சனி, 28 செப்டம்பர், 2013

விழா நாயகர்கள்

சமீபத்தில் சென்னையில் இந்திய சினிமா நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதைப் பற்றி பல செய்திகள் நாளேடுகளில் வார இதழ்களில் டிவி என்று பலரும் பல விசயங்களைச் சொல்லிவிட்டார்கள்.. உண்மைத் தமிழன் என்கிற சரவணன் நேரடியாக அந்த விழாவிற்குச் சென்று தன் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
பார்க்க http://www.truetamilan.com/2013/09/1.html

மேலும் கலைஞர் இதைப் பற்றிக் கூறும் போது "இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ரஜினி,கமல், இளையராஜா உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் கூப்பிட்டு அவமானப்படுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட  நிலையில்  நல்லவேளை என்னை கூப்பிடவில்லை, என் தன்மானம் காப்பாற்றப்பட்டது" என்று  கருத்து கூறியிருக்கிறார்,

இவையெல்லாம் நமக்குச் சொல்வது என்ன... திரையுலகில் சற்று வெளிச்சம் தன் மேல் பட்டவுடன்   கலைஞர்கள் உடனே செய்ய விரும்புவது அரசியல்..  மார்க்கெட் உள்ளவரை சினிமா.. பின்பு அரசியல் என்று தாவ எப்போதுமே தயாராக இருப்பார்கள்.. தமிழ் தெலுங்கு திரையுலகினர் அரசியலுக்கு வருவது மிக அதிகமாகத் தெரிகிறது. அரசியலிலும் தலைமை குணம் கொண்ட வழி நடத்திச் செல்லும தலைவர்கள் பற்றாகுறை வெற்றிடம் திகழ்கிறது.. அதனால் குறைந்த பட்சம் மக்களிடம் செல்வாக்குள்ள திரையுலகினர் அதுவும் ஹீரோக்களை அரசியலில் இறக்குமதி செய்யும் பாணி தமிழ்நாட்டில் இருக்கிறது.. ஏற்கனவே உள்ள அரசியலில் திரைப்பட பிண்ணனி உள்ளவர்கள்  இதை ஒரு தொழில(?) போட்டியாக நினைக்கிறார்கள் அதன் வெளிப்பாடுதான் இது என்று தோன்றுகிறது. 
அது சரி விஜய் ஒரு ஓரத்தில் நல்ல பிள்ளையாக உட்கார்ந்திருந்தாராம். பேச அழைத்த போது .. ”ஒரு நடிகை நாடாள முடியும் என்பதை அம்மா...”  என்று ஏதோ சொன்னாராம்.. 

கருத்துகள் இல்லை :