கைகள் நடுங்குகின்றது…
இதை எழுதவே என்னால் முடியவில்லை.. இப்படியும்
ஒரு அக்கிரமம் உண்டா… ? நடக்குமா…?
மனிதன் விலங்கைக்
காட்டிலும் உயர்ந்தவன் என்று இனி எப்படிச் சொல்ல முடியும்…. எந்த விலங்கும், நாயோ பன்றியோ
சிங்கமோகூட தன் இனத்தை இப்படிச் செய்யத் துணியாதே…..
மகளே அசிஃபா….
உன்னை இழந்து தவிக்கும் கோடான கோடி தந்தைகளின் சார்பில் எங்கள் கையறு நிலைகளின் சார்பில் எங்களை மன்னித்துவிடு…
உன் தந்தை “ நான்
எங்கும் தேடினேன்… ஆனால் கோவிலில் தேடவில்லை.. காரணம் அது புனிதமான இடம்…“ என்றார்….
அவர் கொடுத்த மரியாதை
யாருக்கு… வெட்கித் தலைகுனிகிறோம்..
ஒரு நாள் உலகம்
நீதி பெறும்
திருநாள் நிகழும்
சேதி வரும்
அப்போது மட்டும்
நீ இந்த உலகில் மீண்டும் வா….
உன்னை பாதுகாப்போம்…
3 கருத்துகள் :
வேதனையின் உச்சம்.
நினைக்கும்போதெல்லாம் நெஞ்சு நடுங்குகிறது.
வேதனையின் உச்சம்.
நினைக்கும்போதெல்லாம் நெஞ்சு நடுங்குகிறது.
வருகைக்கு நன்றி
'பசி'பரமசிவம் ...வேதனைதான்
கருத்துரையிடுக