வியாழன், 25 அக்டோபர், 2018

மீடூ , சபரிமலை...


METOO#  பற்றியும் சபரிமலை பற்றியும்  கருத்தென்ன என்று சில நண்பர்கள் கேட்டார்கள் ...ஒரே அல்லோலகல்லோல படுகிறதே ..

METOO# வில் வரும் பல விஷயங்களில்  பொய்யான தகவல்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான் ..அதே சமயம் வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்பதற்கு மறுப்பதற்கில்லை ..அதே சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமானது... அது பெண்ணை பெற்றவர்களுக்கு நன்கு தெரியும் . அதற்கு என்னதான் சட்டங்கள் இருந்தாலும் இவ்வாறான EXPOSE செய்வது தேவைதான் ...அப்போதுதான் பெண்கள் மீதான குற்றங்கள் குறையும் என நினைக்கிறன் 

மேலும் ஜெயமோகன் கூறிய இந்த வரிகள் என்னை துணுக்குற செய்தது ::-

ஆண் உடலில் இருந்து தர்க்கபூர்வமாகப் பெண்ணைப் புரிந்துகொள்வது எளிதல்ல என்று படுகிறது................................ஆணுக்கிருக்கும் இந்த புரிந்துகொள்ளமுடியாமையில் இருந்தே metoo போன்ற இயக்கங்கள் மேல் ஆண்கள் எழுப்பும் அசட்டு கேள்விகள் [இவ்வளவுநாள் ஏன் சொல்லலை? இப்ப மட்டும் என்ன வந்திச்சு? இது விளம்பரம்தானே? – போன்றவை ] எழுகின்றன என நினைக்கிறேன்.  

எத்தனை உண்மை ...ஒரு ஆணாக பிறந்தவனுக்கு பெண்ணின் பிரத்யேக பிரச்னைகள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை..அதனால் ஒரு பெண் இவ்வாறு கூறும் பொது அந்த பெண்ணை சகட்டுமேனிக்கு  தகாத வார்த்தைகளால்  திட்டி தீர்க்கிறான்..இந்த களேபரத்தில் அவள் சார்ந்த சாதி மதம் என்று வேறு புகுந்து விளையாடுகிறது என்பது என் கருத்து..  ஆக பெண்கள் தற்போது அனைத்து துறைகளில் சாதிக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கான பாதுகாப்புக்காக எந்த நடவடிக்கையையும் ஆதரிக்கலாம் ..  அதே சமயம் அப்பாவிகள் தாக்கப்படக்கூடாது ..

சபரிமலை விஷயத்திலும் பல்வேறு சாதிய மத தாக்குதல்கள் .. தீர்ப்பை அளித்த நீதியரசர் தீபக் மிஸ்ராவை பற்றி அனைவருக்கும் தெரியும் ..அவர் இந்து தானே ... நமது நாட்டு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இந்த தீர்ப்பை அளித்திருக்கிறார் என்றே பார்க்கிறேன்.. எனவே இந்த தீர்ப்பை வணங்கி ஏற்கிறேன் என்றே நான் சொல்வேன் ...

நாகரீக சமூகம் செய்யவேண்டியதும் அதுதான் 

கருத்துகள் இல்லை :