நேற்று புதிய தலைமுறையில் கலைஞர் வசனம் எழுதப் போகும் ராமானுஜர் நாடகம் பற்றிய சர்ச்சை நேர்பட பேசு நிகழ்ச்சியில் காண நேரிட்டது...
கலந்து கொண்ட அனைவரும் மிகச் சரியாக sober ஆகப் பேசியதாகத்தான் தோன்றியது... பிராமண சங்க நிர்வாகி பேசியதுகூட அவர் கோணத்தில் நியாயமாகத்தான் தோன்றியது...
பேசியதில் பத்ரி சேஷாத்ரி பேசியது ரசிக்கும்படி இருந்தது... சிறப்பான நிகழ்ச்சி..
கமல் தசாவதாரத்தில் காட்டியது போல பெரும் எதிர்ப்பின் எதிர் நீச்சல் அடித்தவர் ராமானுஜர்... சாதி பாகுபாட்டை அன்றே எதிர் கொண்டு அனைவருக்கும் பிரம்ம ரகஸ்யம் தெரியட்டும் என்றவர்... வைணவமும் தமிழும் மிக நெருக்கமானது... (சுஜாதா இதைப் பற்றி பல விஷயங்கள் எழுதியுள்ளார்)
இருப்பினும் தோழர் அருணன் கூறியது போல ” இத்தனை காலம் பேசாமல் இருந்து விட்டு தற்போது எழுத வேண்டியதில் சில காரணங்கள் இருக்கிறது...” என்றார்..
மிகச் சரி...அதுதான் யோசிக்க வேண்டிய விஷயமே தவிர மற்றபடி அவர் எதைப் பற்றி எழுதுவதற்கு தகுதி உடையவர்தான்... நாடகம் வந்த பிறகுதான் அதைப் பற்றி விமர்சனம் செய்ய முடியும்.......
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக