வெள்ளி, 8 மே, 2015

இரு வேறு உலகத்து இயற்கை.....

அய்யன் வள்ளுவன் என்றோ எழுதினான் இந்தக்  குறளை... 
இரு வேறு உலகத்து இயற்கை. திரு வேறு 
தெள்ளிய ராதலும் வேறு

ஆனால் தற்போது எழுதினால் சற்று மாற்றி எழுதுவான்...  பணம் வேறு பணமில்லாதவர்கள் வேறு என்று... அவ்வளவுதான்

மீண்டும் சல்மான்கான்....

வெறுத்துப் போய்விட்டது... இதை எழுதாமலும் இருக்க முடியவில்லை.. சல்மான் ஒரு பாருக்குச் சென்றார்..செல்லட்டும்.. வயிறு முட்ட குடித்தார் குடிக்கட்டும்.. அவரிடம் பணமுள்ளது... கோடி கோடியாக சம்பாதிக்கிறார்.. சம்பாதிக்கட்டும்.. அதான் கொட்டிக் கொடுக்க ஆட்கள்  இருக்கிறார்கள்... 

ஆனால் அப்படியே குடித்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு ஏழை பராரியின்
மேல் ஏற்றி அவரைக் கொன்று ஒருவர் காலை ஒடித்து...  இதை எப்படி ஏற்க முடியும்?

சரி .. நம் நீதிமன்றம் 13 வருடங்கள் நீதியை வரவழைக்க எடுத்துக் கொண்டது..
காரணம்... இழுத்தடிப்பு... சாட்சிகள் மிரட்டல்.... அந்த பிளாட்பார வாசிகள் செத்ததே காரால் இல்லை... காரை கிரேன் எடுத்த போது அது மோதி இறந்தார்கள் என்று நீதிமன்றத்தை குழப்பி,   சல்மான் கோடிஸ்வரர்.. பல நற்காரியங்கள் புரிந்து நாட்டுக்கு நல்லது செய்தவர், அதனால் அவர் மீது கருணை காட்ட வேண்டும் என்று கெஞ்சி, இறுதியில் சல்மான் காரே ஓட்டவில்லை அவர்  டிரைவர்தான் ஓட்டினார் என்று டிரைவரை ஓத்துக் கொள்ள வைத்து...  என்ன செய்தும், ஒரு வழியாக அறிஞர் அண்ணா சொன்னதைப் போல இருட்டறையில் இருந்த நீதியை அந்த செசன்ஸ்  நீதியரசர் சரியாக வெளிக் கொணர்ந்து, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு சொல்ல, ஒரு வழியாக நீதி வென்றது என்றால்...

முதலில் 2 நாள்கள் ஜாமீன் வாங்கி ,  தற்போது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டை செய்ய... அதை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்றம் , தீர்ப்பு வரும்வரை தண்டனையை நிறுத்திவேறு வைத்திருக்கிறது...

குற்றவாளி என்று நிருபிக்க 13 வருடங்கள்.. ஆனால் ஜாமீன் கொடுக்க 2 நாட்கள் மட்டுமா...

சரி அடுத்த கதை...

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு போஸ்ட்மேன்... மணியார்டர் பணத்தைக் கையாடல் செய்துவிட்டாராம்........எத்தனை ரூபாய் தெரியுமா? ரூ 50 /-......  (?)  அவரை  நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்ததாம். அதை எதிர்த்து அவர் வழக்காட அந்த வழக்கு கிட்டத்தட்ட 350 முறைகள் விசாரணைக்கு வந்து முடிய கிட்டத்தட்ட 29 வருடங்கள் ஆகியதாம்.. இறுதியில் அவர் குற்றமற்றவர் என்றதாம் நீதிமன்றம்..

அதற்குள் அந்த ஆள் நொடிந்து போய்விட்டாராம்.. வழக்கு இருந்ததால் அவருக்கு வேறு எங்கும் வேலைக்கும் செல்ல முடியவில்லையாம்...

அய்யா...அறிஞர்களே, ஜனநாயகவாதிகளே...
ஏழைகளுக்கு எட்டாகனியாக நீதியை வைக்க அனுமதிக்காதீர்... ஜனநாயகத்துக்கு நாகரீகத்திற்கு பெரும் இழுக்கு....

நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்..  
வேறு என்னத்தைச் சொல்ல....?

கருத்துகள் இல்லை :