சென்ற பாகத்தில் சில கருத்துக்கள் பற்றிப்
பார்த்துவிடுவோம்:
“பிராமணர்கள் இப்போதுதான்
ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று திராடவிடர்கள் பிரச்சாரம் செய்தார்களா ‘’ என்ற
கேள்வியை சில அன்பர்கள் கேட்டார்கள்…
இது தற்போது செய்யப்பட்ட பிரச்சாரம் இல்லை..
மாறாக பல ஆண்டுகளாய் நடக்கும் விஷயம் ….
இது காலம் காலமாக திராவிட கட்சிகள் தமிழக பெரும்பகுதி B.C. உழைக்கும் மக்களுக்கு
கூறிவருவது… பெரும்பகுதி B.C. உழைக்கும் மக்களை ஆக்கிரமித்துள்ள
சிந்தனை…. இதுவே திராவிட கட்சிகளின் உயிர்நாடியாக
உள்ளது... தமிழகம் கேரளம் தென்னிந்தியாவில்
வாழும் உழைக்கும் மக்கள் கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் காட்டும் அதீத முனைப்பையே இது … வட இந்தியர்களை விட
….. யாரினும் மேலாக….
சரி இப்போது பிரதான கேள்விகளுக்கு
வருவோம்..
உ பி யில் பிஜேபி
50%சதம் மேல் வாங்கி (MAHA
GADBANTHAN) மகா கூட்டணியை வீழ்த்தியுள்ளது …இந்தச் செய்தி கூறுவது
என்ன ? எப்படி தமிழக மக்களை
திராவிடக்கட்சிகள் ஒரு கேள்விக்குள் வைத்திருந்தோ….
அதே போல் வேறு ஒரு கேள்வியை இந்தி பேசும் வட
நாட்டு மக்களிடம் பிஜேபி மற்றும் அதன்
துணை அமைப்புகள் தொடர்ச்சியாக வைத்தன…
நாம் ஹிந்து .. நமது கலையை கலாச்சாரத்தை
பண்பாட்டை சிறுபான்மை மதங்களும் அதனை ஆதரிக்கும் கட்சிகளும்
சீரழிக்கின்றன….. இந்த ஒரு பிரச்சாரம்
பல வழிகளில் வகைகளில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாய் மௌனமாக நடந்து வர வர அம்மக்கள் முழுமையாக
இந்த பிரச்சாரத்திற்குள் சென்று விட்டதையே பிஜேபி வெற்றி நமக்கு எடுத்துக்காட்டுகிறது…
இந்த சிந்தையிலிருந்து அம்மக்கள் பிஜேபி
நினைத்தாலும் வெளியே வருவார்களா என்பது தெரியவில்லை..
இது ஒரு புறம் இருக்க,
இந்தக்
குற்றச்சாட்டு உண்மையா என்பதை பார்க்கலாம்.. இதற்கு விடை ஆம் இல்லை என்று இரண்டும் சொல்ல வேண்டும்..
சாதாரண
கூலி வேலை செய்யும் வட இந்திய உதிரி
முஸ்லீம் மக்கள்தான் இவர்கள் மதத்தை அழிகிறார்களா
என்றால்.. கேலிக்கூத்து பெரும் கேலிக்கூத்து என்று
கத்த வேண்டும் போலுள்ளது….
அதே சமயம் உலகெங்கும்
வஹ்ஹாபியர்கள் அச்சுறுத்தல் இருக்கிறது இல்லையா என்றால், ஆமாம் இருக்கிறது என்ற உண்மையும்
சொல்லவேண்டும்.. இங்குதான் பிஜேபி அல்லாத கட்சிகள் தடுமாறுகின்றன… எங்கே இதை சொன்னால்
நமக்கு சிறுபான்மை ஓட்டுக்கள் சிதறிவிடுமோ என்று அஞ்சுகிறது… வடநாட்டு இந்து மனப்பான்மைதான் ராகுலை மண்ணைக்
கவ்வ வைத்தது… சிறுபான்மையினரை பகைக்கக்கூடாது
என்ற எண்ணம், வஹ்ஹாபிய அச்சுறுத்தலை சினிமாவாக
நிழலில் பேசிய கமல், தேர்தல் சமயத்தில் இந்து தீவிரவாதம் என நிஜத்தில் பேச வைத்தது..
ஒரு புறம் புல்வாமா தாக்குதல்
கொடுமை
நடந்து முடிந்த உடன் இலங்கையில்
ஈஸ்டர் பண்டிகையில் சர்ச்சில் நடந்த கொடுமையை எந்த கட்சியும் (பிஜேபி தவிர)
பேச மறுக்கின்றன
..
இந்தத்
தடுமாற்றம் இந்த கட்சிகளுக்கு தீரும் வரை
பிஜேபியின் காட்டில் மழைதான் …
அதை போல உழைக்கும் பிற்படுத்தப்பட்ட
தமிழர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வரை தாமரை
தமிழகத்தில் மலருவதும் கடினம்தான்..
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக