இது சினிமா விமர்சனம் இல்லை என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்...
1995 வாக்கில் பிரபல (?) தாதா தாவூத் இப்ராஹிம், ரர்ம் ஜெத்மலானியைத் தொடர்பு கொண்டு தான் மும்பை வெடிகுண்டு வழக்கில் சரணடைய விரும்புவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளையும் தெரிவிதததாகவும் சொன்னாராம்... அதாகப்பட்டது தன்னை வீட்டுக் காவில்தான் வைக்க வேண்டுமாம் வேறு எந்த THIRD DEGREE வழிமுறைகளையும் காவல்துறை கையாளக் கூடாது ஆகியவை. ஜெத்மலானியும் அப்போது ஆட்சியில் இருந்த சரத்பாவரிடம் தெரிவித்து விட்டதாகவும் கூறினார். அவரோ இந்த வழக்கு CBI வசம் இருப்பதால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டாராம்...
அது தற்போது மீண்டும் வெளியாகியிருக்கிறது... அதைப் பற்றி கேட்கச் சென்ற டிவி நிருபவரை சரத்பவார் “ நீ வீட்டுக்கு வா அப்பறம் பாககலாம்” என்று துரத்தி அடித்ததைக் காட்டினார்கள்... அவர் அதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார் என்பதெல்லாம் மிக மர்மமாகவே தெரிகிறது......... என்ன உள் குத்து என்றே தெரியவில்லை...
பிஜேபி பிரமுகர் நரசிம்மராவ் அதைப் பற்றிக் கூறும் போது ”அதெல்லாம் நடக்காது..... என்ன நடந்தது என்பதை வெளிக் கொண்டு வருவோம் ”, என்று முழங்கி சரியாக ஒரு நாள் ஆகியிருக்கும்..
தற்போது மத்திய அரசு கூறுகிறது ”தாவூத் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை.. அப்பறம்தான் அவரை இந்தியா கொண்டு வருவதைப் பற்றிப் பேச முடியும்” என்று...... சரத்பாவாரே தேவலாம் என்று தோன்றியது...
காங்., மற்றும் பிஜேபி ஒன்றுக்கொன்று மாற்று என்கிறார்கள்.. சற்று மாற்றிச் சொல்லவேண்டும்.. ஒன்றுக்கொன்று ஒற்றுமை என்று...(சில விஷயங்கள் தவிர்த்து)
====
பெருஞ்சீமான் சல்மான் கானுக்கு 5 வருட சிறை என்கிற தீர்ப்பு வந்திருக்கிறது... மது மயக்கத்தில் லைசென்ஸ் இல்லாமல் காரை பிளாட்பார வாசிகள் மேல் ஓட்டி பலரை படு காயப் படுத்தி ஒருவர் உயிரைப் பறித்ததற்கு...
இந்த வழக்கு 12 வருடமாக இழுபறியாக சென்று தற்போது இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.. சல்மான் இந்த வழக்கை நீர்த்துப் போக என்ன செய்தார் என்பது பற்றி ஊடகங்களில் வெளியாகி நாறிப் போய் இருக்கிறது...
எத்தனையோ கோடிகள் கொட்டத் தயாராகயிருந்தும்... நீதியை விலைக்கு வாங்க முடியவில்லை... நீதி வென்றுவிட்டது...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக