வியாழன், 18 டிசம்பர், 2014

கற்பனையில் நடக்குமா....?

கற்பனை செய்துபார்க்க முடியாத கொடூரம் பேஷாவர் நகரின்  ராணுவப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் தலிபான்கள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான   தாக்குதலில், 132 குழந்தைகள் உட்பட 141
  பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்கிற செய்தியை நம்பவே முடியவில்லையே..

.

இது மனிதத்திற்கு எதிரான தாக்குதல்....


கனவுகளுடன் பள்ளிக்குப் புறப்பட்டுச் சென்ற பிஞ்சுகள் 

செவ்வாய்க்கிழமை காலை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், துணை ராணுவப் படை சீருடையில் வந்த 9 பயங்கரவாதிகள், அந்தக் கொடூரச் செயலில் இறங்கியிருக்கிறார்கள். ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கிறார். மற்றவர்கள் ஒவ்வொரு வகுப்பறையாகச் சென்று, மாணவர்களைத் தேடித் தேடி வேட்டையாடியிருக்கிறார்கள். பல மாணவர்கள் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆசிரியை ஒருவரை நாற்காலியில் கட்டிவைத்து உயிரோடு கொளுத்தியிருக்கிறார்கள் தலிபான்கள். நடப்பது என்னவென்று புரியாமலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள் குழந்தைகள். 7 மணி நேரம் நடந்த இந்த கோரத்தாண்டவத்தில் 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்திருக்கிறார்கள். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.


“வடக்கு வஜிரிஸ்தானில் எங்கள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகத்தான் இந்தத் தாக்குதலை நடத்தினோம். எங்கள் வலி ராணுவத்துக்கு இப்போது புரியும்” என்று துளியும் இரக்கமில்லாமல் பேசியிருக்கிறார் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது கொரசானி. 

இப்படி பேட்டியளிக்க எப்படி முடிகிறது....? 

எந்த கடவுள் எந்த மதம் இப்படி சொல்லும்...?

கருத்துகள் இல்லை :