பல் இளித்துவிட்டது நமது ஓட்டு வங்கி அரசியல்... ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கக் கூடிய அம்சம் இப்படி பலவீனமான போனது வரலாற்றுச் சோகம்தான்...
காவிரி விஷயத்தில் உண்மையாகப் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தவிர்த்து எந்தக் கட்சிக்கும் ஆத்மார்த்தமான நிலைபாடே கிடையாது.. எப்படி அரசியல் பண்ணலாம்.. என்ன லாபம் கிடைக்கும் என்பதையே குறிக்கோளாகச் செயல்படும் ஓட்டுக் கட்சிகள் சுயலாபத்தைத்தான் பார்ப்பார்கள் என்பது தெளிவாகிவிட்டது.. இந்த ஓட்டரசியல் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் விட்டுவைக்கவில்லை.. அவர்களாலும் தமிழகத்தில் ஒரு நிலைபாடும் கர்நாடகத்தில் ஒரு நிலைபாடும்தான் எடுக்க முடிகிறது...
இதை வைத்து சீமான்கள் வளர ஒரு ராஜபாட்டை வேறு போட்டுவிட்டார்கள்... அனைத்து கட்சிகளும் அவரவர்கள் அரசியல் லாபம் பார்த்து விட்டார்கள்..
மீண்டும் உண்மை தனித்து விடப்பட்டிருக்கிறது...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக