புதன், 28 ஆகஸ்ட், 2013

சட்டத்தின் முன்......?

ஆசாராம் பாபு என்கிற சன்யாசி அல்லது godman பற்றிய செய்திகள் தெரியுமா...?
ராஜஸ்தானில் உள்ள தன்னுடைய ஆஸ்ரமத்தில் அருள்பாலிக்கும் ஆள்தான் ஆசாராம்... ரொம்ப ஆசாராமான ஆள் போலும்... அவர் மீது 15 வயதுள்ள சிறுமி பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார்.. அதுவும் டெல்லியில் வந்து புகார் கொடுத்துள்ளார். ஏன் அப்படி..? அந்த ஆள் மிகவும் அரசியல் செல்வாக்கு உடையவராம். அதனால்.

நேற்று நடந்து timesnow விவாதத்தில் பங்கேற்ற மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த  பிஜேபி எம்எல்ஏ ஆசாராம் ஒரு சாமியார். அவர் காங்கிரஸ்சை அடிக்கடி விமர்சித்தார். அதனால் இது ஒரு அரசியல் காழ்பு காரணமானது என்றவரை அர்னாப் தன் கேள்விக் கணைகளால் வெளுத்து வாங்கினார். அந்த ஆள் நிகழ்ச்சியை விட்டே வெளிநடப்பு செய்துவிட்டார்.. காங்கிரசை கேட்டால் பிஜேபி மீது புகார் சொல்கிறார்கள்.. பிஜேபியை கேட்டால் காங்கிரஸ் மீது புகார் சொல்கிறார். ஒரு வழியாக  FIR பதியப் பட்டு அவரிடம் விளக்கம்(?) கேட்கப் பட்டிருக்கிறது.. அந்த (ஆ)சாமியும் நான்கு நாட்களுக்குப் பிறகு விளக்கம் சொல்வாராம்...  

சட்டத்தின் முன் அனைவரும் சமம்.. நம்புவோம்...

கருத்துகள் இல்லை :