1-interactive-map-the-real-rape-capital-of-india/20140320.htm

வெள்ளி, 14 மார்ச், 2014

கேயாஸ் தியரி...

கேயாஸ் தியரி என்பதை அடிப்படையாகக் கொண்டு கமல்   'தசாவதாரம்' படம் எடுத்திருப்பார்... ஏன் அத்தனை செலவு பண்ணுவானேன்... நமது நாட்டு நடப்புகளே பெரும் கேயாஸ் தியரியாக இருக்கிறது..

செவ்வாய், 11 மார்ச், 2014

என்ன நாஞ் சொல்றது...?



இம்மாம் பெரிய ப்ளேன் காணாம போனத இன்னமும் கண்டு பிடிக்க முடியல... 
எப்படி technology improved so muchன்னு சொல்ல முடியும்...?

வியாழன், 6 மார்ச், 2014

பத்து அப்துல்கலாம்களும் பதினொரு கேப்டன்களும்

காலையில்தான் பார்த்தேன்... தினமலர் இணையதளத்தில்... ஜெ. கம்யூ கட்சிகள் பேச்சு வார்த்தை தோல்வி என்று...

சில தினங்களாக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை  இழுபறியாக சென்று கொண்டிருந்த போதே ஏதோ இருக்கிறது என்பது சாதாரண பார்வையாளர்களான எனக்கே தோன்றியது.. இறுதியில் பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது...

அம்மா நாற்பதும் நமதே என்று தமிழகமெங்கும் சங்கநாதம் செய்து வருகிறார்.. அவருக்கு பல கணக்குகள் இருக்கிறது.. நாளை பிஜேபிக்கு நாம் ஆதரளவளிக்க நேர்ந்தால் மூன்றாம் அணி அமைந்தால் என பல கணக்குகள்.. அதனால் அவ்வாறு நடந்து கொள்கிறார்..  ஆனால் சில நண்பர்கள் பேசும் போது ”என்ன துணிச்சல் பாருங்க...” ”கூட்டணியை மதிக்க தெரியல..” ”கலைஞர் கிட்ட இருந்தா இப்படி ஆகுமா..” என எத்தனை அங்கலாய்ப்புகள்...

எல்லாம் சரிதான்... ஆனால் தமிழக மககள் ஏகோபித்த ஆதரவு ஜெ.க்கு இருக்கிறதா இல்லையா...? என்ற கேள்விக்கு சரியான விடையை யாரும் தருவதில்லை... கலைஞர் என்ன செய்தாலும் எப்படி பேசினாலும் அவருக்கு
ஆதரவு என்பது நூறு அல்லது தனிப் பெரும்பான்மைக்கு சற்று அருகே என்றுதானே வாக்களிக்கிறார்கள்.. ஆனால் அம்மாவிற்கு...? தோற்றால் சுத்தமாக ஜெயித்தால் பெரும்பான்மைக்கு மேலே படு மிருக பலத்துடன் தானே தமிழக மக்கள் வாக்களிக்கிறார்கள்...

ஏன் கம்யூனிஸ்டுகள் இத்தனையாண்டு காலம் அரசியல் செய்கிறார்களே.. தமிழகத்தில் ஒரு இரு தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க முடிகிறது (தனியாக நின்றால்)  என்கிற கேள்விக்கு மனசாட்சியுடன் பதில் சொல்லட்டுமே..சரியோ தவறோ ஒரு ஜனநாயக சிஸ்டம் நம்மிடம் இருக்கிறது... அதில் சில குறைபாடுகள் இருக்கிறது...  பத்து அப்துல் கலாம்கள் எடுக்கும் முடிவை பதினொரு கேப்டன்கள் மாற்றலாம் என்பதுதான்.... 

அது ஒரு பெரும் குறைதான்...

அதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும..

சனி, 1 மார்ச், 2014

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

உண்மை (தற்போது) உறங்குகிறது...

நேற்று (20.2.14) timesnow விவாதத்தை பார்க்க நேர்ந்தது.. 7 பேரின் விடுதலைப் பற்றி அலசப்பட்டது. மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் கலந்து கொண்டதால் சற்று ஆர்வமேற்பட்டது.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

இந்திய ஜனநாயகம் தலைசிறந்ததே...

ஆயிரமாயிரம் ஊழல்கள்தான்....
பதவிச் சண்டைகள்தான்...
எத்தனை இருந்தாலும் இந்திய ஜனநாயகம் தலை சிறந்தது என்பதையே ராஜீவ் கொலைக் கைதிகளின் தூக்கு ரத்தின் மூலம் நிரூபித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட்.. உன்னதமான சர்வாதிகாரத்தைக் காட்டிலும் பல்வேறு சிக்கல்கள் கொண்ட இந்திய ஜனநாயகமே சிறந்த வழிமுறை என்பது இதன் மூலம் தெரிகிறது... தமிழக மக்கள்  தொடர்ந்த போராட்டத்தையும் இந்த நேரத்தில் நினைவில் கொள்ள வேண்டும.. 

மக்கள் தங்கள் தேவைக்காக இந்த அமைப்பில் தொடர் போராட்டத்தின் மூலமாக எதையும் சாதிக்க முடியும் என்பதும் மக்களுக்கான சரியான அமைப்பாக இந்திய ஜனநாயகம் உள்ளது என்பதும் இதன் மூலம் தெரிகிறது...

சமீபத்தில் ஜெயமோகன் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதன் சுட்டி http://www.jeyamohan.in/?p=43411
என்னுள் பெரும் தாக்கத்தை உருவாக்கிய கட்டுரை.. அது தற்போது எத்தனை பொருத்தமாக இருக்கிறது.....

வாழ்க இந்திய ஜனநாயகம்...

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பெப்பர் ஸ்ப்ரே எம்பியின் சொத்து மதிப்பு....?

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வாசனை குறைவாக இருந்த காரணத்தாலோ என்னவோ மாண்புமிகு எம்பி ஒருவர் அனைவர் முகத்திலும் பெப்பர் ஸ்ப்ரேயை இலவமாக அடித்திருக்கிறார் ..

சனி, 15 பிப்ரவரி, 2014

பின்-நவீனத்துவ ஜனநாயகம்

செய்தி 1
ஒரு தேசம் தன் மீது அன்னியர்கள் படையெடுத்து வருவதால் நாட்டைக் காப்பாற்ற  இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்ததாம்.. அதைக் கேட்டு பல இளைஞர்கள்  நாட்டைக் காப்பாற்ற ராணுவத்தில சேர

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

எந்தப் பக்கம்...?

சமூக அரசியல் ஆர்வலர்கள்/அறிவுஜீவிகள் முதல் டிவி சீரியல்களில் முழ்கும் சராசரி நபர்கள் வரை (பெண்கள் என்று சொல்ல விரும்பவில்லை.. காரணம் டிவிசீரியல் கலாச்சாரத்தில்  ஆண் பெண் வித்தியாசமில்லை) நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பேசுகிறார்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2014

குதிரை வளரட்டும்...

மாண்புமிகு அரவிந்த கேஜ்ரிவா......ல் அவர்கள்... நேற்று ராய்டர் நிருபர் ஒருவருக்குப் பேட்டியளித்திருக்கிறார்.. அதாகப்பட்டது காப் பஞ்சாயத் (KHAP PANCHAYAT) (தமிழில் கட்டப் பஞ்சாயத்து)

வெள்ளி, 31 ஜனவரி, 2014

பயணங்கள் முடிவதில்லை....

இந்த அரசியல்,  சமூகம் போன்றவற்றைவிட்டால் உங்களுக்கு எழுதவே வராதா என்கிறார் என் மனைவி... சரி.. தற்போது அதை விடுத்து வேறு விஷயங்கள் கிடையாதா..? என்றால் இருக்கிறது..

புதன், 29 ஜனவரி, 2014

தீர்க்க தரிசனம்

சன் டிவியில்  மகாபாரதம் ஒளிபரப்பாகிறது...  சன் டிவி காரர்கள்  தீர்க்க தரிசனக்காரர்களா.... இல்லை இப்படித்தான் நடக்கும் என்று முன்பே  தெரியுமா....?

ஓ அதுவும் தீர்க்க தரிசனம்தானோ....?

செவ்வாய், 21 ஜனவரி, 2014

பெரிதினும் பெரிது

கட்டுரை எழுதி ஒரு வாரம்கூட ஆகவில்லை.. அதற்குள் என் நண்பர் ஒருவர் வேறு ஏதாவது எழுதியிருக்கிங்களா அல்லது ஏதாவது பரபரப்பு செய்திகளுக்கு காத்திருக்கிறீர்களா என்று கேட்டார்..

புதன், 15 ஜனவரி, 2014

எது உண்மை...?

இரண்டு மூன்று வாரங்களாக TIMES NOW போன்ற ஆங்கில செய்தி சேனல்கள்
பார்க்கின்றவர்களுக்குத் தெரியும்...

திங்கள், 13 ஜனவரி, 2014

“நான் கடவுளைக் கண்டேன்...”

இதற்கு முந்தைய பதிவில்தான் இறைவன் இருக்கின்றானா என்று எழுதியிருந்தேன்.. ஆனால் இப்போது நான் கடவுளை கண்டேன்.. 

வெள்ளி, 10 ஜனவரி, 2014

ஆம் ஆத்மிகள் உதயம் எதைக் காட்டுகிறது?

நாடெங்கும் புற்றீசல் போல கட்சிகள் அவரவர் அபிலாஷைகளுக்கு ஏற்ப உதயமாவது சகஜம்தான்.. சில காலங்கள் தாக்குபிடிப்பதும் நீர்க் குழிகள் போல உடைவதும் நாம் காணும் காட்சிகள்தான்.. ஆனால் சமீபத்தில் உருவான ஆம்ஆத்மி கட்சியை அப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று டெல்லி தேர்தலில் தன்னை நிரூபித்திருக்கிறது..

செவ்வாய், 7 ஜனவரி, 2014

இறைவன் இருக்கின்றானா...?



இறைவன் இருக்கின்றானா...?
மனிதன் கேட்கின்றான்...
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கின்றான்....

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

காரைக்காலும் டெல்லியும்

கிறிஸ்மஸ் இரவில் காரைகாலில் நடந்த அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி  ஆச்சர்யம் வேதனை ஆகிய வற்றை ஒரு  சேர அளித்திருக்கிறது...... 

காரைக்கால் ஏன் டெல்லியாகவில்லை ? வெண்ணிலாவின்

கட்டுரையை தமிழ் இந்துவில்  படிக்கும்  இதயம் உள்ள எந்த ஆண் மகனும் வெட்கித் தலைகுனிவான்......