வெள்ளி, 21 ஜூன், 2013

இமயத்தில் சுனாமி

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேய் மழை அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது.. ஹரித்வார் ரிஷிகேஷ், சமோலி, ருத்ரபிராயக், கேதார்நாத், பத்ரிநாத் என்று அடித்துத் துவைத்த மழை  அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு சாலைகள் உடைப்பு ஆறுகளில் வெள்ளம் எத்தனையோ உயிர்ப் பலிகள் என்பவை சாதாரணமாக  நம் கற்பனைக்கு எட்டாத பேரிடர் என்பது அங்கிருந்து வரும் செய்திகள் படங்கள்  வீடியோ கிளிப்பிங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடிகிறது.. என்றோ பார்த்த ஒரு படத்தில் வசனம் ஒன்று  ஞாபகத்திற்கு வருகிறது.. ”ஒரு சம்பவம் நடந்தால் எப்படி எப்போது என்று கேட்காதே ஏன் என்று கேள். அப்போதுதான் உன்னால் பிரச்சனையை கையாள முடியும்” என்று .. உண்மைதான்.. இந்த தேசிய  பேரிடர் (national disaster) ஏன்? என்ற கேள்வி தவர்க்க முடியாததாக உள்ளது.  நேற்று (20.6.13) times nowல் இரவு 9 மணிக்கு அர்னாப் கோஸ்வாமி அலறிக் கொண்டிருந்தார்..

சில ஆண்டுகளுக்கு முன்பு CAG ஒரு அறிக்கை கொடுத்திருந்தாராம்.. இமயத்தில் மடிப்புகளில் இருக்கும் இந்த ஊர்களில் பல இடங்களில் unathorized constructions அதிகமாக இருப்பதாகவும் அதைத் தடுக்க மாநில அரசுகள் முன் வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வறிக்கையில் பதிவாயிருக்கிறதாகவும்
படித்துக் காண்பித்தார்.  அந்த மாநிலங்களில் ஆண்ட காங்., பிஜேபி அரசுகள் அனைத்தும் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார். அவர் உபயோகித்த வார்த்தைகள் timber mafia unathorized constructions encroachment என்று அதற்குக் காரணம் அனைத்து கட்சியினரும்தான் என்று சாடிப் பேசினார். 

அவர் பேசியதிலிருந்து பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடிந்தது. அங்கு தொடர்ச்சியாக சுற்றுப் புறச் சூழல் ஆர்வலர்களின் குரல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது தெரிகிறது. சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் இவ்வித ஆபத்துக்களை சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்.  ஆனால் அங்கு மேற்படி வேலைகளில் பல கோடி ரூபாய் மூதலீடுகள் செய்யும்  பண முதலைகள் தொடர்ச்சியாக ஆட்சியாளர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தே தங்கள் தொழிலை நடத்தி வருகிறார்கள்.  வர்த்தகமே கிரிமினல்மயமானதிற்கான அடையாளம்தான் அது. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது.  எங்காவது சுற்றுப் புறச் சூழலியர்கள் சில விஷயங்களைச்  சொன்னார் என்றால் சூழலியிலைப்  பற்றி  சுட்டிக் காட்டினார்கள் என்றால், அவற்றை அசட்டை செய்யும்  மனப்பாங்கு பலருக்கு (என்னையும் சேர்த்துத்தான்)  உள்ளது. இவை உடனடியாகக் களையப் பட வேண்டும். அவர்கள் பேச்சுக்கு என்று மரியாதை வருகிறதோ அப்போதுதான்
இந்தப் புவியை காக்க முடியும். யாருக்கோ எங்கோ நடக்கிறது என்று நாம் வாளாகயிருக்கலாம்.. அந்தப் பேரிடரில் மாட்டிக் கொண்டு தவிக்கும் 399 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் (மற்றவர்களைப் பற்றி கவலையில்லை என்று சொல்லவில்லை அவர்களிடம் தமிழில் பேச முடியாது என்பதால்) குடும்பதினிரிடம் பேசிப் பாருங்கள். பிரச்சனை எந்த அளவு வீரியமிக்கது
என்பது புரியும்.





கருத்துகள் இல்லை :