திங்கள், 18 மே, 2015

புறம்போக்கும் பொது உடைமையும்...

பொது உடைமைதான் என்ன?“ என்பது பற்றி அரிச்சுவடி தெரியாதவர்கள் இந்தப் படத்தைப்  பார்த்ததால் நல்ல விறுவிறுப்பா ஜெயில் ப்ரேக் பத்தி சொல்லியிருக்காங்க....” என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள்... ஆனால் எனக்கு பொது உடைமை பற்றி  அரிச்சுவடி வரை தெரியும் என்பதால் அப்படி முடித்துக் கொள்ள விரும்பவில்லை..

முதலில் எனக்குத் தலைப்பு புரியவில்லை... பொதுஉடைமையை நக்கல் செய்வது போல அமைந்திருக்கிறது.. எல்லா புறம்போக்கு நிலமும் பொதுஉடைமைதான் ...
ஒரு வேளை அதுதான் தலைப்பா...?


போராளிகளின் திட்டம் தவிடு பொடியாகிறது..  அதனால் அவர் கடல்கடந்து போவ்தாக ஒரு காட்சி வருகிறது... இந்தியாவை விட்டே தப்பிக்கிறாரா...?
ஒருவேளை போராளிகள் வெறும் சாகசவாதிகள் என்கிறாரா...?

மெக்காலே என்கிற பாத்திரப் பெயர் புரிகிறது... ஆனால் அந்த மெக்காலே கல்வி கற்ற போலீஸ்காரன்தான் ஜெயிக்கிறான்.. அவன் திட்டம்தான் துல்லியமாக இருக்கிறது...
ஒருவேளை மெக்காலே கல்விதான் சிறந்தது என்கிறாரா ஜனநாதன்...?


மொத்தத்தில் விறுவிறுப்பான குழப்பம்தான்....


கருத்துகள் இல்லை :