மிகவும் வலியுடனும் வேதனையுடனும் இந்தப் பதிவை எழுத வேண்டியுள்ளது
சுஜாதா.. பெரும் பிம்பம்... என்னை பொருத்த வரை...
திருமதி சுஜாதா சொன்ன 2.6.13 தினகரன் வசந்தம் இதழில் வெளியான கருத்து என்னைப் போன்ற பல சுஜாதா வாசகர்களால் சீரணிக்க முடியாதபடிதான இருக்கும். அதே சமயம், சுஜாதாவை எதிர்ப்பவர்களுக்கு இது ஒரு இனிப்பான விசயமாக கருத வாய்ப்புள்ளது.
திருமதியாரின் கருத்து என்பது தேவயைற்ற சர்ச்சைதான்.. மேடையில் பேசுபவர்களுத் தெரியும். ஒருவர் கருத்தையோ அல்லது ஒருவரையோ தாக்கிப் பேசவேண்டும் என்றால், அவர் முன்பாகச் செய்யவேண்டும்.
இத்தனைக்கும் மிகவும் படித்த பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த திருமதியாருக்கு தெரியாத விசயமல்ல . அவர் எடுத்துச் சொன்னால் சுஜாதா காது கொடுத்து கேட்காதவர் என்பதை நம்பவும் இயலவில்லை. ஜப்பானிய ”ரோஷாமான்” படத்தில் சொல்வதைப் போல ஒரு விசயத்திற்கு இரண்டு கோணங்களில் பார்க்க முடியும் என்பதைப் போல.
எப்படிப் பார்த்தாலும் வேதனையாகத்தான் இருக்கிறது
அதே சமயம் வேறு சில நினைவுகளும் என்னுள் நிழலாடுகிறது.....ஷேக்ஸ்பியர் மனைவி அவர் எழுதிக் கொண்டிருக்கும் போது மசியை அவர் தலையில் கொட்டுவார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன் பாரதியின் செல்லம்மாவும் ஒருமுறை பாரதியின் பிரிவுக்குப் பின்னர் ஒரு வானொலி பேட்டியில் கூறியதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது
சில அறிஞர்கள் வாழ்க்கையில் சில சமயங்களில்....
என்ன செய்வது...
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக