8/9/13 அன்று நீயா நானா நிகழ்ச்சியில் காதல் திருமணத்தைப்
பற்றி ஒரு விவாதம் என்பதால் அதைப் பார்க்க நேர்ந்தது.. தற்கால சூழலில் அது ஒரு முக்கியமான
விவாதப் பொருளாகி விட்டது. நிகழ்ச்சியில் பலர்
பேசியது ஏற்புடைத்தாக இல்லை. இருவர் தரப்பும்.... நம் நாட்டில் எந்த விஷயமும் சர்ச்சையாகவே
உள்ளது. மனுஷ்யபுத்திரன் இயக்குனர் கரு பழனியப்பன் இருவரும் முன்னர் ஏதோ பிரச்சனையில்
பிரச்சனையானதைப் (?) போல சண்டைப் போட்டுக் கொண்டார்கள்,
இவற்றுள் மணிகண்டன் நாலு வார்த்தை பேசினாலும் நச்சென்று பேசினார்,
அது தான் இந்த விவகாரத்தில் highlight…. அப்படி
என்ன மணிகண்டன் சொன்னார் என்று கேட்கிறீர்களா….? ” நமது நாட்டில் எந்த ஒரு பிரச்சனை
என்றாலும் அதைத் தீர்க்க எந்த ஒரு social institutions இல்லை … இது மிகப் பெரிய குறை…”
ஆம் அவர் சொன்னது எத்தனை அர்த்தபுஷ்டியான கருத்து. இஸ்லாத்தில்
அவர்கள் பிரச்சனைகளை ஜமாத் என்கிற அமைப்பு
தீர்க்க முயல்கிறது.. அதைப் போல இந்து அமைப்பில் ஏதும் இல்லை… குடும்பம்
என்கிற அமைப்புதான் அத்தனையையும் தீர்க்க முயலுகிறது… அதன் வரம்பு அதன் ஜனநாயகம் என்பதெல்லாம் சர்ச்சைக்குரியது… இதைப் பற்றிய ஒரு வெளிப்படையான விவாதம் தேவை…
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக