ஞாயிறு, 3 ஜூன், 2018

தலைகீழ் உலகம்.....

தந்தி டிவியில் வைகோவுடனான பாண்டேயின் கேள்விக்கென்ன பதில் பார்க்க நேர்ந்தது..

 முதல் முறையாக பாண்டேயின் மீதான நம்பிக்கைத் தளர்ந்தது..  அதே சமயத்தில் இது நாள் வரை வைகோவைப் பற்றி சமூக ஊடகங்கள் எத்தனை மீம்ஸ்கள் கேலிகள் கிண்டல்கள் என அவரை நோகடித்திருக்கிறார்கள்... 

அவர் தமிழரில்லை என்று வேறு அவரை அவமானப்படுத்தியிருக்கிறார்கள்...   அவர் ஒரு பஃபூன் போல எத்தனை சித்தரிப்புகள்...   ஆனால் நேற்று அவர் பேட்டியைப் பார்த்த போது  இது ஒரு குருட்டு உலகமடா என்கிற வேதனைதான் மிஞ்சியது..

வைகோ அத்தனை உண்மையும்  போட்டு உடைக்கிறார்.. அதனால்தான் அவரை கோமாளி என்கிறார்கள் ..

மனதில் பட்டத்தை உள்ளொன்று வைத்து புறம் பேசத் தெரியவில்லை அதனால் அவரை பஃபூன் என்கிறார்கள்...

இதுதான் உலக நியதி போலும்...

எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காத எந்த மக்கள் பிரச்சனைகளையும் பற்றித் தெரியாத  வயதாகிய பிறகு  இளைப்பாருவோமே என நினைப்பதற்கு அரசியல் என்பது பொழுது போக்கு அல்ல...  

அது ரத்தம் சிந்தாத யுத்தம் என்பதே தெரியாது  ஆளும் வர்க்கம் சொன்னதை  கடமையாக ஏற்று மக்களுக்கு உபதேசம் செய்துவிட்டு போகும்  மேனாமினிக்கிகள் எங்கே...

வாழ்நாள் முழுவதும் மக்கள் பிரச்சனைகள் என அலைந்து பல வழக்குகள்  பல அச்சுறுத்துதள்  சந்தித்து வரும்  வைகோ எங்கே...

உண்மையான கதாநாயகன் இவர்தான்....  ஆனால் நாம் பொய்களின் பின்னால் அணிவகுக்கிறோம்...

 வைகோ போன்ற  முற்போக்கு சக்திகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் போன்ற மக்கள் நேசர்கள் பக்கம் நிற்பதால் மட்டுமே சாதாரண சாமானிய மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது எத்தனை எளிய உண்மை....

THE GREATEST THINGS IN THE WORLD ARE THE SIMPLEST TRUTH.....

1 கருத்து :

வேகநரி சொன்னது…

வைகோவை தமிழரில்லை என்று அவமானப்படுத்துவது கீழ்தரமான செயல்.
ஆனா வைகோவை முற்போக்கு சக்தி,மக்கள் நேசர் என்று நீங்க சொல்வதெல்லாம் ரொம்ப அளவுக்கதிகமான ஓவர். குறுகிய இனவெறியை பயன்படுத்தி அரசியல் செய்பவர் வைகோ. இவருடைய நோக்கம் தமிழக நலன்கள், இந்திய நலன்கள் இல்லை. இலங்கை எல்டிடிஈயின் நலன்கள்.