வட மாநில தேர்தல்கள் சற்றே ஆழமாகப் பார்த்தால் பெரிய வியப்பெல்லாம் இல்லை....
அதே சமயம் பாஜகவினர்கள் கூறும்படி அவர்களுடைய demonitizationக்கு ஆதரவான அலையாகவும் தெரியவில்லை,,
முதலில் உ.பியில் அந்த முலயம் குடும்பம் போட்டுக் கொண்ட குழாயடிச் சண்டை... அப்போதே இது வெறும் யாதவ் குடும்ப பிரச்சனையாக சந்தி சிரித்தது.. மக்கள் இவர்களை நம்பவில்லை .. அதனால் வேறு வழியில்லாமல் பாஜக என்று மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.. மாயாவதியின் வாக்கு எந்திரக் குற்றச்சாட்டு நமது புரட்சித் தலைவி பாணியில் சொல்லி முடித்துக் கொண்டார். ஆக இப்படித்தான் உ,பியைப் பார்க்க வேண்டும்..
உத்தரகாண்டில் ANTI INCUMBANCY என்பதுதான் காரணம் எனலாம்
பஞ்சாப்பில் காலூன்ற இயலவில்லை.. காரணம் அதன் தனித்துவம்..
கோவாவில் இழுபறி மற்றும் அதே ANTI INCUMBANCY பிரச்சனை
மணிப்பூரில் தனித்துவமான தன்மை..
அதனால் இது பாஜகவின் கொள்கைகான வெற்றி என்று எடுத்துக் கொள்ள முடியாததான்...
அதே சமயம் சில விஷயங்கள் சற்றே ஆச்சரியமும் அதிர்ச்சியும்
முதலில் உ,பியின் முஸ்லிம்களின் ஓட்டை பாஜக பெற்றது எப்படி என்பது... முழுக்க முழுக்க முஸ்லிம் மக்கள் ஜனநாயகத்தை விரும்புவதைத்தான் இது காட்டுகிறது..
மூன்றாவது.. வடிவேலை வைத்து மீம்ஸ் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது... அதாவது.. இந்த மாநிலங்களில் இன்னமும் கம்யூனிஸ்ட்டு கட்சியின் ஓட்டை எண்ணவே ஆரம்பிவில்லை என்று சிரிப்பாய்ச் சிரிக்கிறது..
இதிலிருந்து அரசியல் இயக்கங்கள் பாடம் கற்கவேண்டும்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக