ஊரிலுள்ள ஏரிகளையும் குட்டைகளையும் பிளாட் போட்டார்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்... ஆற்றையே ஆக்கிரமித்து வீடு கட்டினார்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.. ஆற்று மணலை கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.. தடுத்தவரை கொலை செய்தார்கள்..... அதையும் பார்த்துக் கொண்டிருந்தோம்... மழை நீர் எங்கே போவேன் என்று ஊருக்குள் வந்து மிரட்டுகிறது...
பிளாஸ்டிக் பைகளை பாவித்தோம்.. அதை பூமியில் அப்படியே போட்டோம்...புவியை மாசு படுத்தினோம்.. வெப்பமடைய வைத்தோம்... கடலிலிருந்து வானம் செல்லும் நீர்த் துளிகளை அதிகமாக்கினோம்... அதனால் வெப்ப மண்டலத்தில் மாற்றம் வரக் காரணமானோம்... பொய்த்தும் கெடுத்தது தற்போது பெய்தும் கெடுக்கிறது என்று இயற்கையை குறை சொல்கிறோம் ... வெள்ளத்தைக் குறைகூறுகிறோம்...
எந்த ஆள் பவர்களை குறை சொல்வது...
நம்மை நாமே திருத்திக் கொள்ளாவிட்டால்....
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக