டெல்லி மாணவி பாலியல் வண்கொடுமை மற்றும் படுகொலை செய்த மாபாவிகளுக்கு
தூக்கு….
சட்டத்தை பாராட்ட வேண்டும்.. மேல்முறையீடுகளில் எத்தனை வழக்குகள்எதிரிக்கு சாதாகமாகின்றன. தெரிந்த விஷயம்தான். வழமையாக மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள்…. தூக்கு
தண்டனையால் என்ன பயன் என்று பல புள்ளி விவரங்களைத்
தருகிறார்கள்.. அதைக் காணும் போது மனம் தடுமாறுகிறது… ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் பங்கேற்ற மனித உரிமை
ஆர்வலர் (வழக்கறிஞர்) கூறினார்….”புத்தர் காந்தி
பிறந்த மண் இது.. ” , என்று வாதிட்டார்… அதெல்லாம் சரிதான்… ஆனால்
• மன்னிப்பு வழங்கினால் மட்டும் இந்த மனித மிருகங்கள் திருந்திவிடுமா?
• நிலவும் முதலாளித்துவ அமைப்பில் வேலை நிறுத்தமே சட்ட விரோதம்
எனும் போது, இதைப் போன்ற அயோக்கியத்தனத்தை ஆளும் வர்க்கம் புத்த ஞான பார்வை பார்க்குமா…?
• வளர்ந்து வரும் நவ நாகரீக சமூகம் ஆண்களை மட்டுமன்றி பெண்களையும்
மேலும் உழைக்க பல விஷயங்களை, நவீனத்தைக் கற்றுத் தேற வலியுறுத்துகிறது.. இச்சூழலில்
பெண்களை வெளியே வந்துதான் தீர வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறார்கள். அவர்களின் மீதும் அவர்களின் உழைப்பு முன்னேற்றத்தின்
மீதும் பொறமை கொண்ட எதிர் பாலினம் அவர்களை முடக்க எண்ணுகிறது.. அதன் வெளிப்பாடுதான்
இவ்வித கேலி கிண்டல் அதிக பட்ச வன்முறை ஆகியவை.. இவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் புதைக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.. அதனால் இதனினும் கடுமையான
சட்டங்கள் தேவை..
ஆக மனித உரிமை ஆர்வலர்கள்
வாதத்தை இவ்வித மனித மிருகங்களின் விஷயத்தில் ஏற்ற என் மனம் மறுக்கிறது..
குடிபுறங் காத்துஓம்பிக் குற்றங்கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக