புதன், 6 நவம்பர், 2013

மங்கள்யான்

''மங்களகரமான மங்கள வாரத்தில் மங்கள்யான்
மங்கலான வான்வெளியில் மந்தகாசத்துடன்...."

சரி.. சரி.. கவிதையை நிறுத்திக் கொள்கிறேன்.. மங்கள்யான் போகட்டும்... மங்கள்யான் கடந்த கடிமான பாதை வான்வெளியில் மட்டுமல்ல.. பூவுலகிலும்தான் அதாகப்பட்டது.. முதலில் மங்கள்யான் மீதான விமர்சனங்கள்....
(1) தீபஓளித் திருநாளில் இந்த  costly வாண வேடிக்கை தேவையா...? 
(2) உலகில் பட்டினியால் வாடும் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தை என்கிற போது இது      எதற்காக?
(3) முன்னாள் ISRO பெரும்புள்ளி மாதவன் நாயரே இந்த திட்டத்தை குறைகூறிவிட்டாரே
(4) நமது பக்கத்து வீட்டு பெரும்புள்ளி நண்பர் சீனா வேறு ‘இதெல்லாம் ஏழை இந்தியாவுக்குத்      தேவையா‘ என்று கருத்துரைக்கிறது...

என்று ஏக களேபரம்.. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மங்கள்யான் விண்ணில்  பாய்ந்து விட்டது.. so far so good என்று சென்று கொண்டிருக்கிறது.. நாமும் வாழ்த்துவோம்..

நேற்று (5.11.13) timesnow விவாதத்தில் பலர் கலந்து கொண்டு பேசினார்கள்..  கிட்டத்தட்ட 450 கோடி செலவு செய்து செவ்வாய்கிரகத்திற்கு அப்படி அனுப்ப இப்போது என்ன தேவை வந்துவிட்டது என்கிற திசைவழியில் சிலர் பேட்டியளித்தனர்.. ஐன்ஸ்டீன் இப்படி நினைத்திருந்தால் விஞ்ஞான வளர்ச்சியே வந்திருக்காது எனவும்.. சரியாக பேசுங்கள் ஐன்ஸ்டீன் தன் சொந்த பணத்தைத்தான் செலவழித்தார் எனவும் வாதப்பிரதிவாதங்கள்....இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... 

நமது நாட்டில்  தேவையற்ற விசயத்திற்கு செலவு செய்தேயில்லையா என்பதை நாம் ஒவ்வொருவரும் நமது மனசாட்சியைத் தொட்டு சொல்லிப்பார்ப்போம் ... எத்தனை ஆடம்பர விழாக்கள் எத்தனை ஊழல்கள் எத்தனை விரயங்கள் நடத்தியிருக்கிறோம்... ஒரு விஞ்ஞான வளர்ச்சிக்காக நாட்டில் வரிப்பணத்தை செலவு செய்தால் அதை எத்தனை பேர் குறை சொன்னாலும் நான் சொல்வது  ஒரேயொரு வார்த்தைதான் ‘சாரி...‘ 

நாளை சந்ததிகள் நன்றாக இருக்க நாம் நமது குழந்தைகளை படிக்க வைக்கிறோம்.. வெறும் சம்பாதிக்கும் மிஷினை உருவாக்குவதற்கு மட்டுமல்ல.. ஒருவன் ஆளுமை வளர்ச்சிக்கும்  அந்தப் படிப்பு தேவை என்பதை பலர் கூறுவார்கள்.. அதைப் போன்ற ஒரு முயற்சிதான் இந்த மங்கள்யான்...  குறை சொல்லுங்கள்.. அதற்கு ஆயிரம் பிற விஷயங்கள் இருக்கின்றன.. தயவு செய்து கம்பீரமாக வான் வெளியில் விரையும்,  எதிர்கால சந்ததியினரின் ஆளுமையை வளர்க்க உதவும்  அந்த மங்களயானைத் தவிர என்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்..
=====================
சரி ஒரு டெயில் பீஸ் வேண்டாமா...?
அர்னாப் சொன்னார்.. ஒரு சமயம் 50 -60களில் ஆர் கே லக்ஷ்மண் ஒரு கார்ட்டுன் போட்டிருந்தாராம்.. அதில் அவருடைய வழமையான மிஸ்டர் பொதுஜனம் ஒட்டுத் தையல் போட்ட கோட்டை அணிந்து கொண்டு பாவமாக நிற்பாராம்.. பக்கதில் இருக்கும் இன்னொருவர், ஒரு   அமெரிக்கரைப் பார்த்துச்  சொல்வாராம்.. ’நீங்கள் சந்திரனுக்கு ஒரு மனிதனை அனுப்பனும்னு சொன்னிங்களே.. அந்த மனிதன் எதையும் தாங்கும் ஒருவராக இருக்கணும்னு சொன்னிங்ளே.. அதாவது அவருக்கு நல்ல தண்ணி கிடைக்கக்கூடாது நல்ல சாப்பாடு கிடைக்கக்கூடாது, நல்ல சுகாதாரம் கிடைக்ககூடாதுன்னு.. அப்படி பட்ட ஒருவர்தான் இவர்’ என்று அந்த மிஸ்டர் இந்திய பொது ஜனத்தைக் காட்டுவாராம்...

கருத்துகள் இல்லை :