வியாழன், 30 ஜூன், 2016

மனவலியை பொறுக்க முடியவில்லை....

உயிர் வலியைவிட மன வலி பொறுக்க முடியவில்லையே.....

அந்தச் சின்னப் பெண் சுவாதி ரத்த ஆற்றில் விழுந்து கிடந்தது முதல் நடைபெறும் விஷயங்களால் நிச்சயமாக அனைவரும் கடும் மன அழுத்தத்திற்கும் மன  வலிக்கும் ஆளாயிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.. ஏன்... எதற்கு.. எப்படி... என்று பல விவாதங்கள் அனைத்து ஊடகங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன.. 

இதில் சாதி மதச் சாயங்கள்,  சாய்வுகள் என்று ஒரு பக்கம் விவாதம் களைக் கட்டியிருக்கிறது... இந்த நாட்டில் ஏதோவொரு சாதியில் , ஒரு மதத்தில்  பிறந்துதான் தீரவேண்டும் ... அது யார் செய்த விதி... யாரை நொந்து கொள்வது ...? 

நடிகர் மகேந்திரன் முகநூலில் தனக்கு வந்ததை பகிரப் போய் அதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது... 

கொலை செய்யப்பட்டவள் ஒரு சாதி  ஒரு மதம்.. கொன்றவன் ஒரு சாதி அல்லது மதம்.. அதற்கு யார் என்ன செய்ய முடியும்... நீ அதுவானால் அதைப் பற்றிப் பேசாதே என்பது ஒரு கலாச்சார போலீசிங் தனம்தான்... அவரவர் கோபத்தை அவரவருக்குத் தோன்றுவதைப் போல தெரிவிப்பார்கள்தான்... மகேந்திரன் கிட்டத்தட்ட பிஜேபி என்கிற முத்திரையே குத்திவிட்டார்கள்...

முதுகின் குறுக்கே நூல் இருந்தால் பேசக் கூடாது என்றால் சிரிப்புதான் வருகிறது.. அப்படி தடை போட இவர்கள் யார்...?  விஞ்ஞான ரீதியில் அப்படி நிரூபிக்க முடியுமா..?  யார் முன்னே நிரூபிப்பது.....?  நிருபித்தாலும் அதை சரியென்று யார் சொல்ல முடியும்...? உண்மையில் ஆதிக்க சாதி என்பது இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் இருக்கும்தான்.. ஜெயமோகன் சொல்வதைப் போல பிராமணர்கள்,  ஜனநாயகத்திற்குத் தர வேண்டிய விலைதான் இட ஓதுக்கீடு மற்றும் ஆதிக்க சாதி பட்டம் என்பார்.. தொழிற்சங்கத் தலைவர்  டேவிட் ஞானைய்யாவிடம் நான் இதைப் பற்றி கேட்டதற்கு புராண காலத்தில் இருந்ததுதான் ரிசர்வேஷன் தற்போது இருப்பது DE-RESERVATION என்று கூறினார் .  அவர் கூறுவதும் ஜெயமோகன் சொல்வதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான்.. அதாவது வெவ்வேறான பாஷையில் .....
சுவாதி பிரச்சனையில் அவள் பிண்ணனிதான் முற்போக்கு மற்றும் மாதர் இயக்கங்கள் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை என்கிற குற்றச் சாட்டு பலமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது..

என்ன செய்ய முடியும்.. அவளை குற்றுயிராக வெட்டி வீழ்த்தியவனைக் கூட யாரும் பிடிக்க முயலவில்லை .. நிழல் கமல்கள் ரஜினிகள்  முஷ்டியை உயர்த்தவில்லை.. விஜய்கள் ஆள்காட்டி விரலை மடக்கவில்லை.. சிக்லெட் சாப்பிட்டுக் கொண்டு அஜித்கள் நடந்து வந்து காப்பாற்றவில்லை... அதை நிழலில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்கள் அவர் ரசிகப் பெருமக்கள்...

உடுமலை சங்கர் படுகொலை காட்சியே போட்டுக் காட்டினார்கள் அப்போதும் யாரும் அந்தக் கொலையாளிகளை பிடிக்க முயலவில்லை... 

இது ஒரு பொதுப் புத்தியாகத்தான் இருக்கிறது..

நமக்கேன் வம்பு என்பது ஒரு புறம்... போலீஸ் கேஸ் என்று வந்தால் பிரச்சனை என்று மறு புறம்.. பாதிக்கப் பட்டவர் சாதி என்ன மதம் என்ன அதன் மூலம் இயக்கங்கள் நடத்தலாம் என்பது மறுபுறம் என்ன அனுகூலம் பெறலாம் என்பது இன்னொரு புறம்..

நாம் போகவேண்டியது வெகு தூரம் என்பது தெரிகிறது....

5 கருத்துகள் :

ஸ்ரீமலையப்பன் சொன்னது…

எல்லா பிளாக்லயும் இதான் வைரல் ஹிட்

BADRINATH சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ஸ்ரீராம்.....

உயிர்நேயம் சொன்னது…

சகோதரி படுகொலை அதிர்ச்சியானதுதான். கொலை நடந்தது காலை 6.10 மணிக்கு. இங்கு எல்லோருமே சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு போன்ற ரயில் நிலையங்களை, கோயம்பேடு பேருந்து நிலையம் போல நினைத்துக் கொள்கிறார்கள். பேருந்து நிலையத்தில் இந்த நேரத்தில் ஈ மொய்ப்பது போல ஆட்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.

ஆனால், காலை 6.30 மணி வரை ஒரு நான்கைந்து நபர்கள் மட்டுமே முழு ரயில் நிலையத்திலும் இருப்பார்கள். காலை 7.00 மணிக்குத்தான் பீக்-அவர் ஆரம்பிக்கும். அலுவலகம் போகும் நபர்கள் மொய்க்கத் தொடங்குவார்கள். அதனால் அந்நேரத்தில் இந்த கொலையை ஓரிரண்டு பேர்தான் பார்த்திருக்க வாய்ப்பு உள்ளது. அலறல் கேட்டு தள்ளி நின்றவர்கள் கவனிப்பதற்குள் அவன் ஓடியிருப்பான். அதனால் கொலையை பார்த்தவர்கள் நூறு பேர் இருப்பார்கள் என மீடியா சொல்லும் கதையை நம்ப வேண்டாம். ஒருநாள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் காலை ஆறு மணிக்கு வந்து கவனியுங்கள். உங்களுக்கே புரியும். நான் சில நாட்களில் இரவுப் பணியை முடித்துவிட்டு, காலை 6.00 மணிக்குத்தான் ரயில்வே நிலையத்திற்கு வருவேன். ஓரிரண்டு பேர்தான் இருப்பார்கள். சில நாட்களில் துடைத்து விட்டது போல் இந்த நிலையங்களில் ஆட்களே இருக்க மாட்டார்கள். பண்டிகை நாட்களில்தான் காலையில் கூட்டம் இருக்கும்.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....
உயிர்நேயம்.. ..நெடிய மற்றும் நல்ல சிந்தனை

silanerangalil sila karuththukkal சொன்னது…

15 வருடங்களாக நான் வந்து போயிருக்கிறேன்..6.30 காலை செங்கல்பட்டு ரயிலுக்கு சற்றே அதிக மக்கள் காத்திருப்பார்கள்....நானும் பார்த்திருக்கிறேன்...நன்றி