நாட்டில் நடக்கும் கொடுமைகள் அதுவும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் என்னை போன்ற சாதாரண பிரஜைகளை கலக்கமுறவும் மன ரீதியாக பாதிக்கவும் செய்கிறது ... என்னை சந்திக்கும் என்னை போன்ற பல பெற்றோர்கள் அவ்வாறே கருதுகின்றனர்..
இந்த சமயத்தில் எஸ் வி சேகர் பெண் பத்திரிகையாளர்களை பற்றிய செய்தியை பகிர்ந்ததும் பலரை முகம் சுழிக்க வைத்துள்ளது ..
இந்த இடத்தில் இரு பிரமுகர்கள் கமல் அவர்களும், மூத்த வழக்கறிஞர் சாந்தகுமாரி அவர்களும்கூறிய வார்த்தைகள் முக்கியமானதாக பட்டது ..
''பெண்களை ஒழுக்கமாகவும் ஆடைகளை சரியாக உடுத்திக்கொள்ள சொல்லும் சமூகம் ஒரு ஆணை எப்படி வேண்டுமானாலும் இரு என்ன வேண்டுமானாலும் செய் என்பது எப்படி சம நீதி ஆகும் .. ''என்று கேட்டார்கள்
ஒரு ஆண் பிள்ளையை ஒழுக்கமாக இரு.. பெண்களை மதிக்க கற்றுக்கொள் என்று ஏன் சொல்வதில்லை... ஆண்களை நெறிப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம்.... இல்லையேல் சமூகம் கெட்டுவிடும் .....
சமூக சிந்தனையாளர்கள் ஜனநாயகவாதிகள் இந்த ஆண் சமூகத்தை நெறிப்படுத்த வேண்டிய காரியத்தை செய்யவேண்டிய தருணம் இது .....
1 கருத்து :
சாந்தகுமாரியின் கருத்துக்கள் தமிழர்களுக்கு அவசியமானனவை
கருத்துரையிடுக