வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிரபஞ்சன் அஞ்சலி...


Image result for பிரபஞ்சன்

பிரபஞ்ஜனின் பல சிறுகதைகள் மானுடம் வெல்லும் போன்ற படைப்புக்களை வியந்திருக்கிறேன் .. எல்லாவற்றையும் விட , அவரின் சிறுகதை ஒன்று (பெயர் தெரியவில்லை) ஒரு கிளி ஜோசிய கிழவன் நாள் முழுவதும் போனியாகாமல் இருக்கும் பொது ஒரேயொரு வாழைப்பழம் கிடைக்கிறது . அன்று முழுவதும் கொலை பட்டினி    யாசகத்திற்கு   விருப்பமில்லை ..தனக்கு கிடைத்த வாழைப்பழத்தையும் அந்த கிளிக்கு கொடுத்துவிட்டு பட்டினியோடு படுத்துறங்குவான் என முடித்திருப்பார்.. படித்து முடித்தவுடன் என்னால் என் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.

இதை பற்றி  ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது சொல்ல நினைத்தேன்.. அவரிடம் பேசும்போது தொண்டை அடைத்துக்கொண்டது  என்னால் சொல்லவே முடியவில்லை..

 நண்பர் என்னை அறிமுகம் செய்ய கை கொடுத்துவிட்டு அகன்றார்..


.மறக்கமுடியாத படைப்பாளி ..

அன்னாருக்கு அஞ்சலி

ஞாயிறு, 11 நவம்பர், 2018

பரியேறும் பெருமாள்...

பொதுவாகவே     Off-beat படங்கள் என்றாலே , ஒன்று பிரச்சார நெடியுடன் எடுப்பார்கள் அல்லது அழகுணர்ச்சியில்லாமல் சொதப்பலாக இருக்கும்...

Image result for pariyerum perumal

சமீபத்தில் வந்திருக்கும் காதல், காக்காமுட்டை போன்ற படவரிசையில் பரியேறும் பெருமாள் BABL மிக முக்கியமான படைப்பு.. அழகுணர்ச்சி ததும்ப (aesthetic) யதார்த்தமாக poetic  முடிவுடன் எடுக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் படம் என்றால் நம்பவே முடியவில்லை. 


காக்கா முட்டை வர்க்கக் கண்ணோட்டத்தைப் பற்றி பேசினால்          ப.பெருமாள் தீவிர சாதி ஓடுக்குமுறை பற்றி கதறுகிறது..  இத்தனை உக்கிரத்துடன் ஒரு படம் தமிழில் வந்ததில்லை.  

தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் காணப்படும் சாதீய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைக்கவே பதறுகிறது.   அந்தக் கொலைகார கிழவன் வரும் காட்சியிலும் ப.பெருமாளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற படபடப்பை பார்ப்பவர் மனத்தில் ஆழமாக தைத்துவிடுகிறார் இயக்குனர். 

காதல் படத்தில் அந்த மெக்கானிக் இளைஞன் மனநோயாளியாக பெரியார் சிலை முன்பாக கிடப்பதை சிம்பாலிக்காக காட்டியிருப்பார்கள்.. எத்தனை பெரியார் வந்தாலும் இந்நிலை மாறவில்லை என்பது சோகத்தில் பெரிய சோகம்...

மாரி செல்வராஜ்கள் இவ்வாறு கலைகளில் பதிவு செய்தாலாவது இந்நிலை மாறும் என்று எதிர்பார்ப்போம்..

வாழ்க மாரி செல்வராஜ்...


சனி, 3 நவம்பர், 2018

என் பெயர்............?




ஒரு நாள் உலகம் நீதி பெறும்  என்று நானும் நம்பி வாழ்கிறேன்...
அன்று நீ உலகிற்குத் திரும்பி வா...தாயே...

வியாழன், 25 அக்டோபர், 2018

மீடூ , சபரிமலை...


METOO#  பற்றியும் சபரிமலை பற்றியும்  கருத்தென்ன என்று சில நண்பர்கள் கேட்டார்கள் ...ஒரே அல்லோலகல்லோல படுகிறதே ..

