அபூர்வ திறமை பெற்றவர்கள் உண்மையில் மிக எளிமையாக
innocent ஆக இருப்பார்கள் என்று எங்கோ படித்திருக்கிறேன்.
உண்மைதான் என்பதை விஜய் டிவி மூலம் நிருபணம் ஆகிக் கொண்டு
வருவதை உணர்ந்தேன்.. சமீபத்தில் சூப்பர் சிங்கர் என்கிற நிகழ்ச்சியில்
இரண்டு பிரபலங்கள் கலந்து கொண்டதைப் பார்க்க நேர்ந்தது..
ஒன்று பி சுசீலா
இன்னொருவர் எல் ஆர் ஈஸ்வரி
..
அவர்கள் பேசிய விதம் body language பிற கலைஞர்களை பாராட்டும்
விதம், தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்தது ஆகியவை
வைத்துப் பார்க்கும் போது “சே எத்தனை வெள்ளெந்தி மனிதர்களாக இருக்கிறார்கள்“ என்பது தெரிந்தது. அடித்துச் சொல்ல முடியும் ஒரு இம்மிளவுகூட கர்வமில்லாத வீண் வறட்டு கௌரவமில்லாத பேச்சு சிரிப்பு etc etc., சாதாரணமாக ப்ளாக் எழுதினாலே (என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) ஏதோ கொம்பு முளைத்தைப் போல எண்ணும் சாதாரண மனிதர்கள் முன்பாக இந்தப் பிறவி திறமையாளர்கள் ஒரு இமயமலையைப் போலத் தெரிகிறார்கள்.. மனிதன் என்பவன் இமயமாகலாம் என்றுதான் தோன்றியது.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக