இப்பொதெல்லாம் என்னைப் பார்ப்பவர்கள் கேட்பது ”இப்போ என்ன கதை எழுதிட்டு இருக்கே/கிங்க...” என்பதே..
நண்பர் எழுத்தாளர் சங்கர் அவர் தயாரிக்கும் இருவாட்சி தொகுப்பிற்குக் கதை கேட்டார். ”என்னப்பா..இது” என்கிற கதையை எழுதிக் கொடுத்தேன். அன்புடன் பிரசுரித்தார். நான் கடந்த 5 வருடங்களுக்குப் பிறகு எழுதிய ஒரு கதை அதுதான்.... 1995 முதல் 2000 வரையிலான ஒரு வித மன எழுச்சியில் எத்தனை கதைகள் எழுதினேன் என்பதே தெரியவில்லை.. உருப்படியாக 100 சிறுகதைகள் தேரும்.. ஒரு நாவல் ஒன்றும் எழுதினேன்.. 100ல் பெரும்பான்மை கதைகள் புத்தமாக வந்திருக்கிறது. 5 தொகுதிகளாக பிளஸ் ஒரு நாவல்.. ஏன் இப்பொதெல்லாம் சிறுகதைகள் அதிகமாக எழுதவில்லை என்ற கேள்விக்கான
விடை எனக்கே சரியாகத் தெரியவில்லை.. இயன்ற வரை கதைகளை டிஜிட்டல் வடிவத்தில் சேமிக்க ஆசைதான். சில கதைகளை http://badristory@blogspot.com க்குப் போய் படித்துப் பார்க்கவும். இது எனது அன்பான வேண்டுகோள். நான் இப்பொதெல்லாம் சிறுகதைகளை அதிகமாக எழுததாற்கு காரணங்களை அடுக்கிப் பார்க்கிறேன்.
(1) இதுவரை எழுதாத விஷயம் ஒன்றை எழுத முயல வேண்டும்
(2) அப்படி எழுதினாலும் ஏற்கனவே எழுதியதைப் போல இருப்பது
(3) “ஆமா.. மக்கள் அப்படி படிக்கிற மாதிரி தெரியல...டிரெண்ட் மாறிப் போனதைப் போல இருக்கே“
(4) உலகம் எலக்ட்ரானிக்ஸ் வழியாகத்தான் இயங்குது.. பத்திரிகைகளே தற்போது கதைகளை குறைத்திருப்பதாக
தோன்றுகிறது
(5) அபரிமிதமாக ஊடக (டிவி நெட்) வளர்ச்சி உ.ம் facebook twitter blogs போன்றவை
மேற்சொன்னவற்றில் அனைத்துக் காரணங்களும் எனது தற்போதைய நிலைக்குக் காரணமாக இருக்கலாம்.. சரி.. தற்போது எனது எழுத்தால் நான் பெற்ற பயன்களை பட்டியிடுகிறேன்....எத்தனை நண்பர்கள் எழுத்தாளர்கள் என் எழுத்தின் மூலம் கிடைத்தார்கள்.. மிக பிரம்மிப்பான விசயம் அதுதான்.. 96 அல்லது 97 அன்று எனது சிறுகதைகள் தினமணிக்கதிரில் அவ்வப்போது பிரசுரமாகும்.. கவிஞர் ராஜமார்த்தாண்டன் தொலைபேசியில் தினமணி அலுவலகத்திற்கு வரச் சொன்னார். பெரும் பரவசமாக இருந்தது.. இலக்கிய உலகில் கவிஞர் பெரும் புள்ளி.. அவர் என் கதைகள் பிடித்திருப்பதாகவும்
கதிரில் பிரசுரிக்கப் போவதாவும் நேரில் அலுவலகம் வரச் சொன்னபோது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நேரில் சந்தித்துப் பேசினேன். கனவில் நடப்பதைப் போன்று இருந்தது. கதிர் ஆசிரியர், இதயம் ஆசிரியர், புதிய பார்வை ஆசிரியர், இலக்கிய சிந்தனை பொறுப்பாளர்கள் ஞாநி பாஸ்கர்சக்தி பால்நிலவன், அமரர் ஜெயந்தன் என்று பெரும் பட்டியல் நீண்டு கொண்டிருக்கும் அந்த நாட்கள்
இனிமையானதுதான்.
2 கருத்துகள் :
வலைச்சரத்தில் தங்களின் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளேன். தங்கள் எழுத்துப் பணி பலரையும் சென்று அடையட்டும் என விழைகிறேன்.
வணக்கம்
நன்றி கபீர் அன்பன். தங்களின் மேலான முயற்சிகள் என்னைப் போன்றவர்களை ஊக்கப் படுத்துவதாக உணர்கிறேன்.
பத்ரிநாத்
கருத்துரையிடுக