வெள்ளி, 28 ஜூன், 2013

ஒரு பானை சோற்றிற்கு....

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவு பற்றிய செய்திகள் பெரும் அதிர்ச்சியையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துகிறது.. இதோ கீழே உள்ள படத்தில் இருக்கும் மூன்றோ (அ) இரண்டோ வயது குழந்தை...
ராணுவத்தினர் அந்தப் பேரழிவு பகுதியிலிருந்து மீட்டெடுத்தனர். அந்தக் குழந்தையின் இரண்டு கால்களும் ஃபிராக்சர். தாய் தந்தையர் காணவில்லை. மருத்துவமனையில் நிதம் குறிப்பாக இரவு நேரங்களில் ”அம்மா.. அம்மா” என்று அழும் காட்சிகளை  தொலைக் காட்சி செய்தியில் காட்டினார்கள். மனம் நொறுங்கிப் போனது.. அந்த நிருபர் சொன்ன வாக்கியம் ”இதைப் போல எத்தனையோ...” என்று சொல்லி நிறுத்தினார்.. எந்தக் கல் நெஞ்சையும் கரைய வைக்கும் காட்சிகள் அவை... 

இவற்றை எங்ஙனம் புரிந்து கொள்வது.. பழுத்த ஆத்திகனின் இறை நம்பிக்கையையும் தகர்க்க வைக்கும் நிகழ்வு இது...

 இந்த நேரங்களில் மனிதம் மட்டுமே உதவ முடியும்.. ஆம்.. அனுபம் கேர்.. இந்திப் பட உலகில் குணச்சித்திர நடிகர்.. அவர் பவுண்டேஷன் மூலம் அந்தக் குழந்தைக்கு உதவ முன் வந்திருக்கிறார்.. அந்தப் பெண் வளர்ந்து படித்து முடிக்கும் வரை அதற்கான செலவை ஏற்றுக் கொள்ள முன் வந்துள்ளார்.. வாழ்க அனுபம் கேர்..Mr Anupam ji.. you really care... 
இரு கரம் கூப்பி வணங்குகிறேன்... 

கருத்துகள் இல்லை :