வியாழன், 4 ஆகஸ்ட், 2016

தையலை உயர்வு செய்கிறாயோ இல்லையோ... காப்பாற்று....

தஞ்சை அருகே இளம் பெண் கற்பழித்துக் கொலை...
விழுப்புரம் அருகே இளம் பெண் மண்ணென்ணை ஊற்றிக் கொலை...
வட இந்தியாவில் டெல்லி கான்பூர் பிரதான சாலையில் காவல் நிலையம் அருகே தாயும் மகளும் கற்பழிப்பு....

உண்மையில் உலகெங்கும் அதிகம் கற்பழிப்பு நடக்கும் நாடு நமது நாடுதானா... ( இதில் முதல் இரண்டு ரேங்கா... கேவலம்..)...

என்ன ஆயிற்று நம் நாட்டு ஆண்களுக்கு... உண்மையில் ஏதோ போதாமை குறைபாடு இருக்கும்... உடனடியாக ஒரு கவுன்சலிங் அனைத்து தரப்பு ஆண்களுக்குத் தர வேண்டும் என்றே தோன்றுகிறது...

ஊடகம் பெருகியதால் இத்தனை செய்திகள் என்பதில் ஒரளவு உண்மைதான்... முன்பு நடந்ததை வெளிக் கொண்டு வராத காரணத்தால் இதைப் பற்றி நமக்குப் பெரிதாகத் தெரியவில்லை....

ஆனால் உண்மையில் உடனடியாக ஒரு நல்ல கல்வி ஆண்களுக்கு அவசியம்... பெண்கள் என்றால் சக மனிதர்கள்தான் என்று....

கருத்துகள் இல்லை :