செவ்வாய், 12 மே, 2015

அந்த பத்து சதம்.......

தீர்ப்பின் மைய்யக்கருத்தே இதுதான்....
வருவாய்க்கு அதிகமாக ஜெயாவிற்கு ரூ.2,82,36,812 மதிப்புடைய சொத்துக்களே உள்ளன. வருவாய்க்கு அதிகமான சொத்துக்களின் சதவீதம் 8.12%. இது ஒப்பிடுகையில் மிகச்சிறிய தொகை என்று ஆவணங்களை ஆய்வு செய்ததில் கோர்ட் முடிவுக்கு வந்ததாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது...( ஒரு முதலமைச்சர் தன் 5 ஆண்டு கால ஆட்சியில் கிட்டதட்ட 2.82 கோடி அளவுக்கு தன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது எப்படி என்பது நீதிமன்றத்தின்  வரம்புக்கு அப்பாற்பட்டதா என்பதை விளக்கவில்லை)

அதற்கு நீதி மன்றம் காட்டும் ஆதாரம் ::::
கிருஷ்ணாநந்த் அக்னிஹோத்ரியின்  வழக்கு ஒன்று
ஆந்திர மாநில அரசு தனது சுற்றறிக்கை ஒன்றில் வருவாய்க்கு அதிகமாக 20% வரை சொத்துக்கள் வைத்திருப்பது அனுமதிக்கக் கூடியதே என்பது இர்ண்டாது  ஜெ க்கு சாதகமாவுள்ளது

ரொம்ப சரி...

இதே கருணை சிறையில் வாடும் மாருதி தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும்  மேலும்   வழக்காடினால்  கிடைத்திருக்கும்  தண்டனைக் காடிலும் அதிக ஆண்டுகள் சிறையில் வாடும் 1 லட்ததிற்க்கும் அதிகமான  UNDERTRAILS க்கு  நீதி கிடைக்கவேண்டும்



இதை அரசு செய்யுமா..?
                                                  =============
                                                 காமெடி டயம்

  நேற்று தந்தி டிவியில் பேசிய  பண்ருட்டி ராமச்சந்திரன் அதிமுக வுக்குப்  பேசினாரா இல்லை நடுநிலையாக பேசினாரா என்று பெரும் காமெடி.....

 கடந்த ஆறு மாதம் அரசு செயல்படவில்லை என்கிறார்...   10 சதம் வருமானம் அப்படித்தான் கூட குறைய வரும் என்கிறார் .. திமுக சார்பில் பேசிய அப்பாவு அந்த அக்ரி  கிருஷ்ணமூர்த்தி  மேட்டரே ஒரு  உள் குத்து  அது பண்ருட்டி சாருக்குத் தெரியும் என்ற  போது ,  பேசாமல் சிரிக்கிறார். 

அவர் அதிமுகதானே இருக்கிறார்..?

கருத்துகள் இல்லை :