சனி, 7 செப்டம்பர், 2013

என்ன கொடுமை சரவணன்....

சில செய்திகள் நாட்டு நடப்புகள் எனக்குக் கோபம் சிரிப்பு ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை கலந்து கட்டித் தருகிறது..  நான் தெரிந்து கொண்ட அவைகள் சில
(1) நமது நாட்டில் வங்கிப் பணத்தை கடன் மூலமாக திருப்பி செலத்தாத சில தொழிலதிபர்கள்  பாக்கி வைத்திருக்கும் தொகை 5 லட்சம் கோடி என்று சிபிஐ அதிகாரி சின்கா  சமீபத்தில் தெரிவித்துள்ளார். அன்றாடம் நாளேடுகளில் பர்சனல் லோன் வீட்டுக் கடன் ஆகியவற்றை நிலுவை வைத்துள்ள சாமானிய நடுத்தர மக்களின் பெயர்களை பல பேப்பர்களில் கட்டம் போட்டு அந்தந்த வங்கிகள் வெளியிடுகின்றன.  மேற்படி வங்கிகளை நாமம் போட்ட முதலாளிகள் யார்  என்பதே தெரியாமல் போகிறது. மேல் நடவடிக்கைகள் என்ன எடுத்தார்கள் என்பதும் மர்மமாக  போகிறது.. ஒரு வேளை கோடிக் கணக்கில் ஏமாற்றினால் அது தவறுயில்லை லட்சக்கணக்கில் ஏமாற்றினால்தான் தவறு போலும்..  போரில் லட்சக்கணக்கான பேர்களை கொன்றால், அது போர்க் குற்றம்.  அதற்கு தண்டனை கிடையாது அதே போல் யாராவது ஒருவனை அடித்தால்  போதும் அது குற்றவழக்காகி விடுகிறதே அதைப் போல என்று நாம் மேற்படி செய்தியை நினைத்துக் கொள்ள வேண்டும் போலும்
(2) ஆசாராம் அல்லது அஸ்ராம் அல்லது அசரம் சாமியாரை ஒரு வழியாக கைது செய்து விட்டார்கள் அவரிடம் பல பரிசோதனை செய்தார்களாம் (potency test ) அத்துணைக்கும் சாமி ஒத்துழைத்தாராம்.. சந்தோசம்.. அப்படியே குற்றத்தை.....
(3) சீனாவிடம் ஒரு அங்குல நிலத்தைக் கூட நாம் இழக்க வில்லை என்கிறார் அமைச்சர் அந்தோணி. TIMESNOW தொலைக் காட்சியில் சீன எல்லையை ஒட்டிய அருணாச்சலபிரதேசத்தில் சீன சீருடையினர் அநியாயமாக எல்லைக் கடந்து ஓடுவதை காட்டினார்கள்.. அட தேவுடா...
(4) பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களைப் பார்த்தால் நமது நாடு பெண்களுக்கு பாதுகாப்பானதுதானா என்ற சந்தேகமே வந்து விடுகிறது
(5) சமீபத்தில் ஒரு செய்தி- தமிழ்நாட்டுக் கல்லூரி மாணவர்களுக்கு dress code தேவை என்கிற சட்டம் வருமாம்.. எந்தக் கோவில் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன். . இது தேவையற்றது என்று.. 

கருத்துகள் இல்லை :