சனி, 25 மே, 2013

நீரின்றி அமையாது உலகு…..

வள்ளுவன் இன்றிருந்தால் குறளை வேறு மாதிரிதான் பாடியிருப்பான்,,, அதாவது நன்நீரின்றி அமையாது உலகு என்று……
சமீபத்தில் ஏழுமலையான் தரிசனத்திற்குச் சென்றேன்…(குடும்பத்தினருக்காகதான் எல்லாம்)… இயன்ற வரை திருப்பதிக்கு வீட்டுத் தண்ணீர்தான் கொண்டு சென்றோம்.. இரண்டாவது நாள் தீர்ந்து விட்டது…  ஆந்திர வெயிலுக்கு கேட்க வேண்டுமா…?  கீழ் திருப்பதியில் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ 5க்கு விற்றுக் கொண்டிருந்தார் ஒரு கடைக்காரர்…  அட… என்று வாங்கிக் குடித்தேன்…  திருமலையிலும் அதேதான்….
அவ்வளவுதான்…
இரண்டு நாள்கள் படாத அவஸ்தை…
நீயா நானா கோபிநாத் கரடியாக கத்திக் கொண்டிருந்தார்… water borne disease  என்று… அதை பார்த்தபின்னரும் … சரி……
ஒரு வழியாக மருத்துவர் உதவியுடன்…. மீண்டும் இந்தப் ப்ளாக்கை சந்தோசமாக எழுதுகிறேன்….
ஆக அன்பார்ந்த மக்களே….
நன் நீரின்றி அமையக்கூடாது உலகு……


கருத்துகள் இல்லை :