கந்து வட்டிக் கொடுமையை என்ன வென்று சொல்வது...?
எரிந்து போன அந்த குழந்தைகளை பார்க்கவே ஐயோவென்று இருக்கிறது..
ரத்தத்தை அட்டையை விட அதிகமாக உறிஞ்சும் இந்தக் கந்து வட்டியை அதை வசூலிக்கும் மனிதமே இல்லாத இரண்டு கால் ஜந்துக்களை மனிதர்கள் வகையிலே சேர்க்க கூடாது..
இந்த நாயினும் இழிவானவர்கள் கட்சி பேதம் இல்லாது விஷச்செடி போல் பரவி இருக்கிறார்கள் ...
அனைத்து சட்டங்களையும் தன் வசம் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார்கள் ...
எத்தனை சட்டங்கள் போட்டாலும் அது இவர்களை ஒன்றும் செய்வதில்லை..
முதலில் மேலும் ஒரு ஏழை மரணிக்கும் முன் தடுக்கவேண்டியது இந்தக் கந்துகொடுமையைத்தான் ,,,
2 கருத்துகள் :
முதலில் இதை தடுப்போம் ...
சரியாக சொன்னீர்கள். மோசமான கந்து வட்டிக் கொடுமையை முதலில் தடுப்போம்.மேலும் எத்தனையோ தடுக்கபட வேண்டிய, மெரினாவில் புர்ச்சி? செய்யபட வேண்டிய சமூக கொடுமைகள் இங்கே உண்டு.
மெர்ஸல் படம் தடைசெய்யபடவும் இல்லை ஆனால் அதற்கு எதிரான கருத்து தெரிவித்ததிற்கே பலர் மெர்ஸல் படம் பற்றி மிகவும் கவலை கொண்டுள்ளார்கள் தமிழகத்தில் எடுத்த பேட்டி பார்த்தேன் மெர்ஸல் படத்துக்கு ஆதரவாக ஆவேசமாக பேசுகிறார்கள். ஆனால் தமிழ் பேசவே மிகவும் சிரமபடுகிறார்கள். தமிழில் தான் பேட்டி நடந்தது.
நானும் நண்பர்களும் நகைசுவையாக இதை பார்த்தோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேகநரி
கருத்துரையிடுக