திங்கள், 19 அக்டோபர், 2015

எதுக்கு வம்பு....

ஒரு வழியாக நடிகர் சங்க அமர்க்களம் முடிந்து விட்டது.. விஷால் அணி வெற்றி... 

சந்தோஷம்.... 

ஊடகங்கள் நடந்து கொண்ட விதம் தொண்டையை கவ்விவிட்டது... 
எத்தனை பேட்டிகள்...

எத்தனை குற்றச் சாட்டுகள்...

இந்த உலகில் நடிகர் பிரச்சனைகள் தவிர வேறு எதுவும் இல்லையோ என்று தோன்ற வைத்து விட்டது...

ஒரு நாள் முழுதும் கவரேஜ்....

இந்த அணி வெற்றி பெற்றதால் இனி உலகமே மாறிவிட்டதோ என்கிற பிரமை... சுஜாதா பாணியில் சொல்ல வேண்டும் என்றால் ஊரையே அலம்பிவிட்டது போல் பிரமை...

சரி... நாமும் வாழ்த்தி வைப்போம்... ஏனெனில் நாளை அரசியல் தலைமையே இவர்களிலிடமிருந்துதான் வரலாம்... அதுதானே  தமிழ்நாட்டு நிலைமை...

எதுக்கு வம்பு....

கருத்துகள் இல்லை :