இன்று நாளேட்டில் படித்த செய்தி ”சட்டென்று” அதிர்ச்சியை உருவாக்கியது
செய்தி இதுதான்.
எகிப்து நாட்டில் சர்வாதிகாரி முபாரக்கு எதிராக எகிப்திய மக்கள் கொதித்தெழுந்தார்கள்.. போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி வெற்றி பெற்று முஹமது மோர்சி தலைமையேற்றார்.. ஆனால் சொல்லியபடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை போலிருக்கிறது.. அதனால் அவரை எதிர்த்து கடந்த ஆண்டு மீண்டும் பிரச்சனை.. கிளர்ச்சி.. இதை எதிர்ப்பார்த்துக் காத்திருந்த எகிப்து இராணுவத்தினரின் ஒரு பகுதியினர் கிளர்ச்சியாளர்களோடு சேர்ந்துகொண்டனராம்..
மீண்டும் வன்முறை
இராணுவத்தினரும் மோர்சி ஆதரவாளர்களும் பதிலுக்கு பதில் தாக்கிக் கொண்டதில் இராணுவத்தினரின் வெடிகுண்டு தாக்குதலில் 1000 பேர் கொல்லப்பட பதிலுக்கு மோர்சி ஆதரவாளர்கள் காவல் நிலையத்தைத் தாக்க அதில் சில காவலர்கள் கொல்லப்பட்டதாகவும் அதையொட்டிய வழக்கில் எகிப்து நகர நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கில் 683 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி நேற்று (28.4.14) தீர்ப்பாயிருக்கிறது...
சரி.. செய்தி முடிந்தது..
நமக்கான கேள்வி
(1) இது வரை ஏதாவது ஒரு நாட்டில் ஒரு நீதிமன்றம் 683 பேர் அல்லது அதற்கு மேல் தூக்குத் தண்டனை பெற்றுள்ளார்களா...?
(2) மேல் முறையீடு உண்டா..? தெரியவில்லை
(3) ஒரே நேரத்தில் 683 பேருக்கு எப்படி தூக்கில் போடுவார்கள்...
அட தேவுடா...
8 கருத்துகள் :
அதிர்ச்சி தகவர்தான்...
இவ்வளவு பேர்களை தூக்கிலிட்டால் இன்னும் வன்முறைதான் வெடிக்கும்
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
வணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
வணக்கம் நண்பர்களே
உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்
பின்னூட்டமிட்டவர்களுக்கு கோடானு கோடி நன்றி...
பின்னூட்டமிட்டவர்களுக்கு கோடானு கோடி நன்றி...
பிரசாந்த் உங்கள் கருத்தை நான் ஏற்க வில்லை... அதனால் நீக்கப் பட்டிருக்கிறது... அன்பு சகோதுரத்துவம் ஆகியவை பல மதத் தலைவர்கள் (சில இந்துத் தலைவர்கள் உட்பட) போதிக்கிறார்கள்.. ஏராளமான ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கிறது.. நம்மாள் அள்ளவும் முடியாது.. அதை உள்வாங்கவும் முடியாது.. அதுதான் நம் அனைவரின் பிரச்சனையே...
நன்றி கார்த்திக் சேகர்.. நிச்சயமாக முயற்சிக்கிறேன்..
கருத்துரையிடுக