வியாழன், 30 ஜூலை, 2015

அப்துல் கலாம்...

கடையடைப்பு செய்யச் சொல்லி எவரும் வற்புறுத்தவில்லை....ஆனால் பெரும்பான்மை கடைகள் மூடப்பட்டிருந்தன.....மக்கள் நடமாட்டம் நகரில் காணப் படவில்லை....ஒரு “பந்தைப்“ போல தெருக்கள் காட்சியளித்தது இன்று....

படித்தவர்கள் மட்டுமல்ல பாமரர்களும்கூட உண்மையில் வருந்திய ஒரே இழப்பு....

ஆட்டோ ஓட்டுனர்கள, கூலித் தொழிலாளிகள் முதல் மாணவர்கள் அரசு தனியார் ஊழியர்கள் அனைவரும் தன்னெழுச்சியாக எந்த அரசும் கேட்டுக் கொள்ளாமல்  அஞ்சலிக் கூட்டம்  செலுத்துகிறார்கள்... போஸ்டர் ஒட்டுகிறார்கள் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்கள்...

ஆக மொத்தம் மக்கள் ஒரு தன்னெழுச்சியாக நாடெங்கும் திரண்டார்கள்..
இந்த மகா மனிதனுக்கு... 

வரலாற்றில் மகாத்மா காந்திக்குப் பிறகு உண்மையில் மக்கள் அஞ்சலி நடந்தது இன்றுதான்...
Image result for abdul kalam stills

அப்துல் கலாம்.... வாழ்க நீ எம்மான்....
என்றும் உன் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும்....

2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

மகாத்மா கலாமின் கனவை நிறைவேற்றுவதே அஞ்சலியாகும்

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி அனானி அவர்களே....