METOO# வில் வரும் பல விஷயங்களில்  பொய்யான தகவல்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான் ..அதே சமயம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதற்கு மறுப்பதற்கில்லை ..அதே சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமானது... அது பெண்ணை பெற்றவர்களுக்கு நன்கு தெரியும் . அதற்கு என்னதான் சட்டங்கள் இருந்தாலும் இவ்வாறான EXPOSE செய்வது தேவைதான் ...அப்போதுதான் பெண்கள் மீதான குற்றங்கள் குறையும் என நினைக்கிறன் 

மேலும் ஜெயமோகன் கூறிய இந்த வரிகள் என்னை துணுக்குற செய்தது ::-

ஆண் உடலில் இருந்து தர்க்கபூர்வமாகப் பெண்ணைப் புரிந்துகொள்வது எளிதல்ல என்று படுகிறது................................ஆணுக்கிருக்கும் இந்த புரிந்துகொள்ளமுடியாமையில் இருந்தே metoo போன்ற இயக்கங்கள் மேல் ஆண்கள் எழுப்பும் அசட்டு கேள்விகள் [இவ்வளவுநாள் ஏன் சொல்லலை? இப்ப மட்டும் என்ன வந்திச்சு? இது விளம்பரம்தானே? – போன்றவை ] எழுகின்றன என நினைக்கிறேன்.  

எத்தனை உண்மை ...ஒரு ஆணாக பிறந்தவனுக்கு பெண்ணின் பிரத்யேக பிரச்னைகள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை..அதனால் ஒரு பெண் இவ்வாறு கூறும் பொது அந்த பெண்ணை சகட்டுமேனிக்கு  தகாத வார்த்தைகளால்  திட்டி தீர்க்கிறான்..இந்த களேபரத்தில் அவள் சார்ந்த சாதி மதம் என்று வேறு புகுந்து விளையாடுகிறது என்பது என் கருத்து..  ஆக பெண்கள் தற்போது அனைத்து துறைகளில் சாதிக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கான பாதுகாப்புக்காக எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கலாம் ..  அதே சமயம் அப்பாவிகள் தாக்கப்படக்கூடாது ..

சபரிமலை விஷயத்திலும் பல்வேறு சாதிய மத தாக்குதல்கள் .. தீர்ப்பை அளித்த நீதியரசர் தீபக் மிஸ்ராவை பற்றி அனைவருக்கும் தெரியும் ..அவர் இந்து தானே ... நமது நாட்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்த தீர்ப்பை அளித்திருக்கிறார் என்றே பார்க்கிறேன்.. எனவே இந்த தீர்ப்பை வணங்கி ஏற்கிறேன் என்றே நான் சொல்வேன் ...

நாகரீக சமூகம் செய்யவேண்டியதும் அதுதான் 

சனி, 29 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் - PART II : ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் ...

முதலில் இந்த சுட்டியை படிக்கவும் 
https://www.thenewsminute.com/article/stalked-trapped-hotel-us-travel-blogger-recounts-sexual-harassment-india-88186

முதல் முறையாக ஒரு இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்
இது என்ன ஒரு கொடுமை இப்படி சிங்கப்பூரில் நடந்துவிடுமா
நடந்தால் என்ன எதிர் விளைவுகள் உண்டு என்பதை சொல்லித்
தெரியவேண்டியதில்லை நாம் இன்னமும் பயணிக்க வேண்டியதூரம் அதிகம்..

 சரி .இது ஒரு புறம் தற்போது சில விடுபட்ட சிங்கப்பூர் செய்திகள் 

-நான் இருந்த நாட்கள் வரை ஒரு தெரு நாயையோ சுற்றி திரியும் மாடுகளையோ பார்க்கவில்லை

* Signalக்கு   பாதசாரிகளும் வண்டிகளும் அத்தனை மரியாதை தருகிறார்கள் 

*பேருந்துக்கு நடத்துனர் கிடையாது ஓட்டுநர் மட்டுமே 

* பேருந்தில் ஏதாவது மாற்றுத்திறனாளி ஏறினால் அவர்களுக்கு பெரிய கதவை திறந்து அவர் ஏறுவதற்க்காக தன் இருக்கையை விட்டு வந்து உதவுகிறார் ஓட்டுநர்

* அனைத்தும் பேருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்க முன்பக்க கதவுகள் வழியாக அனைவரும் ஏறவேண்டும் நடுவில் உள்ள பெரிய கதவு மாற்று திறனாளி ஏறுவதற்கும் அனைத்து பயணிகள் இறங்க மட்டுமே .. யாரும் அதை மீறுவதில்லை ..

* அங்கங்கு மிதிவண்டிகள் கிடக்கின்றன .. அவற்றை தேவைப்பட்டவர்கள் எடுத்து உபயோகம் செய்துகொள்ளலாம் (நம் ஊரில் அவ்வாறு இருந்தால் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் )

* அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு  முக்கியத்துவம் தருகிறார்கள்  .. CYCLING SWIMMING, JOGGING WALKING போன்றவை ...

சென்ற பதிவில் ஒரு நண்பர் சிங்கப்பூரில் காவல் நிலையத்தை நீங்கள் பார்க்கவில்லை ஆனால் எங்கும் இருக்கிறது என்றார்..  இருக்கலாம் ... நான் லிட்டில் இந்தியாவில் மட்டுமே பார்த்தேன் மேலும் 15 வருடங்களுக்கு மேல் சிங்கப்பூர் வாழ் நிரந்தர குடிமகன் என் நண்பர் அவ்வாறு சொன்னதால் அதை பதிவிட்டேன் ..

சரி.. சரி... இவையெல்லாம் நம் நாட்டில் இல்லையா இருக்கிறதுதான்.... சட்டம் இருக்கிறது ...ஆனால் நாம் மதிப்பதில்லை அவ்வளவே ....எனவேதான் சிங்கப்பூர் ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் 



புதன், 26 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் ::: பெரிய பிக் பாஸ் நகரம் ..



சிங்கப்பூரைப் பற்றி பல கட்டுரைகள் தமிழில் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு பார்வையில். இது எனது குறிப்பு.  நான் பார்த்த குர்கான் (GURGAON),  மும்பை. பெங்களூர் ஆகியவற்றை கலந்து சுத்தமாக வைத்தால் அதுதான் சிங்கப்பூர்.  சுத்தமென்றால் உங்கவீட்டு சுத்தம் எங்க வீட்டு சுத்தமில்லை..அத்தனை சுத்தம்.  அவர்கள் சுத்தத்திற்கு தரும் முக்கியத்துவதிற்கு ஒரு உதாரணம். ஒரு சீனர் தன்னுடைய 
நாயை அழைத்துவந்தார் ஒரு கையில் 
நாயை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் ஒரு பேப்பரை                         வைத்திருந்தார் ..  ` 

ஒரு வேளை அந்த நாய் ''காக்கா''   போய்விட்டால்,  இவர் தான் அதை 
அப்புறப்படுத்த சுத்தப்படுத்த வேண்டும்..  

அத்தனை பயம்..   சட்ம்.... சட்டம் .... அதை மூர்க்கத்தனமாக     அமல்படுத்துவதில் சிங்கப்பூர் நிர்வாகம் காட்டும்முனைப்பு உண்மையில் வியக்கவைக்கிறது.   சுத்ததிற்கு இன்னொரு உதாரணம்  ஒரு மெட்ரோ ரயில் பிளாட்பாரத்தில் லேசாக தண்ணீர் கொட்டி விட்டது . நான் அதன் அருகே சென்று விட்டேன் உடனே ஒரு சீன பெண் அதிகாரி அலறினாள்.  தன் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து பணியாளரை அழைத்து அதை துடைக்கவிட்டாள் . இந்த களேபரத்தில் அங்கங்கு மைக்கில் அறிவுப்பு அலறல் .. ஒரு சின்ன விஷயத்திற்கு எதோ வெடிகுண்டு வைத்திருப்பதைப்போல 

 சுத்தம் என்றாலும் ஒழுங்கு என்றாலும் சட்டத்தை நீட்டுகிறது சிங்கப்பூர் நிர்வாகம். அதை போல ஒரு இடத்தில் பிரதான ரோட்டிலிருந்து பாத சாரிகள் நடக்கும் ஒரு சிறு பாதை .. அங்கு ஒரு அறிவிப்பு..  இந்த இடத்தில் பெட்ரோல் வாகனமோ பைக்கோ வந்தால் சிங்கப்பூர் டாலர் 55000 அபராதம் அதாவது ரூ 29 லட்சம் ...சொத்தையே எழுதி வைக்க வேண்டும் .. இருந்தாலும் சீனர்களிடம் எனக்கு பிடித்தது .. அவர்கள் சட்டத்தை மதிக்கும் பண்பு மற்றும் பணிவு .  

