என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய
புலனாய்வு அமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில்
ஓட்டுக்கு விடப்பட்டது.. இது ஓட்டுக்கு விடப்பட்டதற்கு காரணம் ஓவெசி AIMIN கட்சியின்
தலைவர்..
இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று சண்டமாருதம் செய்கிறது திமுக மற்றும்
விடுதலை சிறுத்தை கட்சிகள்..
திமுக சொல்லும் காரணம் இதுதான்…
‘’ சிறுபான்மை மக்களின் மீது இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படக்கூடாது. சிறுபான்மை மக்களின் மீது நடத்தப்படும்
தாக்குதல்களை நிறுத்தவும் இச்சட்டத்தில் வழிவகை
காணவேண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு திருத்தங்கள் அரசியல்
சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்த புது அதிகாரத்தையும்
காவல்துறைக்கு வழங்கிடவில்லை யென்பதோடு, வலைதளங்களில் பரப்பப்படுவதுபோல புதிய எந்த
பிரிவுகளையும் கூடுதலாக சேர்க்கவும் இல்லை.’’
கம்யூனிஸ்டுக்கட்சிகள்
இந்த சட்டத்தை எதிர்த்தார்கள்… அதைப்போல ஓட்டுக்கு வந்தபோது
அதை எதிர்த்தும் வாக்களித்தார்கள் ..
ஆனால் இத்தனை காரணங்கள்
சொல்லி இதனால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஆதரித்து ஓட்டளிக்கிறார்கள் திமுக
மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள்..
இது உலக மகா விசித்திரம்..
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக