ஸ்டெர்லைட் ஆலை இன்னொரு ஜல்லிக்கட்டு பிரச்சனையாகி விசுவரூபம் எடுத்துள்ளது பல
நாட்கள் புகைந்து கொண்டிருந்த பிரச்சனைதான் …
ஜெ-யின் 91-96 ஆட்சிக்காலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டு தொடங்கப்பட்ட நிறுவனம்
மக்கள் போராட்டத்தால் தடை பட்டு மீண்டும் கலைஞர் ஆட்சியில் பச்சைக் கொடி காட்டப்பட்டது
ஆலை சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்குகளின் விளைவாக அந்த ஆலை 2013ம் ஆண்டில் மூடப்பட்டது. மூடப்படுவதற்கு முன்பாக பல விபத்துக்களும்,
உயிரிழப்புகளும், ஆலையிலிருந்து வெளியேறிய வாயுக்களால் ஏற்பட்ட மூச்சுத்திணறலும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் கோபத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
நிலத்தடி நீர் பாதிக்கப்படுவது,
மண் வளம் பாதிக்கப்படுவது, வளி மண்டலம் மாசுபடுவது, காற்றுவளி மண்டலத்தில் ஆலை தூசுக்கள் பரவி நிற்பது இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய், வாழ்வாதார பாதிப்பு, கால்நடைகள் இறந்து போவது கொடுமைகள் அரங்கேறியுள்ளது…
மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் மூடும் உத்தரவை ரத்து செய்தாலும்,
அந்த ஆலையின் பல்வேறு அத்துமீறல்களை சுட்டிக்காட்டி ரூபாய் 100 கோடி அபராதம் விதித்து அந்த ஆலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய உத்தரவிட்டிருந்தது
இவ்வித
ஆலைகள் பொது மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து குறைத்து 25
கிலோமீட்டர்கள் தூரம் இருக்கவேண்டும்
என்கிற கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிட்டு 11 கிலோமீட்டர்கள் இன்னும் 10 கிலோமீட்டர்கள் என்றுதான் உள்ளது என்பது நிரூபண மாகியுள்ளது…
வேலை
வாய்ப்பை பாதிக்கிறது …..ஒவ்வொரு ஆலைகள் தொடங்கும்போது
பிரச்சனை செய்தால் வளர்ச்சி என்பது எப்படி சாத்தியம்
என்கிற கேள்விகள் சாதாரண கேள்விகள் என்று
புறம் தள்ள முடியாததுதான் …….
ஆனால்
இந்திய போன்ற ஊழல் மலிந்த
நாடுகளில், கோடிகளில் புரளும் வேதாந்தா போன்ற
பகாசுர நிறுவனங்கள் அதிகாரத்தையும் நீதியயையும்
எதையும் விலைக்கு வாங்க முடியும் என்கிற
போது, மக்களின்
இறுதி கொழுக்கொம்பு
என்பது போராட்டத்தை தவிர வேறு என்ன
என்பதையும் அறிவார்ந்தவர்கள் ஜனநாயக வாதிகள் நியாயஸ்தர்கள்
நினைத்து பார்க்க வேண்டும்…
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக