வியாழன், 23 ஏப்ரல், 2015

ராகுல் காந்தியும் net neutralityயும்


Image result for ராகுல் காந்தி

ராகுலை பிறகு பார்ப்போம்... முதலில் net neutrality
சமீப காலமாக net neutrality என்கிற பதத்தை கேள்விபட்டிருக்கலாம்... net neutrality என்றால் என்ன என்பதைப் பற்றி தெரியாதவர்களுக்குச் சொல்லிவிடலாம்... அதாவது ஒரே வரியில் இணைய சமத்துவம். 

தற்போது நாம் பார்க்கும் பல இணைய தளத்தில் அதன் வேகம் நாம் கொடுக்கும் காசுக்கு ஏற்வாறு மாற்றுவது என்பது முதல் திட்டம் பிறகு  செல்பேசிகளில் பிரபலமாக விளங்கும் APP கள் மூலமாக அந்த APPகாரர்கள் டேட்டாவுக்கு தக்கவாறு இணைய நிறுவனங்கள் காசு வாங்கும்... அந்த APPகாரர்கள் அந்தக் கட்டணத்தை உபயோகிப்பவர் தலையில்தான் கட்டுவார்கள்... இப்படியே ஃபேஸ்புக்  whatsapp என்று இந்த இணைய சேவைக்காரர்கள் நாளை விஸ்தரிப்பு செய்து  ஆக்கிரமிப்பு செய்வார்கள்..

சுருங்கச் சொன்னால் எங்கும் காசு எதிலும் காசு என்பதுதான்... net neutrality பற்றி மேலதிகமாக நாம் இணையத்திலேயே தெரிந்து கொள்ளலாம்... 

சரி.. இப்படி வணிகமயப்படுத்துதல் காரணமாக இணையத்தை மேலும் மேலும் அதிகமாக பாவிக்கும் இந்தியர்கள் குறிப்பாக இளைஞ்ர்கள் பாதிப்படைவார்கள்....

இந்த அயோக்கியத்தனத்தை எதிரத்து ஒரு குரல் அதுதான் யாரை இளவரசர் ராஜாதிராஜா என்றெல்லாம் கிண்டலாக பிஜேபிக்காரர்கள் கூறி வந்தார்களோ அந்த ராகுல் காந்தி குரல் எழுப்பியிருக்கிறார்..

அது மட்டுமா... விவசாயிகள் தற்கொலை net neutrality என்று இரண்டு நாட்கள் முன்பு பாராளுமன்றத்தில விளாசித் தள்ளியுள்ளார்....

பல இளைஞர்கள் எழுத்தாளர்கள் சமூக ஆர்வலர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்திருந்தாலும், .ராகுல் அதைப் பற்றி பேசும் போது இந்தியாவெங்கும் ஒரு முக்கியத்வம் பெறுகிறது... நமது தொலைத் தொடர்பு மந்திரியையும்  "இந்த அரசும் net neutrality பாதுகாக்கும் அரசுதான்..அதற்கு நாங்கள் என்றும் ஆதரவாகயிருப்போம்..." என பேசவே வைத்துவிட்டது...

எத்தனை குறைகள் இருக்கட்டும்.. இதற்காகவே....

ராகுலை மனதார பாராட்டுவோம்....

கருத்துகள் இல்லை :