குழப்புகிறார் அன்னா அசாரே...
முதலில் அன்னா அசாரே பிரகடனம் செய்தது லோக் பால் மசோதா வேண்டும் என்று. அதற்காகத்தான் பாடுபடுகிறேன் என்றார்.. பின்னர் அனைத்து கட்சிகளும் ஃபிராடுகள் என்றார்.. அர்விந்த கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்ததும அது தவறு என்றார்.
என் பெயரையும் சிம் கார்டுகளை வைத்துக் கொண்டு அர்விந்த் பெரும் பணம்
திரட்டுகிறார் அதுதான் தவறு என்றார்.
காங்கிரஸ் பிஜேபி போலத்தான் அர்விந்தின் புதிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி என்றார்.
இன்றய Times of India நாளேட்டில் (20/11/13) அர்விந்த் நல்ல மனிதர்.. ஆனால் அவர் ஆரம்பித்த கட்சி ஆம் ஆத்மியை நான் ஆதரிக்க மாட்டேன்.. வேண்டுமானாலும் கட்சியைக் கலைக்கட்டும்.. கலைத்துவிட்டு சுயேச்சையாக தேர்தலில் நிற்கட்டும்.. அப்போது அர்விந்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் என்கிறார்..
http://articles.timesofindia.indiatimes.com/2013-06-16/india/40006407_1_political-parties-anna-hazare-clean-image
ஓரே குழப்பமாக இருக்கிறது.. சுயேட்சையாக நின்றாலும் கட்சியாக நின்றாலும் அதே கெஜ்ரிவால்தானே..அரசிய்ல் கட்சியாக வந்தால் அயோக்கியர்களாகிவிடுவார்களாம்.......எனக்குப் புரியவில்லை.. யாராவது அன்னா என்னா சொல்ல வர்றார் என்பதைப் பற்றி விளக்குங்கள்..
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக