திங்கள், 24 ஜூன், 2013

எதுல முதல் பாருங்க....

மிக மிக வருத்தமான செய்திகளை பகிர கஷ்டமாகத்தான் இருக்கிறது.. சாலை விபத்துகளில் இந்தியாவில் முதல் இடத்தில் இருப்பது நமது தமிழகமாம்... இந்து நாளேட்டில் இன்று (24.6.13) படிக்க நேர்ந்தது.. என்ன காரணம் என்று பட்டிய்ல் இட்டால்....

1) அபரிமிதமான வாகனங்கள்  டூ மற்றும் ஃபோர் வீலர்களின் ஆக்கிரமிப்பு
2) நல்ல சாலைகள் குறைவு
3) அப்படி இருந்தாலும் பராமரிப்பு குறைவு
4) சாலைகள் போடும் போதும் ஊழல்கள்
5) சாலைவிதிகளை மதிக்காதது
6) சாலைவிதிகள் பற்றி அறிவு குறைபாடு
எல்லாவற்றும் மேலாக
7) மது....

இந்தப் பட்டியிலில் மிக பயங்கரமான முதன்மை குற்றவாளி (prime accused) மதுதான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் சட்டம் பாய வேண்டும்தான்.  ஆனால் நடைமுறையில் அது சரிப்பட்டு வருவதில்லை. காரணம். அந்த நபர்களின் செல்வாக்கு (அனைத்து விஷயங்களிலும்) அப்படி. சாலை விபத்தால் எத்தனை அங்க ஹீனங்கள் உயிரிழப்புகள்... கொடுமை...இதை ஒழிக்க வழி செய்ய வேண்டும்..

ஒரு டெயில் பீஸ்....

ஒரு முறை என் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். ஒரு போக்கு வரத்துக் காவலர் எங்களை தடுத்து நிறுத்தி லைசன்சை காட்டச் சொன்னார். என் நண்பர் பேப்பர்களை தேடிக் கொண்டே  சொன்னார் ”ஒழுங்கா பேப்பர் வச்சுருக்கறவங்களை  அவசரமா போறப்ப சும்மா சும்மா தொந்தரவு பண்ணி நிறுத்திறிங்க.,, அதோ தண்ணி ஏத்திக் கிட்டுப் போறனே மீன் பாடி வண்டி.. அவன் நம்பர் ப்ளேட்டையே போட்டுக்கறதில்லை.. அத கேட்டிங்களா..”என்றார்.. நான் சற்று கலவரமானேன்.. என்ன இந்த மனுஷன் தேவையில்லாமல் ஒரு காவலரிடம் வாக்குவாதம் செய்கிறார் என்று.. ஆனால் பக்கதிலிருந்த இன்னொரு போ. காவலர் ”அவரு சொல்றது எத்தன கரட்க்டு.. விடுப்பா.. சார் நீங்க போங்க சார்.. சாரி” என்று போகச் சொல்லிவிட்டார்.. எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.. ஆனால் அதே சமயம் இதைப் போன்ற அனுமதியில்லாமல் செல்லும் வாகனங்கள் படு வேகமாக சாலையில் செல்லும் போது எரிச்சலாக இருக்கும்...






2 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

உண்மைதான் நண்பரே.

ராஜி சொன்னது…

வெட்ககேடான விசயம்