.இந்த ஊருக்கு வந்தால் பொதுவாக விடுதி எடுத்து தங்குவது சிறப்பு..  பிறர் வீட்டில்  தங்குவது என்றால்...   ஒருவர் OK.. பலர் என்றால் சிங்கப்பூரின் டிஜிட்டல் கண்பார்வையில் தண்ணீர்  மின்சாரம் போன்றவை  எவ்வளவு செலவாகிறது என்கிற அளவீடுகள் காட்டிக்கொடுத்துவிடும். இங்கு காண்டோ டைப் அல்லது ஹவுசிங் போர்டு வீடுகள்..  ஒன்றை போலவே உள்ளது . தற்போது சென்னையிலும் காண்டோ டைப் பிளாட்டுகள் வந்துவிட்டது .. வீட்டு உரிமையாளர்கள் அனுமதி இன்றி யாரும் உள்ளே வரமுடியாது...  வெளியேயும் செல்ல முடியாது .   இங்கு தொலைந்து போய்விட்டார் என்கிற பேச்சே கிடையாது .. காரணம் ஊர் முழுவதும் பிக் பாஸ் வீட்டை போல காமிரா இருப்பதால் காட்டிக்கொடுத்துவிடும் `.

சில தகவல்கள் 
*இங்கு சீதோஷணம் நம் ஊரை போலத்தான் ஆனால் வியர்க்காது ....
*பெரும்பாலான சாலைகள் நான்கு மற்றும் அதற்க்கு மேல்  lane..சாலைகளில் நெருக்கடிகள் இல்லை.....
* அனைத்து வாகனங்களும் 100 கி மி மேல் செல்கிறது .....
நகரம் முழுவதும் இரவில் ஒளிர்கிறது மின் விளக்கால் வண்ண மயம்தான் ....
பெண்கள்  இரவில் எத்தனை  நேரத்திலும் பாதுகாப்பாக அலைகிறார்கள் ஒரு சின்ன EVE TEASING புகார் கிடையாது (காந்தி கண்ட கனவை நினைவாக்கும்  சிங்கப்பூர்
* LITTLE இந்தியா தவிர வேறு எங்கும் காவல் நிலையத்தை பார்க்கவில்லை ஆனால் எங்கும் போலீஸ் உஷார் நிலையில் இருக்கிறார்கள் ..
க்ரைம் ரேட் வெகு குறைவு 

 பிடித்த விஷயம் :: சீனர்கள் சுறுசுறுப்பு பணிவு உழைப்பு 
பிடிக்காத விஷயம்::: காஸ்டலி நகரம் 
வருத்தப்பட்ட விஷயம்::: பெரும்பாலும் உடல் உழைப்பு ஈடுபடுத்தப்படுபவர்கள்  இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் (சாலை பணி,  கட்டுமான பணி )
நண்பர் செந்தில் சொன்னார் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் பொய்த்த பின் இங்கு பெரும்மையினர் வேலைக்கு வந்ததாக சொன்னார் 
(நண்பர்கள் சூரி செந்தில் மற்றும் லக்ஷ்மணன் அவர்களுக்கு நன்றி )

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

இறைவன் இருக்கிறானா .....

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

 இது கடந்த காலங்களை விட இரட்டிப்பு எண்ணிக்கையிலானது. 

இது இந்திய உள்துறை அமைச்சக தகவல்.(GRIHA MANTHRALAY) 

Image result for ஒரு லட்சத்து பத்தாயிரம் பெண்கள் பாலியல் பலாத்கார

இத்தனை பக்தி பழங்கள்  நிறைந்த நாட்டில் இதுதான் நிலைமை என்றால் - இறைவன் இருக்கிறானா என்று கேட்பதை விட வேறு என்ன சொல்ல 

புதன், 5 செப்டம்பர், 2018

அறிவுள்ள பெண்...

  விமான நிலயத்தில்  இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முறைமை அதாவது புரோட்டோகால் இருக்கிறது . அதை மீறுவது சரியில்லை என்பது என்னைப் பொறுத்த வரை சரியானதே.

 ஆனால் அதற்கான எதிர்வினை அந்தப் பெண் செய்த செயலைக் காட்டிலும் மோசமானதாகவே படுகிறது.  தமிழக முதல்வரை  சில மாதம் முன்பு ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லத் தகாத வார்த்தை சொன்னார்.

 எஸ் வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை அவமதித்தார் என்று வழக்கும் பதியப் பட்டது.

 ஆனால் காவல்துறை என்ன செய்தது என்பது அனைவரும் அறிந்தததே.   இவ்வாறு நடப்பதுதான் உண்மையில் நாட்டுக்கு ஜனநாயகத்திற்கு அச்சறுத்தல் என கருதுகிறேன்.

தன்னை நோக்கி சிறு முனகல் கூட தேச விரோதம் என்பேன் அதே சமயம் நான் என்ன அத்துமீறல் செய்தாலும் அது நாட்டுக்கு நல்லது என்கிற மனோபாவம்  பெரும் ஆபத்தானது.  இதுதான் பெரும் கவலையளிக்கின்ற அச்சுறுத்தல்.

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

ரூபம் இரண்டு


Image result for VISHWAROOPAM 2

ஒரு ஆங்கில ஹாலிவுட் படத்தை பார்த்ததை போல உள்ளது ...நேர்த்தி ...

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

வெற்றிடம் .....

கண்ணீர் அஞ்சலி 







(படம் நன்றி நக்கீரன் )



தனித்து விடப்பட்டது  இந்த நாற்காலி மட்டும் அல்ல தமிழகமும்  .....


திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மாற்றும் ஏமாற்றும் ...

ஹீலர் பாஸ்கர் கைதை ஒட்டி  இந்த மாற்று மருத்துவ முறை விவாத பொருளாக பேசப்படுகிறது ..


நமது வழக்கத்தில் உள்ள அலோபதி மருத்துவ முறை பற்றி அதில் உள்ள குறைகளை பூதகரமாக்கித்தான் இவ்வித மாற்று மருத்துவமுறை பற்றி கதையாடல்     பின்னப்பட்டுள்ளது ..

 உண்மையில் அலோபதி மருத்துவ முறையில் குறைபாடுகள் இருக்கிறது அதை டாக்டர்களே மறுப்பதில்லை. ஆனால் அவற்றில் உள்ளவை குறைதான் தவிர அந்த மருத்துவ முறை தவறு என்று இந்த புதிய விஞ்ஞானிகள் கூறுவது சற்றும் ஏற்கமுடியாது...  அது ஒரு  சொத்தை வாதம் .. பெரும் கதை ..

காசு பார்ப்பது விளம்பரம் தேடுவது போன்றவையே இவர்களின் நோக்கமாக உள்ளது .. அலோபதி மருத்துவம் என்பது உலகலாவியது மேலும் மேலும் திருத்தப்படுவது - ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டது .. எல்லாவற்றும் மேலாக அலோபதி மருத்துவ முறை என்பது வெளிப்படையானது - மூடு மந்திரமில்லாதது என்பதை உணரவேண்டும் .. 

அதை விடுத்தது அதன் மேல் சேற்றை வாரி இறைத்து இந்த மாற்றுக்கள் சொல்பவர்கள் முதலில் தங்களை நிரூபிக்கட்டும் .. 

அதை விடுத்தது மனித உயிர்களுடன் விளையாடக்கூடாது ...

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

கலைஞர் ....


Congress president Rahul Gandhi meets DMK supremo M Karunanidhi

கலைஞரின்  வயோதிகமும் நோயும் அவரை துவள வைத்திருப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது 

கலைஞரின் உடல் நலிவு பற்றி பலரும் பல விமர்சனங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் சொல்லி விட்டார்கள் ..   

முன்பு அசமத்துவத்திற்கு ஆதரவானவர்கள்  அவரை எதிர்த்துக்கொண்டிருந்தார்கள் .. இப்போதும் அவ்வாறே அந்த வகையில் எதிர்க்கிறார்கள்  

தற்போது முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு என்று எதிர்ப்பவர்கள் சிலர்  உண்டு 

 
 தன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களிடம் பேதமில்லை என்கிற பார்வையே கொண்டிருந்தார்   என்னை பொறுத்த வரை அதுதான் என் மனதில் கோபுரமாக அவரை உயர்த்தி வைத்திருக்கிறது 

. தமிழகத்தில் எனக்கு தெரிந்த உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளிடையே   இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம் (கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தவிர ..)

அவரிடம் உள்ள ஒரே குறை அவர் ஆட்சியில் இருந்த போது இந்த கொள்கையை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் அது அவரின் தவறல்ல என்றாலும்..... அதே சமயம் அவர் குடும்பத்தினரின் அலைக்கழிப்புக்கு ஆளானர் என்பதும் ஒரு சோகமே ..

எப்படி இருந்தும் கலைஞரின் இந்த நலிவு வேதனை அளிக்கிறது 

செவ்வாய், 24 ஜூலை, 2018

உண்மை சுடும் ...

https://tamil.thehindu.com/india/article24500604.ece

இன்றைய இந்து நாளேட்டின் சுட்டி ...

அப்போது எத்தனை பொய்கள் சொன்னீர் ...இப்போது நிலத்தடி வாரியம் யார் தலைமையில் இயங்குகிறது ...மத்திய அரசின் கீழ் இயங்குகிறது ...அப்போது அதுதான் அரசின் அதிகார பூர்வ கருத்து..... 

இந்த கருத்தை சொன்னவன் தீவிரவாதி கிறிஸ்துவ மதவாதி பாதிரியாரிடம் பணம் வாங்கினவன் என்று எத்தனை அவதூறு... அவதூறின் எல்லைக்கே சென்றீர்கள் ....இப்போது மத்திய அரசை அப்படி சொல்லுங்கள் பாப்போம்....

 மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா இத்தனை பேரை சுட்டு கொன்றீர்கள் ..

..ரஜினியை விட்டு போராட்டம் செய்பவர்கள் சமூக விரோதி என்றீர்களே  ..  மத்திய அரசின் அதிகார பூர்வ கருத்தை சொன்னதற்காகவா  சமூக விரோதி பட்டம்   ...

ஏதோ எவனோ எடுத்த பொய் வீடியோ போட்டு காட்டினீர்கள் எத்தனை பொய்கள் இப்பொது உண்மை உங்கள் முன் வெளிப்பட்டு நிற்கிறதே பொய் அம்பலப்பட்டு பல் இளிக்கிறதே ...


..புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும் இனியாவது 

வியாழன், 28 ஜூன், 2018

என்றெமதன்னை கை விலங்குகள் போகும் ....

சமீப நாட்களில் என்றுமில்லாத வகையில் என்னை பாதித்த செய்திப்படம் இதுதான்




எங்கே தவறு .........இந்த இழிவை எங்கனம் போக்குவது என்று நாம் தீவிரமாக சிந்திக்கவிட்டால் .....நாம் பெண் குலத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே தீங்கு செய்தவர்கள் ஆகிவிடுவோம் .......

திங்கள், 11 ஜூன், 2018

காலா.....

இன்றைய தினங்களில் வரும் பல குப்பை படங்களில் காலா சற்றே வித்தியாசமான படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை..

 மேலும் எங்களது இலாகாவின் தொழிற்சங்க முன்னணி தோழர் ஆதவன் தீட்சண்யா வசனம் எழுதியுள்ளார் .....

வசனங்களும் மிக கூர்மையாக உள்ளது ....பெரும் பிரச்சார நெடி வாராமல் ஒரு படத்தை எடுப்பது மிக சிரமம்... அதை இயக்குனர்       பா ரஞ்சித் நேர்த்தியாக செய்துள்ளார்...

Image result for KAALA  PICTURE

ரஜினி இந்த படத்தில் இயக்குனருக்கு அடங்கி நடித்திருப்பதை போலத்தான் தெரிகிறது 


 இருந்தாலும்... இருந்தாலும்..... அவர் இயக்கிய மெட்ராஸ் மனதில் ஒட்டியதை போல மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அதே கலைத்தன்மை அவரின் அடுத்த படைப்பில் தருவார் என்கிற நம்பிக்கையில் அவருக்கு வாழ்த்துக்கள்