கமல்ஹாசனின்
திடீர் பேயாட்டம்
காரணம் விளங்கவில்லைதான் ….
“நான்
ஹிந்தி எதிர்ப்பு காலத்திலே அரசியலுக்கு வந்து விட்டேன்…” என்பதும் ஜெ உயிருடன் இருந்த
போது ஏன் பேச வில்லை என்பதற்கு கமல் கூறும் விளக்கம் எல்லாம் காதில் பூ தான் ….
திரைப்படத்திலேயே
தான் இன்னமும் பல முயற்சிகள் செய்யவில்லை
என்கிறார் …. அதை ஏன் அம்போ
என்று விடவேண்டும் என்பது
புரியாத புதிர்தான்…. பலர்
பல காரணங்களை சொல்கிறார்கள்….. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு முன்
தான் வந்துவிட வேண்டும் என்பதுதான் காரணம் என்று
பல அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்….
இருக்கலாம் …..
ஆனால்
இந்த திடீர் பிரவேசம் என்பது
ஜல்லிக்கட்டால் வந்த வினை என்றே
கூறத்தோன்றுகிறது…. சில நேரத்தில்
ஒரு பெரிய வேலை நிறுத்தமோ பெரும் போராட்டமோ நடந்தால் அதன் உணர்ச்சி வேகத்தில் சில திடீர்
தலைவர்கள் தோன்றுவார்கள்….. அதை போல ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்…..
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அந்த இளைஞர்கள் அரசியல் சார்பற்றவராக காட்டிக்கொள்ள விரும்பினார்கள்….
மேலும் மத சாதி அடையாளத்தைக்கூட துறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை பார்க்கமுடிந்தது…..
ஸ்டாலின் கூட அங்கு வருவதை இளைஞர்கள் விரும்பவில்லை..
"இது APOLITICALதனம் .. எந்த திட்டம் கொள்கை இல்லை.." என்று வழமையான IDEALISTகள் கூக்குரலிட்டார்கள்
.. ஆனால் அப்படிதான் அது நடந்தது… ஆனால் இந்த லட்சியவாதிகள் நிகழ்ச்சி நிரலை இளைஞர்கள்
பின்பற்றவே இல்லை…… அவர்கள் தங்கள் குறிக்கோளுடன் இருந்தார்கள்.. இது சற்று வியப்பாகவே
இருந்தது உண்மைதான்..
இது
கமலை உசுப்பேற்றிருக்கலாம் …
சோவியத்
காலகட்டம் , இந்திய
சுதந்திர போராட்டகாலம் போன்றவை பல தலைவர்கள்
உருவாக காரணமாக இருந்தது…. அது ஒரு PHASE
….. IDEALIST PHASE….. ஆனால்
தற்போது தலைவர்கள் இல்லாமல் மக்கள் கூடுகிறார்கள் …..
எந்த தலைவரையும் நம்ப முடியவில்லை என்பது
ஒரு காரணம்…. அந்தளவு மக்கள் வெறுப்புற்று இருக்கிறார்கள்…
இதை கமல் பயன்படுத்த நினைக்கலாம் என்று தோன்றுகிறது…
ஜெயித்தலாலும்
ஜெயிக்கலாம்… ஜெ- யை மக்கள் ஏற்கவில்லையா அதை போல கமல்….
ஆண்டவா…
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக