சனி, 10 மார்ச், 2018

விதியே .. விதியே…


அஸ்வினி பரணி  என்று ஏதோ பெயரில் உள்ள குழந்தைகள் காதலிக்கும் என்பதை இன்றய இளைஞர்கள் நினைப்பதே அருவருப்பான விஷயம்.. அதற்கு மேல் அந்தக் குழந்தைகள் எனக்குத் துரோகம் வேறு செய்துவிட்டதாகக் கூறுகிறான் அந்த மனநோயாளி…

தாலி வேறு கட்டாயமாக அந்தக் குழந்தைக்குக் கட்டியிருக்கிறான்.. அப்போதே இவன் மீது கிரிமினல் குற்றஞ்சாட்டி உள்ளே தள்ளியிருக்க வேண்டும்..

தொலைக்காட்சியில் விவாதத்தில்  ஒரு பெண்மணி சொல்கிறார்... பெண்கள் உடைகளில் கவனமாக இருக்க வேண்டுமாம்… அய்யா அதற்கு பதில் அனைத்து சிறுமிகளும் இளம் பெண்களும் படிக்கக் கூடாது வீட்டில் பூட்டிக் கிடக்க வேண்டும் என்று சொல்லிவிடாமா....?

இதற்குப் பதில்  இப்படிப்பட்ட மனநோய் இளைஞர்கள் வெளியில் நடமாடவே கூடாது என்று சட்டம் போடலாம் என்பேன்..

இந்த ஆண் கூட்டத்திற்கு எந்த மாதிரி கவுன்சலிங் கொடுக்கலாம் என்று அறிஞர்கள் யோசனை செய்து சொன்னால் அதனை அமலாக்கலாம்..

கருத்துகள் இல்லை :